இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Wednesday, December 29, 2010

பெண்ணுக்குள் இருக்கும் கடவுள் (2812 2010)

பெண்கள் மனசுல என்ன இருக்கு?.. அவங்க என்ன விரும்பறாங்க.. இதெல்லாம் என்ன பி.எச்டி படிச்சுட்டு வந்தாலும் தெரிஞ்சுக்க முடியாது.. ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மனசுல ஆயிரம் இரகசியங்களையும் விருப்பங்களையும் குறைகளையும் மறைச்சு வைச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க.. மிகவும் சந்தோசமாக இருக்கறதால நினைச்சுட்டு இருக்கற பெண்ணுக்குக்கூட அவங்க ஆழ்மனசுல நிறைய விருப்பங்களும்.. தன்னுடைய இணையின் மீது குறைகளும் இருக்கத்தான் செய்கிறது..

ஒரு ஆண்.. பெண் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு.. அவங்களோட விருப்பங்களை நிறைவேற்ற ஆரம்பித்தால்.. அந்தப் பெண் பாக்கியசாலிதான்.. இங்க நான் சொல்றது அவங்களுக்கு நகை, புடவை வாங்கிக் கொடுப்பதைப் பற்றில்ல..

ஒரு ஆண்.. பெண்ணை விட உடல் அளவில் பலம் கொண்டவனாக இருந்தாலும்.. மனதளவில் பெண்களே மிகவும் பலம் கொண்டவங்களாக இருக்காங்க.. சிறுவயதில் இருந்தே.. உடலளவில் மிகுதியான வலிகளை அனுபவிச்சுட்டு இருக்கறதால்கூட மனதளவில் மிகுந்த தைரியத்தைக் கொண்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்..

உலகத்துல ஆண்களே.. பெண்களை ஆள்கிறவர்களாக நமக்குள்ள இல்லூசன் இருக்கு.. ஆனால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆயிட்டாலோ.. இல்ல காதலிக்க ஆரம்பிச்சிட்டாலோ.. முதல்ல பெண்தான் இதுக்குண்டான காரியங்கள்ல இறங்கறாங்க.. ஆணைத் தன் வசப்படுத்தி ஆளனும்ங்கறதுக்கு முதல் ஸ்டெப் என்னன்னா.. "ஏங்க நீங்க கரெக்டாக 9 மணிக்கு சாப்பிட்டுடுங்க, உங்க போன் காலை 6 மணிக்கு எதிர் பார்த்துட்டு இருப்பேங்க, 8 மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடுங்க" அப்படின்னு அன்பாகக் கட்டளையிடுவாங்க.. பெரும்பாலான ஆண்களுக்கு அந்த வார்த்தைகள் ஆரம்பத்துல அப்படியே உருகிப்போய்.. சொல்றதை அப்படியே செய்வாங்க.. உண்மையைச் சொல்லப்போனால்.. அந்தப் பெண் குறிப்பிட்ட நேரம் எப்போ வரும்னு.. 2 மணிநேரம் அல்லது 3 மணிநேரம்னு அவங்க வசதியைப் பொருத்து காத்திட்டு இருக்க ஆரம்பிச்சுடறாங்க.. ஆனால் அது ரியாலிட்டி இல்லவே..

தினமும் சொல்ற நேரத்தைக் கடைபிடிப்பது என்பது முடியாத காரியமாயிடுது.. ஒரு மாதமோ அல்லது அவர்களுக்கு முடியற வரைக்குமோ கேட்பாங்க.. அப்புறம்தான் இந்தப்பெண் தன்னை டாமினேட் பண்றாளோன்னு எண்ணம் வரத்தொடங்கியவுடன் முரண்டு பண்ண ஆரம்பிப்பாங்க.. உடனே பொண்ணுக்கு பொசசிவ்நெஸ் வந்திடும்.. நான் சொன்னதை முன்ன எல்லாம் கேட்டுட்டு இருந்தீங்க.. இப்ப என்ன வந்ததுன்னு சண்டை ஆரம்பிக்கும்..

இந்த அன்புக் கட்டளைகளை பெண்கள் இடும்போதே.. இல்ல அந்த நேரங்கள்ல எனக்கு வேற வேலை இருக்குன்னு ஆண் சொல்லும் போது.. பெண்ணோட முதல் முயற்சி தோல்வியடையுது.. ஆனாலும் மீண்டும் மீண்டும் அதற்குண்டான முயற்சி செய்துட்டேதான் இருப்பாங்க.. அவங்களோட எண்ணம் வெற்றியடையும் வரையோ.. அந்த ஆணிடம் இருந்து அடக்குமுறைகள் கையாளப்படும் வரையோ அந்த முயற்சி தொடர்ந்துட்டேதான் இருக்கும்.. பலர் தனது அன்பைக் கொண்டு இந்த முயற்சியில் ஜெயிச்சிடறாங்க.. சிலர் தோல்வியடையறாங்க..

ஆண் ஆரம்பித்துல இருந்தே தன்னுடைய ரியாலிட்டியை மீறி செயல்படாம இருந்தால்.. எந்த சண்டையும் வராதுன்னுதான் நினைக்கிறேன்.. இதுதான் நான்.. இப்படி நான் இருப்பேன்.. இப்படி உன்னிடம் எதிர்பார்க்கறேன்னு ஒருவருக்கு ஒருவர் பேசிக்கிட்டாங்கன்னா ஒரு புரிதல் வந்திடும்..

காதல் பண்றவங்ககிட்டயும்.. புதியதாக கல்யாணம் நிச்சயம் ஆனவங்ககிட்டயும்தான் இந்த ரியாலிட்டி பிரச்சினை அதிகமாக இருக்கு..

அவர்கள் காதல் மயக்கத்துல ஒருவருக்கொருவர்.. அப்படி இப்படின்னு பீலா விட்டுக்கறதும்.. நைட் முழுக்க தூங்காம பேசிக்கிட்டே இருக்கறதையும் பல இடங்கள்ல பார்க்க முடியுது.. ஆனால் இதே நிலைதான் எப்பவும் தொடருமா?.. கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் நிலைமை மாறுது.. வேறு வேறு இடங்களில் இருந்து கொண்டு காதல் பண்ணிட்டு இருந்தவங்க.. இப்போ பக்கம் பக்கம் ஒரே அறையில்.. கொஞ்ச நாட்கள்ல அவங்க முன்பு செய்துட்டு இருந்த விசயங்கள் போலியாகத் தோன்ற ஆரம்பிக்குது.. அதை ஆண் வெளிப்படையாகக் காட்டறான்.. பெண் அப்படிக்காட்டறது இல்ல.. அதனால் நீங்க முன்ன மாதிரி இல்ல.. அப்போ மட்டும் என்னை அப்படி..இப்படின்னு கொஞ்சத் தெரிஞ்சதான்னு சண்டை ஆரம்பிக்குது.. அதனால் காதல் பண்றவங்களும் சரி.. புதியதாக நிச்சயம் ஆனவங்களும் சரி ரியாலிட்டியை மனசுல வைச்சுக்கிட்டு பழகினாங்கன்னா இந்தப் பிரச்சினை கண்டிப்பாக ஏற்படாது.. மிகைப்படுத்தி நடந்து கொண்ட பிறகு.. உண்மையான நடவடிக்கையைக் காமிச்சாதான் ஒத்துவராது..


நான் தொடக்கத்தில் சொல்லியிருந்தது போல ஒரு பெண்.. ஆணை ஆளமுடியாம தோல்வியடைந்தால்.. அவர்களோட முயற்சி எப்பவும் நின்று போயிடறதில்ல.. அடுத்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்கிட்ட அந்த எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பிக்கறாங்க.. அப்படின்னா.. கொடுமைப்படுத்த ஆரம்பிக்கறாங்கன்னு சொல்ல வரல.. அன்பால் கட்டளையிட ஆரம்பிக்கறாங்க.. உதாரணத்துக்கு.. பார் உன் தகப்பன்தான் நான் சொல்றது எதையுமே கேக்கல.. நீயாவது கேள்டா அப்படின்னு சொல்ல ஆரம்பிப்பாங்க.. பிள்ளைக்கு அப்போது என்ன தோனும்.. தனது அப்பா மேல் நல்ல மரியாதையும் அன்பும் இருந்தாலும்.. அம்மா சொல்றதைத்தான் முதல்ல கேக்கனும்னு ஒரு விதை விழுந்திடும்..

பெண்ணின் எண்ணங்கள் ஆரோக்கியமாக இருக்கறவரை அந்தப் பெண்ணுக்கும் சரி.. அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் சரி.. நல்லதாக அமையும்.. பெண்ணின் எண்ணங்கள் தவறாக இருக்கும்போது.. இந்த முயற்சி வெற்றி அடைந்தாலும்.. தோல்வி அடைந்தாலும் கஷ்டம்தான்..

நான் மேல் சொன்ன விசயங்கள்ல.. ஆணோ பெண்ணோ.. யாராவது தன்னுடைய விருப்பங்களில் சிலவற்றைத் தன்னுடைய இணைக்காக விட்டுக் கொடுக்கறதுலதான் வெற்றிகரமான தாம்பத்தியம் அமையுது..

கடவுள்
உலகைப் படைத்தார்
பெண்
உயிர் கொடுத்தாள்
அம்மா
இவர்தான் என் கடவுள்!

டிஸ்கி: இது ரொம்ப சென்சிட்டிவான மேட்டர்.. இதுல நான் ஆணைதான் அல்லது பெண்தான் உயர்ந்தவங்கன்னு சொல்ல வரல.. இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட முதல் காரணம் என்னவாக இருக்கும்னு யோசிக்கும்போது இப்படியெல்லாம் தோனுச்சு.. சோ இதெல்லாம் கரெக்டாக இருந்தால்.. தப்பிச்சேன்.. தப்பாக இருந்தால் ரொம்பவும் திட்டீடாதீங்க.. நான் கொஞ்சம் பயந்த சுபாவம்.. :-)

அலுவலக அரசியல்கள்(2812 2010)

ஒரு அலுவலகத்தில் சாதாரண ஒரு பணியாளராக வேலைக்கு சேர்கிறோம்.. அங்கே மேலும் மேலும் நாம உயரனும்னா.. நிறைய விசயங்கள் செய்ய வேண்டியிருக்கு.. எனக்கு தெரிந்த சில விசயங்களைப் பற்றி இங்கே எழுதறேன்..

புதியதாக ஒரு அலுவலகத்தில் சேர்ந்தவுடன்.. கொடுக்கற வேலையை செய்தோமா.. போனோமான்னு இருந்தால்.. அது பத்துடன் பதினொன்று என்றாகிடும்.. அதனால நம்முடைய திறமையை அங்கே நிரூபிக்கனும்.. எப்படி நிரூபிக்கறது.. ஒரு 10 பேர் மட்டும் வேலை பார்க்கும் ஆபிஸ்ல நம்மை முன்னிலைப் படுத்தனும்னு நினைத்தால் ரொம்ப ஈசிங்க.. கொஞ்சம் ஹார்டு ஒர்க் பண்ணிக் காமித்து.. மற்றவர்களை விட அவுட்புட் அதிகமாகக் காமித்தாலே போதுமானது.. நிர்வாகத்தின் கவனத்திற்குப் போயிடுவோம்.. அதை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது நம்ம கையில்தான் இருக்கு..

நாம் வேலையில் சேர்ந்திருப்பது ஒரு பெரிய நிறுவனம்.. நம்முடைய பிராஜக்ட்லயே குறைந்தது.. 100 பேரூக்கு மேல் வேலை செய்யும் இடம்.. இங்கே எல்லாரையும் விட அதிக நேரம் வேலை பார்க்கிறேன்.. ஹார்டு ஒர்க்கை நிரூபிக்கிறேன்னு திட்டம் போட்டால் அது முடியாது.. எதை நிரூபிக்கறதாக இருந்தாலும்.. நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆபீஸ் நேரத்துலதான் செய்யனும்.. ஏன்னா.. பெரிய நிறுவனங்கள் எல்லாம் 24 மணிநேரமும் ஷிஃப்ட் பேசிஸ்ல இயங்கக் கூடியவை.. நம்முடைய வேலை நேரம் முடியறதுக்கு 5 நிமிடம் முன்னதாகவே சிஸ்டம் வேனும்னு அடுத்த ஷிஃப்டுக்கு லாகின் பண்றவங்க வந்து நின்னுடுவாங்க.. அதனால் இம்மாதிரியான நிறுவனங்களில் தனித்திறமைகளை முன்னிறுத்துவதன் மூலமாகவே பெயர் வாங்க முடியும்..

தனித்திறமைன்னா என்ன?.. அவங்க வேலை கொடுக்கறாங்க நாம செய்றோம்.. இதுல என்ன தனித்திறமையை வெளிக்காட்டறதுன்னு கேக்கறீங்க இல்லையா.. முதல் ஸ்டெப் நிறையப் பேசனும்.. மனசுல தோன்றதைப் பயப்படாமக் கேக்கனும்.. ஒரு ட்ரைனிங் வைக்கறாங்க அப்படின்னா.. அங்கே நமக்கு பல சந்தேகங்கள் உண்டாகலாம்.. சரி பக்கத்துல இருக்கறவன் புரிஞ்சுட்டிருப்பான்.. வெளியே போய் கேட்டுப்போன்னு திங்க் பண்ணாம.. உடனே நம்முடைய சந்தேகங்களைக் கேக்க ஆரம்பிக்கனும்.. கேள்வி கேக்க தயங்கறோம்னா.. ஒன்னு லேசினெஸ் காரணமாக இருக்கனும்.. அல்லது ஆங்கிலம் பிரச்சினையாக இருக்கலாம்.. இங்கே முதல் வகையை விட்டுடலாம்.. ரெண்டாவது கேட்டகரியை எடுத்துக்குவோம்..

தமிழ்நாட்டுல இருந்து வர்றவங்க.. பெரும்பாலும் தமிழ் மீடியம் படிச்சுட்டு வர்றதால நிறைய மதர்டங் இன்ஃபுலுயன்ஸோட வர்றோம்.. முதல்ல நிறையப் பேருக்கு பேச வர்றதே இல்ல.. அதனால் நாம் ஏதாவது கேள்வி கேட்டு.. அது தப்பாப் போயிட்டா எல்லாரும் சிரிப்பாங்க அப்படிங்கற பயத்துலயே அமைதியாய் உட்கார்ந்திருப்போம்.. அந்தப் பயத்தை விட்டுட்டு.. தப்பாகவே பேசுவோமே.. நாம் எதையோ கேக்க நினைக்கிறோம்.. இவனுக்கு ஆர்வம் இருக்குன்னாவது அவங்களுக்குத் தெரிய வரும்.. இந்த ஆர்வம் நம்மகிட்ட வந்துட்டாலே.. நாம என்ன கேக்க நினைச்சோம்னு யார்கிட்டயாவது கேட்டாவது தெரிஞ்சுக்குவோம்.. அடுத்த முறை நம் மனதில் தோன்றும் வேற கேள்வியை எப்படி கேக்கறதுன்னே தெரியலைன்னாலும் கேக்க தைரியம் வந்துடும்.. முதல்முறை சிரிச்சவங்க.. இந்தமுறை இவன் என்ன கேக்க நினைக்கறான்னு கூர்ந்து கவனிப்பாங்க..

நம்முடைய வேலையை நாம்.. ட்ரைய்னிங்லயே சிறப்பாக செய்யத் தவறி இருக்கலாம்.. புதிய வேலை.. ஒரு மாதிரி கண்ணைக் கட்டி விட்டமாதிரி ஃபீல் பண்ணுவோம்.. கவலைப் படாதீங்க.. வேலையிலயே நேரடியாகப் பிரச்சினையைப் ஃபேஸ் பண்ணிக்கலாம்.. ஏன்னா நிறையப் பேருக்கு.. க்ளாஸ் எடுத்தால் பிடிக்காது.. நேரடியாக வேலை செய்றதுதான் பிடிக்கும் (எனக்கு அதுதான் பிடிக்கும் :-) )..

நெக்ஸ்ட் ஏதாவது நம்முடைய டீமுக்காக ஏதாவது செய்யனும்.. ஏதாவதுன்னா?.. நீங்க வேலை செய்துட்டு இருக்கற பிராஜெக்ட் உங்களுக்கு நல்லாப் பழகினவுடன்.. அதுபற்றி ஒரு சப்பையாக அல்லது உண்மையிலயே அறிவாளியாக இருந்தால் அருமையாக ஒரு பிரசெண்டேசனையோ அல்லது ஒரு புதிய ஒர்க் ஸ்ட்ரக்சரையோ கிரியேட் பண்ணி.. உங்க டீம் மெம்பர்ஸுக்கு கொடுக்கக்கூடாது (;-)).. அது சப்பையாகவே இருந்தாலும் உங்க அணித்தலைவருக்குக் காட்டனும்.. சமயம் வரும்போதெல்லாம் நான் இந்த விசயத்தை செய்தேன்னு சொல்லிக் காட்டனும்.. இந்தமாதிரி எக்ஸ்ட்ரா ஆக்டீவிட்டீஸ் செய்யத் தெரியாதவங்க.. இதுக்கு காக்கா பிடிக்கறான்னு பேர் வைப்பாங்க.. உண்மையில் அவங்களுக்கு எல்லாம்.. என்னடா இவன் நம்மகூட சேர்ந்துட்டு ஆக்டிவா இருக்கானே.. நமக்கு ஒன்னும் தெரியலையேன்னு பொறாமையா இருக்கும்.. ஆனால் அதை அவங்க மனசுகூட ஏத்துக்காது..

சும்மா இந்த வேலையை செய்தால் மட்டும் நல்ல பேர் வாங்கிட முடியுமான்னு நீங்க திங்க் பண்ணலாம்.. இதுவே உங்களுக்குத் தொடக்கமாகவும்.. நல்ல திருப்புமுனையாகவும் அமையும்..

சின்னக் கம்பெனியோ.. பெரிய கம்பெனியோ.. நம்முடைய வேலை சிறப்பாக இருந்தும்.. அங்கீகாரம் இல்லைன்னா.. அங்கே இருக்கறது வேஸ்ட்.. சீக்கிரம் வேற பக்கம் ஜம்ப் ஆகறதுதான் நல்லது.. இல்லைன்னா.. சீக்கிரம் மனசுல ஒரு டிப்ரசன் உருவாகி நம்முடைய திறமைகள் பாழாயிடும்..

இவ்வளவு வேலைகளும் எதுக்கு செய்றோம்.. நமக்கு அங்கே வரும் முன்னேற்றதுக்காகத்தான் இல்லையா.. நமக்கும் அந்த முன்னேற்றம் வரும்.. அப்போ.. உங்க கூடவே டீம்ல இருந்த நண்பர்கள்.. இப்போ உங்களுக்கு கீழே வேலை செய்றமாதிரி நிலை வரும்.. இதற்கு முன்பு ஒரே அணியாக நிர்வாகத்தின் நிறை குறைகளை ஒரு பணியாளரின் பார்வையில் பார்த்துட்டு இருந்திருப்போம்.. நம்முடைய அணித்தலைவர்.. நமக்கு கொடுத்திருக்கற டார்கெட்டோட நியாயமின்மை எல்லாம் அப்போ பேசியிருப்போம்.. இப்போவும் அந்த நியாயம் நமக்குத் தெரியும்.. ஆனால் ஒரு அணித்தலைவராக நமக்குக் கொடுக்கப்பட்ட டார்கெட்.. குறிப்பிட்ட டயத்துல இவ்வளவு டார்கெட்டை முடிக்கனும்ங்கறதுதான்.. சோ ஆட்டோமேட்டிக்கா நம்முடைய டீமுக்கு பிரசர் கொடுக்க ஆரம்பிப்போம்..

ஏற்கனவே நம்முடைய பதவி உயர்வின் காரணமாக சிலர் விலகிப் போயிருப்பாங்க.. இப்போ இந்தப் பிரசர் கொடுக்க ஆரம்பித்தவுடன்.. மீதம் இருப்பவர்களும்.. பார் இவன்.. டீம் லீட் ஆனவுடன் தலைகணம் வந்துருச்சு.. அப்படின்னு பேச ஆரம்பிச்சுருப்பாங்க.. உண்மையில் நம்முடைய வேலைப்பளுவும்.. நம்முடைய டார்கெட்டும் அப்படி இருக்கும்.. நிர்வாகத்துக்கும்.. டீம் மெம்பர்ஸுக்கும் நல்லவிதமாக நடந்துக்கனும்னு நினைத்தால் நமக்கு ஆப்பு விழும்..

இங்கே உதாரணத்துக்கு சொல்லனும்னா.. பாதையில் நடக்கும் போது பாதசாரியாகவும்.. டூவிலர் ஓட்டும்போது அந்த மனநிலையிலும்.. ஃபோர் வீலர் ஓட்டும்போது அந்த மனநிலையில்தான் இருக்கனும்..

இந்தமாதிரி எல்லா விதமான அரசியல்களை சமாளிக்கனும்.. எங்கேயாவது சிலிப்பானால்.. பரமபதம் மாதிரிதான் திரும்பவும்.. பழைய இடத்துக்குத்தான் வருவோம்..

அதுபோல நம்முடைய நிறுவனத்தில் நம்முடைய பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்.. அதன் காரணமாக நிறுவனத்தில் சில சலுகைகள் நமக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.. ஆனால் நாம இல்லைனா.. இவங்க இந்த வேலையை செய்திருக்க முடியாதுன்னு நினைப்பை வளர்த்தால்.. நம் மனதில் அகங்காரம் வந்து சீக்கிரம் அது வெளிப்படும்.. அது வேண்டாம்.. நாராயண மூர்த்தி சொன்னமாதிரி நம்முடைய நிறுவனம் எப்போ நம்மை விரும்பறதை நிறுத்துவாங்கன்னு சொல்லவே முடியாது.. அதனால் நம்ம வேலையை என்றைக்குமே கரெக்டாக செய்வோம்.. :-)

டிஸ்கி 1: நண்பர்கள் இருவர் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது.. ரெண்டு பேரும் நண்பர்கள் என கம்பெனிக்குள்ள காட்டிக்காம இருந்தால்.. நம்மைப் பற்றி சக பணியாளர்கள் பேசும் விசயங்களையும்.. நமக்கு மேல இருக்கறவங்க பேசற விசயங்களையும் தெரிஞ்சுக்க முடியும்.. ட்ரை பண்ணிப் பாருங்க.. அனைத்தும் அரசியலே.. :-)

Monday, December 27, 2010

உங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு எது?(2712 2010)

ந்த பதிவின் நோக்கம், சைவ உணவின் முக்கியத்துவம் குறித்து தான். உலகம் முழுவதிலும் அசைவ உணவுக்கு மாற்றான இயக்கங்கள் எழுந்து வருகின்றன. காரணம்,மனித பரிணாம வளர்ச்சியில் அவனது இயற்கை உணவு என்பது தாவரங்கள் மட்டுமே. இறைச்சி என்பது விலங்கு உலகத்திற்கு படைக்கப்பட்டது. இதில் எது சரி. எது தவறு என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்கட்டும். சைவ உணவு மட்டுமே மனிதனுக்கு பொருந்திய உணவு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

காய்கறிகள் என்ற மரக்கறிகள் எளிதில் செரிக்க கூடியது. மனித உடலின் இயங்கு மண்டலத்திற்கு தேவையான சக்திகள் அனைத்தும் சைவ உணவில் அதிகமாகவே இருக்கின்றன. இவை மட்டுமே மனித உடலின் செரிமான மண்டலத்திற்கு பொருந்தி போக கூடியவையும் கூட. இருந்தாலும் சில நேரங்களில் மாமிச உணவும் பொருந்தி தான் போகிறது. ஆனால் அளவோடு உண்டால் அது மருந்தாக அமைகிறது.

சரி, எந்த இரத்த வகையினருக்கு எந்த மாதிரியான உணவு முறை பொருந்து என்று பார்க்கலாம். அதாவது, இரத்தத்தின் வகை என்பது கார, அமில நிலைப்பாடுகளை பொருத்து அமைகிறது. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஆண் தான் பொருத்தமாக இருக்கும் என்பார்களே..அது ஏன்? இரத்தத்தின் தன்மையை வைத்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

ஆக..இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். இந்த பதிவில் எந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் பொருந்தும் என்று பார்க்கலாம்.

'ஏ' பிரிவு இரத்த வகை
இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய்,நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். 'ஏ' இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் 'லெக்டின்' என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.

'பி' இரத்த வகை
மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கும். சோளம், கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.

'ஏ'பி' பிரிவு இரத்த வகை
இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய்யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.

'ஓ' இரத்த பிரிவு
இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ்,பயறு வகைகளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காணப்படுவதுண்டு. அது போல் முட்டைகோஸ்,காலிபிளவர்,கடல் உயிரினங்கள்,அயோடின் சேர்நத உப்பு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

இந்த விடயங்கள் ஒரு வேதியியல் மற்றும் சித்த மருத்துவம் தெரிந்த நண்பரின் ஆலோசனையில் பதியப்பட்டது. இங்கு குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் உங்களுக்கு ஒத்து வராத ஒன்றாக நீங்கள் அறிந்தால் இங்கு குறிப்பிடப்படும் தகவலும் பொருந்துவதாகும். மற்ற படி இந்த தகவல் பொதுவானது என்பதை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். நன்றி.

மருத்துவக் குறிப்புகள் (2712 2010)

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

--------------------------------------------------------------------------------
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம்

, சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

--------------------------------------------------------------------------------
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
--------------------------------------------------------------------------------
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
--------------------------------------------------------------------------------
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
--------------------------------------------------------------------------------
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
--------------------------------------------------------------------------------
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
--------------------------------------------------------------------------------
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
--------------------------------------------------------------------------------
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
--------------------------------------------------------------------------------
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
--------------------------------------------------------------------------------
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
--------------------------------------------------------------------------------
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்