இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Wednesday, January 11, 2012

நீ மாறுபட்டவள்தான்! (1101 2012)


கல்லைக்கூட
கனியவைத்தது
என்
கவிதை.
உன்னிடம் மட்டும்
அது
கல்லாய்ப் போனது.

என்
இதயத்தை
சுவாசித்திருக்கிறார்கள்
பலர்.
அதை
வாசிக்கக்கூட
முடியாமல் போனது
உன்னால்.

கருவண்டின்
கானத்தைக் கூட
ரசித்திருக்கிறார்கள்
அநேகம் பேர்.
உன்னால்
இந்த
குயில் பாட்டைக்கூட
சகிக்க முடியாமல் போனது.

நீர்மட்டம்
பார்த்து
ஆம்பல்கள் வளர்ந்தன.
நீ மட்டும்
ஆம்பலுக்காய்
நீர்மட்டத்தை மாற்றினாய்.

இந்த
நிலாவைப்பார்த்து
நின்று ரசித்தனர்
பலர்.
நீ - அதை
பிசாசு என்றாய்.

நீ
மாறுபட்டவள்தான்
பெண்களில்.
ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனாலும்,
ஒரே விடயத்தில்
நீயும்
பெண்தான்.
கற்களை தேடிக்கொண்டிருப்பதில்
வைரங்களை தவறிவிடுகிறாய்.