இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Tuesday, August 31, 2010

ஆரோக்கியம் உங்கள் விரல்களில்! (31/08/2010)

முத்ரா என்ற வடமொழிச் சொல்லிற்கு ‘குறியீட்டு வெளிப்பாடு’ என்று பொருள் கூறலாம். தமிழில் ‘முத்திரை’ என்று கூறுவர். பழங்கால இந்தியாவில் இக்குறியீடுகள் சிற்பங்கள் மூலமாகவும், நாட்டியத்தின் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டன. இன்னும் சொல்லப் போனால் வார்த்தைகளால் வெளியிட முடியாத உணர்வுகள் கூட முத்திரைகள் மூலம் வெளிப்பட்டன.

சொலவடை ஒன்றைக் கேட்டிருப்போம். ‘ஐந்து விரலும் ஒரே மாதிரி இருக்கா!’

இல்லைதான். வடிவத்திலும் சரி, அவற்றின் குணத்திலும் சரி.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஐந்திற்கும் தனித் தனி சிறப்புகள் இருக்கின்றன. கை விரல்கள் ஐந்தும் பஞ்சபூதங்களின் பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்றன.

கட்டை விரல் - நெருப்பு
ஆள்காட்டி விரல் - காற்று
நடுவிரல் - ஆகாயம்
மோதிர விரல் - நிலம்
சுண்டு விரல் - நீர்

சரி, எதற்கு இந்த பீடிகை தெரியுமா?

குறிப்பிட்ட விரல்களை இணைத்து செய்யும் முத்திரைகள் மூலம் உடல் ஆரோக்கியம் பெறலாம் என்பதனை விளக்கவே இந்தக் கட்டுரை. முத்திரைகள் மிகுந்த சக்தி பெற்றவை. எனவே, இவற்றைத் தக்க முறைப்படி பயிற்சி செய்து வந்தால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காண முடியும்.


நோயைப் போக்கி ஆரோக்கிய வாழ்விற்கு உதவும் சில முத்திரைகளைப் பற்றி பார்க்கலாம்.

முக்கியமான குறிப்பு :

1. ஞான முத்திரை

ஞானம் என்பது அறிவைக் குறிக்கும்.


செய்முறை:

உங்களுடைய ஆள்காட்டி விரலின் நுனி, கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நன்றாக விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்:

இம்முத்திரை அறிவு வளத்தை மேம்படுத்தும். கட்டை விரலின் நுனியில் உள்ள பல முக்கிய சுரப்பிகள், உங்கள் ஆள்காட்டி விரலால் அழுத்தி விடுவதனால் செயல்படத் தொடங்கி விடும்.

நேர அளவு:

இம்முத்திரையைச் செய்ய குறிப்பிட்ட நேர அளவு கிடையாது. இதனை நீங்கள் உட்கார்ந்திருக்கும்போதோ, நடக்கும்போதோ, படுத்திருக்கும்போதோஎப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், உங்கள் தேவைக்குத் தக்கவாறு செய்யலாம்.

நன்மைகள்:

உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
உங்கள் மூளையைக் கூர்மையாக்கும்.
உங்கள் கவனத்தை அதிகரிக்கும்.

இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

2. பிரித்வி முத்திரை

பிரித்வி என்பது பூமியைக் குறிக்கும்.



செய்முறை:

உங்களுடைய மோதிர விரலின் நுனியால், கட்டை விரலின் நுனியைத் தொடுங்கள். மற்ற மூன்று விரல்களும் விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்:

உடல் பலவீனத்தைக் குறைக்கும்.

நேர அளவு :

இதற்கும் குறிப்பிட்ட நேர அளவு கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நன்மைகள் :

உங்கள் தோலின் நிறத்தில் பளபளப்பையும் மினுமினுப்பையும் ஏற்படுத்தும்.
உங்கள் உடலை சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கச் செய்யும்.
நீங்கள் ஒல்லியாக இருந்தால் உங்கள் உடலின் எடை அதிகரிக்கச் செய்யும்.


3. வர்ணா முத்திரை

வர்ணன் என்பது நீரைக் குறிக்கும்



செய்முறை
உங்கள் சுண்டு விரலின் நுனி, கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்
உடலில் நீர்த்தன்மையைத் தக்க வைப்பதோடு உடலில் நீரின்மையால் ஏற்படும் நோய்களிலிருந்தும் காக்கும்.

நேர அளவு
இதற்கும் குறிப்பிட்ட நேர வரையறை கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நன்மைகள்
உங்கள் உடலினுள் சுத்தத்தை நிலை நிறுத்தச் செய்யும்
வாயுத் தொல்லையால் ஏற்படும் வலிகளைக் கட்டுப்படுத்தும்.
உங்கள் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் காக்கும்.

4. வாயு முத்திரை

வாயு என்பது காற்றைக் குறிக்கின்றது.



செய்முறை

உங்கள் ஆள்காட்டி விரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும். சிறப்பம்சம் உடலில் ஏற்படும் வாயு தொடர்பான நோய்களிலிருந்து விடுபட வைக்கின்றது.

நேர அளவு
இந்த முத்திரையை 45 நிமிடங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நோயின் வேகம் 12 முதல் 24 மணி நேரத்திற்குள் குறையும். சிறந்த நிவாரணம் பெற இதை இரண்டு மாதங்களுக்கு விடாமல் செய்து வரவும்.

நன்மைகள்
வாத நோய், மூட்டு வலி, கீல் வாதம் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்
எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம்.
எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும்.
உங்களை வாயு தொல்லையிலிருந்தும் விடுவிக்கும்.

5. சூன்ய முத்திரை :

சூன்யம் என்பது வெற்றிடத்தைக் குறிக்கும்.



செய்முறை
உங்கள் நடுவிரலை சுக்ர மேட்டில் வைத்து அதைக் கட்டை விரலால் அழுத்துங்கள். சிறப்பம்சம் உங்கள் உடம்பின் சோர்வை அது குறைக்கும்.

நேர அளவு
இந்த முத்திரையை 40 முதல் 60 நிமிடங்கள் செய்யலாம். தேவையென்றால் சோர்வு நீங்கும் வரை செய்யலாம்.

நன்மைகள்
உங்களுடைய காது வலியை 4 அல்லது 5 நிமிடங்களில் போக்கும்.
செவிடு மற்றும் புத்தி பேதலிப்பை நீக்கும் - பிறப்பிலிருந்து அல்லாமல் இடையில் ஏற்பட்டிருந்தால் மட்டுமே.

6. சூரிய முத்திரை



செய்முறை

உங்கள் மோதிர விரலை வளைத்து, கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொடுமாறு கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்
உடலில் உள்ள தைராய்டு சுரப்பியின் மையப்பகுதியை செயல்படுத்தச் செய்கிறது.

நேர அளவு
தினமும் 5 முதல் 15 நிமிடங்கள் வரை பயிற்சி செய்ய வேண்டும்.

நன்மைகள்
உடலின் கொழுப்பைக் குறைத்து உடல் பருமனைக் குறைக்கச் செய்யும். படபடப்பைக் குறைக்கும் அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.


7. பிராண முத்திரை

பிராணன் என்பது உயிரைக் குறிக்கும்.

Mudra

செய்முறை


உங்கள் மோதிர விரலையும் சுண்டு விரலையும் வளைத்து அதன் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொடவேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நேராக விரிந்து இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்

உயிர்ச் சக்தியை அதிகரித்து உடல் பலவீனத்தைக் குறைக்கும். இரத்தக் குழாயில் உள்ள இறுக்கத்தை நீக்கும்.

நேர அளவு

இம்முத்திரையைச் செய்ய குறிப்பிட்ட கால அளவு கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நன்மைகள்

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தும்.
கண்கள் தொடர்பான நோய்களை நீக்கும்.
மனச்சோர்வையும், உடலின் வைட்டமின் குறைபாடுகளையும் நீக்கும்.

8. அபனா முத்திரை

அபனா என்பது செரிமானத்தைக் குறிக்கும்

Mudra

செய்முறை

உங்களுடைய நடுவிரல் மற்றும் மோதிர விரலின் நுனி, கட்டைவிரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற இரண்டு விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்

இம்முத்திரை, கழிவு மண்டலத்தை சீரமைப்பதால் இது உடல் நலம் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

நேர அளவு

தினமும் 45 நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். அதிகமாகச் செய்தாலும் பயன்தான்!

நன்மைகள்

உடலின் கழிவுப்பொருட்களை வெளியேற்ற உதவும்.
நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.
மூலம், மலச்சிக்கல் போன்றவற்றைக் குணப்படுத்தும்

9. அபனவாயு முத்திரை

இது இதயத்தைக் குறிக்கின்றது.

Mudra

செய்முறை

உங்கள் நடு மற்றும் மோதிர விரல்களின் நுனி, கட்டை விரலின் நுனியைத் தொடுவதோடு ஆள்காட்டி விரலின் நுனி, கட்டைவிரலின் அடிப்பகுதியைத் தொட வேண்டும். சுண்டு விரல் விரிந்து நேராக இருக்க வேண்டும்

சிறப்பம்சம்

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம். உடலில் ஏற்படும் வாயுவையும் கட்டுப்படுத்தும்.

நேர அளவு

உங்களுக்கு எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை செய்யலாம். இதய நோயாளிகளும், இரத்தக் கொதிப்பு நோயாளிகளும், இதனை தினசரி 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். முடிந்தால் ஒரு நாளைக்கு இரண்டு வேளை செய்யலாம்.

நன்மைகள்

இதயத்திற்கு வலுவை ஏற்படுத்தி இதயத் துடிப்பைச் சீர்ப்படுத்தும். கழிவுமண்டலத்தைக் காக்கும். வாயுத் தொல்லையை சீர்படுத்தும்.

10. லிங்க முத்திரை

Mudra

செய்முறை

உங்கள் இரண்டு கை விரல்கள் அனைத்தையும் கோர்த்துக் கொள்ளுங்கள். கோர்த்திருக்கும் வலக்கை ஆள்காட்டி விரல் நுனியால், அதே கையின் கட்டைவிரல் நுனியைத் தொடவேண்டும். இப்போது அந்த இரு விரல்களின் நடுவில் இடக்கை கட்டை விரல் இருப்பதைப் பார்ப்பீர்கள். அக்கட்டை விரலை நேராக வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நடுவில் நிற்கும் இடக்கை கட்டை விரலுக்கு வலக்கை விரல்கள் இரண்டும் இணைந்து மாலை போல இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்

உடலில் சூட்டை ஏற்படுத்தும். எனவே, இதைச் செய்யும்போது மோர், நெய், தண்ணீர் இவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நேர அளவு

உங்கள் தேவைக்கேற்ப செய்யுங்கள். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இதை அதிகமாகப் பயிற்சி செய்தால் உடலின் சூடு அதிகரிக்கும். குளிர்காலத்திலும் வியர்வையை ஏற்படுத்தும்.

நன்மைகள்

மார்பு சளித்தொல்லையை நீக்கி விடும்.
நுரையீரலுக்கு வலிமை ஊட்டும்.
சளி, இருமல்,கபம் போன்றவற்றை சீர் செய்யும்.
உடலுக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தும்.

எளிமையாக கைவிரல்களால் போடப்படும் முத்திரைகளால் இத்தனை பயன்களா.. என ஆச்சரியமாக இருக்கிறதா? செயல்படுத்திப் பாருங்கள்; பயன்களை அனுபவத்தில் உணர்வீர்கள்.

Monday, August 30, 2010

சென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வை.... (30/08/2010)


எல்லா தமிழ் படத்திலும்... வில்லன் அனேகமாக கதாநாயகியை கடத்தி வந்து வைத்து இருக்கும் இடமும்.. அதிக சண்டைகாட்சிகள் எடுத்த இடமும் இந்த இடம்தான்... ஆனால் இந்த இடம் அடைந்து இருக்கு மாற்றம் என்பது கனவில் நினைத்து கூட பார்க்கமுடியாத மாற்றம்....

மால் மூன்று மாடிகளுடன் பல எக்கரில் பறந்து விரிந்து கிடக்கின்றது.. பெங்களுர் போரமை பார்த்தவர்களுக்கு, இந்த மால் பெரிய ஆச்சர்யத்தை உண்டு செய்யாது... காரணம் ஏறக்குறைய அதே போல் இருக்கின்றது...... பறந்து விரிந்த பார்க்கிங் ஏரியா...பேஸ்மென்ட்டில் மூன்று அடுக்கு பார்க்கிங்....

உள்ளே நுழைந்ததும் கடுமையான குளிர் வாட்டி வதைக்கும்.... அந்த அளவுக்கு ஏசி போட்டு இருப்பார்கள்.... எல்லோரையும் செக் செய்துதான்.. உள்ளே அனுப்புவார்கள்...




இருப்பதிலேயே பெரிய கடை லைப் ஸ்டைல் கடைதான் இரண்டு தளத்தை வாடகைக்கு எடுத்து இருக்கின்றார்கள்... அவர்கள் கடையில் மினி எக்சலேட்டர் வைத்து இருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.... உள்ளே எல்லா பொருட்களும், யானைவிலை குதிரை விலை. எல்லா இடத்திலும் மாடல் பொம்மைகள் ஸ்டைலாக உட்கார வைத்து இருந்தார்கள்...




டாய்லட் ரூம் மிக நேர்த்தியாக விசாலமாக கட்டி இருக்கின்றார்கள்...எதாவது விபத்து என்றால் அவசரகால வழி பெரியதாகவே இருக்கின்றது.. ஸ்கைமால் போல் எல்லாவற்றையும் குறுக்கி வைக்கவில்லை.... இரண்டாவது இவர்களுக்கு கடலும் காவேரியும் போல் இடம் இருப்பதால் எல்லாவற்றையும் மிக பெரிதாக கட்டி இருக்கின்றார்கள்...நிறைய இடங்களில் இறங்கி ஏற லிப்டு எக்ஸ்லேட்டர்கள் வைத்து இருக்கின்றார்கள்.....
(மாலில் இருக்கும் அந்த இரண்டு லிப்ட்கள்..)

இந்த மாலில் லிப்ட் டிராண்ஸ்பரண்டாக இருக்கின்றது... கண்ணாடியில் செய்து வைத்து இருப்பதால் அதில் எத்தனை பேர் போகின்றார்கள்... என்பதை எந்த தளத்தில் இருந்தும் பார்த்துக்கொள்ளலாம்...






எல்லாவற்றையும் விட 3ம் தளத்தில் இருக்கும்... குழந்தைகளுக்கான விளையாட்டு மையம் இருக்கின்றது... அந்த இடம் போகும் அத்தனை பேருக்கும் நிச்சயம் மிக்க மகிழ்ச்சியை கொடுக்கும்....குட்டி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடும் அந்த இடம் நிச்சயம் மகிழ்வை கொடுக்கும்....

(குழந்தைகளின் மகிழ்ச்சி)
சின்ன பிள்ளைகள் கார் மற்றும் பைக் வீடியோ கேம் விளையாடுகின்றார்கள்...டேஷிங் கார் இருக்கின்றது... அதை விட ஒரு ரவுண்டாக ஒரு சமாச்சாரம் இருக்கின்றது அதில் ஏறி உட்கார்ந்ததும் ஆட ஆரம்பிக்கின்றது சாப்பிட் சாப்பாட்டை வாந்தியாக எடுக்கும் வரை ஆட்டுகின்றார்கள்...அதிலும் கொஞ்சம் அழகான இளம் பெண்கள் ஏறிவிட்டால் இன்னும் கொஞ்ச நேரம் அதிகம் ஆடுகின்றது...

(பால் பொந்தில் போடும் விளையாட்டு...)




ஒரு பெரிய புட் கோர்ட் இருக்கின்றது சென்னையில் இருக்கும் பிரபல உணவு கடைகளை அங்கே கடை பரப்பி வைத்துக்கொண்டு இருக்கின்றன...மொத்தமாக ஒரு இடத்தில் 500 அல்லது ஆயிரம் பணம் கட்டிவிட்டால் ஒரு கார்டு கொடுக்கின்றார்கள்.. அதை வைத்து தேய்க்க தேய்க்க பணம் சாப்பிடும்பொருள் கொடுக்கின்றார்கள்... ஹாட்சிப்சில் மினி காப்பிக்கு ஒரு கப் வைத்து இருப்பார்கள்...அந்த கப்பு போல் ஒரு கப்பில் இரண்டு சின்ன கரண்டி ஜஸ்கிரீம் சொரண்டி வைத்து விட்டு50 ரூபாய் என்று சொல்வார்கள்..

அதாவது பாக்கெட்டில் இருந்து காசு எடுத்து கொடுக்கும் போதுதான்... ஐயோ
இவ்வளவு பணமா??? என்ற எண்ணம் தோன்றும்... ஆனால் முன்னையே பணம் கட்டிவிட்டால் அந்த எண்ணம் தோன்றாது அல்லவா அதுக்குத்தான்.. முன்னையே பணம் கட்ட சொல்கின்றார்கள்..இதே டெக்னிக்தான்.. அந்த கேம் சோனிலும் நடக்கின்றது....

எல்லோரும் சாப்பிடுவதை பார்க்கும் போது அவர்கள் வீட்டில் அடுப்பு பற்ற வைத்து வெகு நாள் ஆனது போல் சாப்பிடுகின்றார்கள்...நிறைய பெண்கள்தன் நண்பர்களுடன் வந்து சாப்பிட்டு சிரித்து ,உதடு துடைத்து செல்கின்றார்கள்... காதலன்கள் பர்ஸ் கிழியும் இடத்தில் இந்த இடமும் ஒன்று....

மேலே சத்தியம் தியேட்டரின் எஸ்கேப்பில் பாரினில் இருப்பது போல் அந்த டிக்கெட் கொடுக்கும் இடத்தை செட் செய்து வைத்து இருக்கின்றார்கள்....
(மூன்றாம் மாடியில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு ஒரு எரியல் ஷாட்)
மாலில் பார்க்கிங் பைசாவில் நம்மை நிறைய கொள்ளை அடிக்கின்றார்கள்...டைம் பாஸ் செய்ய ஏற்ற இடம்தான்.... ஆனால் எல்லாம் அதிக விலை.

இன்னும் மால் முழுமை அடையவில்லை.. நிறைய வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது...காதலர்களுக்கு நகரின் மத்தியில் ஒரு இடம் கிடைத்து இருக்கின்றது இளைப்பாற.......

நடுத்தர குடும்பம் உள்ளே போய் சுற்றி பார்க்கலாம் ஆனால் எதையும் வாங்க முடியாது... அப்படி வாங்க வேண்டும் என்றால் நிறைய யோசிக்க வேண்டும்...

காதலை, காதலியை இழந்தவன்........ (30/08/2010)

யூத்புல் விகடனின் காதலர் தின ஸ்பெஷலில் வந்த படைப்பு

"என்னிலும் சிறந்த துணையை அடைந்தால் அன்பே... நீ என்னை மறப்பாய்"... "என்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால் அன்பே... நீ என்னை நினைப்பாய்"... காதலையும், வாழ்க்கையையும், மனித உள்ளங்களையும், அதன் தேடுதலையும், ஆசாபாசங்களையும் முழுமையாக உணர்ந்த ஒரு மனிதனின் யதார்த்த கவிதை இது.


ஆனால் வாழ்க்கை பிடிபடாத காலத்தில், காதல் தான் பிரதானம் என்று நினைத்து வாழ்ந்த காலத்தில்... காதலுக்கு இந்த கவிதை அவமானம் செய்வதாய் தோன்றியது. மேலும் இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் பட்டது. காதல் என்பது இவ்வளவு தானா என்ன. காதல் எவ்வளவு உயர்வானது.


மனைவிக்காக காதலை மறக்க முடியுமா? கவிதையா இது... பிதற்றல் என்றே தோன்றியது. ஆனால் அதே தான் இன்று எனக்கும் கவிதையாக வந்துள்ளது. இப்படி "உன்னிலும் சிறந்த துணையை அடைந்தால்- உன்னை மறக்கக்கூடும்... உன்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால்- உன்னை நினைக்கக் கூடும்". உலகிலே எல்லாமே நீர்த்து போக கூடியவையே. விதிவிலக்காகுமா...காதல் மட்டும். மனித வாழ்வின் பெரும்பாலான அம்சங்கள் சுயநலத்தின் அடிப்படையில் தான் வருபவை... உற்று நோக்கின் காதல் கூட அப்படித்தான் என்று கருதுகிறேன்.


காதலும், காதலியும் எனக்கு சில பாடங்கள் கற்று கொடுத்துள்ளன. மனிதன் மானமிழந்தே வாழும்போது காதலியை இழந்தா வாழ முடியாது. என் காதலியாய் உன்னை பார்த்த போது இருந்த முகம்+மனம்... இப்போது வேறு ஒருவரின் மனைவியாக பார்க்கும் போது முற்றிலும் வேறு விதமாக...


நீ இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது என்று நீயும் சொன்னாய்... நானும் சொன்னேன்... ஆனால் பாரேன். அது நடந்ததா, இல்லையே... ஆனாலும் வாழ்கிறோம். பேசியாக வேண்டுமே என்பதற்காக எதையாவது பேசுகிறார்களோ காதலர்கள். அப்படி தான் இருக்க வேண்டும். நீ போன பின்னால் எல்லாமே என்னை விட்டு போய் விடவில்லை.


அப்படியே தான் பொழுது புலருகிறது. அம்மா காபி கொடுக்கிறாள். வேலைக்கு போகிறேன். இடை இடையே உன் ஞாபகம் வருகிறது. ஏதோ ஒரு வெற்றிடம் மட்டும். அம்மாவிடம் பேசும் போது அந்த வெற்றிடம் மறைவதாக தோன்றுகிறது. இன்று "நீயில்லாத வாழ்க்கையை வாழ கற்று கொண்டு தேறி இருப்பதாக" தோன்றுகிறது.


அப்படியெனில் காதல்... காதல் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டேன், ஒரு போதும் காதலில் தோற்றுவிட்டதாக யாரும் சொல்லக்கூடாது. காதல் என்ன தேர்வா... வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதற்கு. நீ எனக்கு கிடைப்பாய் அல்லது கிடைக்காமல் போவாய். வாழ்க்கை சாய்ஸ்கள் நிறைந்தது. இதுவா... அதுவா... வேறு எதுவா...
இப்படி தான் எதையாவது நினைத்து எனக்கு வாழ்வதற்குண்டான ஆசையை ஏற்படுத்துகிறேன்


இலக்கியங்கள் அல்லது சினிமாக்கள் காட்டும் காதல் வேறு, நிஜ வாழ்க்கை காதல் வேறு. அடி விழ அடி விழ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் புலப்படுகின்றன. "எழுதுங்கள் இவன் கல்லறையில்- அவள் இரக்கமில்லாதவன்" என்று... "பாடுங்கள் இவன் கல்லறையில்- இவன் பைத்தியக்காரன் என்று" என்றெல்லாம் பாடிக் கொண்டு இருக்க முடியுமா?


போய் விட்டாய். அடுத்து என்ன செய்வது. பெற்றோர்களை காரணம் காட்டியே நிறைய காதலை துவம்சம் செய்கிறோர்கள்... காதலர்கள். நீயும் அதையே செய்தாய். நல்லது. ஆனால் உண்மை வேறு தானே. ஏதோ ஒன்று, என்னை விட்டு உன்னை விலகும்படி தூண்டியது என்பதை நான் அறிவேன். காதலர்களுக்குள் கூட இனம் புரியாத வெறுப்பு வருவது ஆச்சர்யம் தான்.காதல் கூட நாளாக, நாளாக சலித்து தான் போகிறது.


ஆனால் அதை மறைக்க ஆயிரம் காரணங்கள், ஆயிரம் பொய்கள். முன்னுக்கு பின்னாக பேசுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுவது. என்ன செய்வது. பிறருக்கு வலிக்காமல் வாழ நமக்கு தெரியாதே. புரிந்து கொண்டு நானாக விலகினால் எனக்கது கௌரவம். இல்லையென்றால்... ஏதேனும் சட்டச்சிக்கல்கள்... ஈவ்டீசிங் கள்... வம்பு தும்புகள். வேண்டாமே


யாருக்காகவும் யாரும் காயப்பட வேண்டாமே. ஏன் காயப்பட வேண்டும். யாரையும் யாரும் கெட்டியாக பிடித்து கொள்ளவில்லையே. யார் இல்லாமலும் யாராலும் வாழ முடியும் என்பது தானே நிதர்சனம். உன் பாதை உனக்கு, என் பாதை எனக்கு. சிறந்த துணை உனக்கு அமையப் பெற்று இருக்கக்கூடும். வாழ்த்துக்கள்.


வாழ்க்கையில் எல்லாமே மாயை. இருப்பது போல் இருக்கும். ஆனால் இருக்காது. நீ எனக்கு கிடைப்பது போல் இருந்தது. ஆனால் கிடைக்கவில்லை. நான் என் மனசை தேற்றிக் கொள்கிறேன். அது மிக நல்லது. சந்தோஷம் வந்தால் ஏற்று கொள்ளும் மனம், துக்கம் வந்தால் அதையும் ஏற்று கொள்ள தெரிய வேண்டும்.


உலகின் முதல் இழப்பு என்னுடையதல்ல. கடைசி இழப்பாகவும் என்னுடையது இருக்க போவதில்லை. பிறகேன் வருந்த வேண்டும். எல்லோருக்கும் நேருவதே எனக்கும் நேர்ந்துள்ளது. மகிழ்ச்சி...


நேற்று உன்னை ஷாப்பிங் மாலில் பார்த்தேன். நீயும் என்னை பார்த்தாய். படக்கென்று முகத்தை திருப்பி கொண்டாய். சேலையை இழுத்து போர்த்திக் கொண்டாய். பிறகு என் பக்கமே நீ திரும்பவில்லை என்பதை நான் அறிவேன். என்னால் உனக்கென்ன தீங்கு விளையும் என்று நினைத்தாய். நீ தான் சொன்னாய், ஒரு முறை, "சூது, வாது இல்லாம்ம இருக்கீங்க... எப்படி தான் பொழைக்க ப்போறிங்களோ தெரியல" என்று,


நீ என்னை பார்த்து நட்புடன் சிரிக்க வேண்டாம். எதிரியை பார்ப்பது போல் பார்த்து இருக்க வேண்டாமே... கேவலமாய் பார்த்து இருக்க வேண்டாமே, என்ன செய்வது. கேவலம்- நாம் மனிதர்கள் தானே.

குழந்தைகளின் உலகம்... அன்றும்! இன்றும்! (30/08/2010)

இன்று உலகில் எல்லாமே நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பிரச்சனைகள், சிக்கல்கள் இன்றி எவர் வாழ்வும் இல்லை என்று சொல்லலாம். குழந்தைகளின் வாழ்க்கையையும் கூட, நம் ஆசைகளின் காரணமாய் நெருக்குதலுக்கு உள்ளாக்கி இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

பரிட்சை சமயங்களில், ஏதாவது ஒரு மெட்ரிக் பள்ளியில் வாசலில் நின்றால், இந்த வாக்கியங்கள் காதில் விழுவதை தவிர்க்க இயலாது. "பஸ்ட் ராங்க் வாங்கு. உனக்கு சைக்கிள் வாங்கி தர்றேன்". இருபது மாணவர்கள் படிக்கும் வகுப்பில், இருபது பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளை முதல் ராங்க் வாங்க வேண்டும் என்று கனவு. ஆனால் யாரோ ஒரு பிள்ளையே முதல் ராங்க் வாங்குகிறது. ஏனைய பெற்றோர்களுக்கு ஏமாற்றம். விளைவு. பிள்ளைகள் மீது கோபம் கொப்பளிக்கிறது.

"கேட்கறதெல்லாம் வாங்கி தர்றேன் சனியனே. படிக்க மாட்டேங்கிறே" என்ற குழந்தைகளுக்கு திட்டு. குழந்தைகளுக்கு நிச்சயம் தெரியாது. பெற்றோர்கள் தான் கேட்பதை எல்லாம் வாங்கி தருவது, ஏதோ ஒரு எதிர்பார்ப்பின் விளைவாகத் தான் என்பது. "எங்க காலத்துல இப்படியா வாங்கி கொடுத்தாங்க. உனக்கு எல்லாம் வாங்கி தர்றேன். படிக்கிறதுக்கு என்ன கேடு வந்துச்சு" என்று சொல்லும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். உண்மை தான்.

இந்த தலைமுறை குழந்தைக்கு என்ன கிடைக்கவில்லை. சென்ற தலைமுறைக்கு முந்திய தலைமுறை குழந்தைகளுக்கு எதுவும் கிடைத்ததில்லை. சென்ற தலைமுறை குழந்தைகளுக்கு கேட்டால் மாத்திரம் கிடைத்தது. ஆனால் இந்த தலைமுறை குழந்தைகளுக்கு கேட்காமலே எல்லாம் கிடைக்கிறது. சென்ற தலைமுறையில் நான்கு குழந்தைகளுக்கு செய்த செலவை காட்டிலும், அதிகமாய் இன்று ஒரே குழந்தைக்கு செய்கிறார்கள். நான்கு குழந்தைகளுக்கான கொஞ்சலும் இன்று ஒரே குழந்தைக்கான கொஞ்சலாகி விட்டது.நான்கு குழந்தைகள் சாப்பிட்ட சாப்பாட்டை இன்று ஒரு குழந்தையாக சாப்பிடுகிறது.

வருஷத்திற்கு இரண்டு புது டிரஸ்கள் என்பது மாறி, வருஷத்திற்கு ஏழெட்டு புது டிரஸ்கள்... நிச்சயம் இந்த தலைமுறை குழந்தைகள்
அதிர்ஷ்டசாலிகள் தான். ஆனால்... இதில் ஒரே ஒரு ஜீரணிக்கவே முடியாத
கஷ்டமான உண்மை என்னவென்றால் - அன்று நான்கு குழந்தைகள் வாங்கிய திட்டையும், அடியையும் இன்று ஒரு குழந்தையே வாங்குகிறது. இன்று பதிமூன்று வயது குழந்தைக்கு தற்கொலை சிந்தனை வர என்ன காரணம்.

அன்று நான்கில், ரெண்டு குழந்தைகள் சரியாக படிக்காமல் போனால், அதனால் எந்த பெற்றோரும் கவலைப்பட்டதில்லை. படி படி என்று நிர்ப்பந்திக்கப்பட்டதில்லை. "படிச்சா படிக்கிறான். இல்ல கடைய பார்த்துக்கட்டும். அப்பன் தொழிலை பார்க்க ஒருத்தன் வேணாம்மா" என்று, சரியாக படிக்காத குழந்தையை குலத் தொழிலுக்கென்று ஒதுக்கி விட்டார்கள். இன்று ஒரே குழந்தை. அது சரியாக படிக்காமல் போனால்...

மேலும் இப்போதெல்லாம் பேரண்ட்ஸ் மீட்டிங், ஒபன் ஹவுஸ் என்று நிறைய இம்சைகள். பெற்றோர்கள் அவசியம் பள்ளிக்கு வந்தாக வேண்டும். நன்றாக படிக்கின்ற குழந்தைகளின் பெற்றோர்கள் என்று அறியப்படும்
பெருமையை பெற எல்லோரும் நினைக்கிறார்கள். சுமாராக படிக்கின்ற
குழந்தைகளின் பெற்றோர் என்று அடையாளப்படுத்த படுவதை நிச்சயம்
வெறுக்கிறார்கள். குழந்தைகளின் பாடப் புத்தகத்தை பார்த்தால் தலை சுத்துகிறது. குழந்தைகளின் கம்ப்யூட்டர் புக்கில் உள்ள ஒன்று கூட நமக்கு
தெரியாது.

இத்தனையையும் அந்த சின்ன மூளை எப்படி தான் உள் வாங்க
போகிறதோ. இதில் படிப்பை தாண்டி வேறு வேறு எதிர்பார்ப்புகள்
பெற்றோர்களுக்கு. தொலைக்காட்சிகளில் சிறுவர் சிறுமிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை பார்த்தாலே புரியும். எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள். ஆசை தூண்டல்கள். நேற்று தொலைக்காட்சியில் ஒரு விசித்திரத்தை பார்த்தேன். ஒருவர் தன் இரண்டு கைகளாலும், காந்தியடிகளின் படத்தை வரைகிறார். வலது கை ஒரு கண்ணை வரைகிறது. இடது கை மறு கண்ணை வரைகிறது. ஒரு இயந்திரம் போல் இயங்கினார்.

இம்மாதிரியான திறமை அமையப் பெற்று இருந்தால் மகிழ்ச்சி.
அமையாமல் போனால், அதனால் ஒரு பாதகமும் இல்லை. இதை பார்த்து, தங்கள் குழந்தைகளை சாதனை குழந்தைகளோடு எத்தனை எத்தனை ஒப்பிடல்கள். நான் வெறுக்கக் கூடிய முக்கியமான ஒன்று... ஒப்பிடல். ஒப்பிடலை. சில பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை வேறு குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவதை ஒரு சுபாவமாகவே வைத்து இருப்பார்கள்.

நான், "அப்படி ஒப்பிடாதிங்க. அந்த குழந்தை, உங்களை வேறு பெரியவர்களோட ஒப்பிட்டுட்டு பேசிட்டா உங்க நிலைமை என்னாகும். கோபம் வரும்லயா. அடிக்க கைய ஓங்குவிங்கல" என்று கேட்பேன்.

அறிவுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு, இன்றைய சூழல் வரமாக தான் உள்ளது. சற்றே துடிப்பு திறன் குறைந்த குழந்தைகளுக்கு, இந்த சூழல் சாபமாகவும், பயங்கரமானதாகவும் உள்ளது. அச்சத்தினுடே தான் அது பயணப்பட வேண்டி உள்ளது. பெரியவர்களுக்கும் இது பொருந்த கூடிய ஒன்று தான்.

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. நாம் வம்பை, சிக்கலை, துயரத்தை விலை கொடுத்து வாங்கி கொண்டிருக்கிறோம். அழகான குழந்தைகளின் உலகத்தை, நம் ஆசைகளினால் மாசுப்படுத்தி கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கை - அன்றும்! இன்றும்!!(30/08/2010)

எல்லாமே இயந்திரமாகிப் போன இன்றைய காலகட்டத்தில் நாம் இயங்குவது வெகு அபூர்வமாகிப் போய்விட்டது.அலுவலகப் பணியாகட்டும் இல்லை அடுக்களை பணியாகட்டும் இல்லை நம் அன்றாட பணியாகட்டும் எதற்கும் தயாராக இருக்கிறது இயந்திரங்கள்.

கடிகாரம் அல்லது மொபைலில் அலாறம் என்ற பெயரில் அலறுதலில் காலையிலேயே தொடங்குகிற இயந்திரத்தின் பயன்பாடு ட்ரெட்மில், வாக்கும் க்ளீனர், வாஷிங் மெஷின், குக்கர், மிக்சி, கார், பைக், கம்ப்யூட்டர் என தொடர்கிறது.

அதிகாலையில் ஆசுவாசமாக இயற்கையின் அழகை ரசித்தபடி வெளியே ஓடுவதையோ நடப்பதையோ இன்று பலர் விரும்புவதில்லை. ட்ரெட்மில் இருக்கிறப்போ வெளியே ஏன் போறோம்; குக்கரும், மிக்சியும் சமையலை எளிதாக்குகையில் மண் சட்டியும், அம்மியும் என்னத்திற்கு. காரும், பைக்கும் இருக்கையில் நடப்பதும் ஓடுவதும் எதற்கு என்ற ரீதியில் தான் இன்றைய நிலைமை இருக்கிறது.

இப்படி படிப்படியாக உடலுக்கு அதிகம் உளைச்சல் தராத பலப்பல இயந்திரங்களை நம்பியே வாழ்ந்து விட்டோம் தொடர்ந்து வாழ்ந்தும் வருகிறோம்.

ஒருபுறம் இயந்திரங்கள் பெருகப் பெருக நம் உடலான இயந்திரம் நம்மை அறியாமலே சிறுமை அடைவது தான் நம்மில் பலரும் அறியாத உண்மை. அத்தனை எளிதில் தொற்றாத வியாதிகளும், புதுப் புது வியாதிகளும் நம் முன் வியாபித்திருப்பதை சகஜமாக காண முடிகிறது. நாற்பது வருடங்கள் முன்னர் இந்த நிலைமை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஒருவரின் சராசரி வாழ்நாள் 65 வருடங்கள் என்றிருந்த காலம் மாறி இன்று 45 ஆகி நிற்பதற்கு இந்த இயந்திரங்களும் இயந்திரம் போன்ற வாழ்க்கையும் தான் காரணம் என்றாலும் மிகையல்ல.

22 கிலோமீட்டர் தொலைவு சர்வ சாதாரணமாக மிதிவிண்டி மிதித்து ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஒருவரால் வர முடியுமா என்ற ஆச்சரியத்துடன் இருபது வருடங்கள் பின்னிட்டு பார்க்கிறேன். அதே போன்று திரும்பிச் செல்ல 22 கி.மீ மிதிவிண்டி செலுத்தியாக வேண்டும்.

எனது சிதப்பாவான திரு.கருணாநிதி , ஆசிரியர் பணியில் இருந்த காலத்தில் தினமும் சீர்காழியில் இருந்து பூம்புகார் வரை 22 கி.மீ மிதிவண்டியில் சென்று வருவார்கள் .ஆகா ஒரு நாளைக்கு சராசரியாக 44 கி.மீ பயணம் செய்வார்கள் . இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கும் . இன்றைய இளவட்டம் 5 கி.மீ பயணம் செய்வார்களா என்பது சந்தேகம்தான்.

அன்று வியர்வை சிந்த உழைத்தார்கள்; நன்றாய் உணவருந்தினார்கள். உற்சாகமாய் நோய் நொடியின்றி வாழ்ந்தார்கள். இயந்திரமயமாகிப் போன இன்றைய உலகில் உடல் உழைப்பு என்பது குறுகிப் போனது ஆனால் சாப்பாட்டில் மட்டும் எவரும் எந்த குறையும் வைப்பதில்லை. அருந்திய உணவிற்கு ஏற்ப உடல் உழைப்பு இல்லாததால் கேள்விப்படாத வியாதிகளும் எளிதில் ஒட்டிக்கொண்டு விடுகின்றன.

உடல் உழைப்பை விட மன உழைப்பு அதிகமாகிப் போனது இன்று. எப்போதும் பணம், பங்கு என்ற சிந்தனைகளால் மனதை சிதைத்துக் கொண்டிருப்பதும் ஒருவகையில் உடல் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

பணம் மற்றும் பங்கிற்கு அப்பால் பந்தங்களும் உண்டு என்பதை நினைவுகூர்ந்து இயந்திரங்களை மட்டுமே நம்பாமல் உடல் உழைப்பையும் ஊக்குவித்தால் உடலும், உள்ளமும் நலம்பெறும் என்பது திண்ணமே.

Sunday, August 29, 2010

yahoo messenger ஐ உபயோகிக்கும் போது... (29/08/2010)

நம்மில் சிலர் yahoo messenger ஐ உபயோகிக்கும் போது ஒரு குறிப்பிட்ட mail -ID ஐ கொடுத்து உள்நுழைவோம்.

ஆனால் நாம் பல mail -ID ஐ உபயோகப்படுத்துவோம்.

சிலநேரம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட mail -ID ஐ உபயோகிக்கும் அவசியம் ஏற்ப்படும்.

ஆனால் மற்றொரு yahoo messenger ஐ திறந்தால் அது ஏற்கனவே login ஆன ID ஐ காண்பிக்கும்.

உங்களுக்கு உதவ இதோ ஒரு வழி:


கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை கையாளுங்கள்:

(முதலில் yahoo messenger ஐ install செய்யுங்கள் )

1. click START and click RUN then type REGEDIT, now click ENTER.

now navigate as follows;
  • press HKEY_CURRENT_ USER
  • press Software
  • press yahoo
  • press pager
  • press Test
2. On the right page , RIGHT CLICK and choose NEW and choose DWORD VALUE .

3. Rename it as Plural.

4. Double click and assign a decimal value of 1.

5. Simply start the messenger and login your account, once you sign in, again click on the Yahoo messenger



இப்பொழுது நீங்கள் ஒன்றிற்கு மேற்ப்பட்ட yahoo ID ஐ ஒரே நேரத்தில் உபயோகம் செய்யலாம்.....

சில நேரங்களில் restrart செய்ய வேண்டிவரும்....

வாழைப்பூ (29/08/2010)


இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

இந்த இதழில் ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ பற்றி தெரிந்துகொள்வோம்.

நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன.

வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது.

குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். வாழைப்பூ எந்த அளவுக்கு நமக்குப் பயன்படுகிறது என்பதற்கு இதுவே மிசச் சிறந்த சான்று.

வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் - அழியனல்
என்னஎரி கைகால் எரிவுத் தொலைத்துடலில்
மன்னவளர்க் குந்தாது வை

(அகத்தியர் குணபாடம்)

வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இரத்த மூலம்

மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கைகால் எரிச்சல் நீங்க

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க
வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க

சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

Sunday ஸ்பெஷல் (ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி)-29/08/2010


தேவையான பொருட்கள்:
***************************

நருக்கிய காய்கறிகள் - ஒன்றரை கப்
வெங்காயம்
- ஒன்று
தக்காளி
- ஒன்று
புதினா
,கொத்தமல்லி - ஒரு கப்
பச்சை மிளகாய் - எட்டு
பட்டை - இரண்டு
கிராம்பு
- நான்கு
பிரியாணி
இலை - இரண்டு
மிளகாய் தூள் - மூன்று டீஸ்பூன்
மஞ்சள்
தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி
பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு
- தேவையான அளவு
நெய்
- ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய்
- தேவையான அளவு
தயிர்
- ஒரு கப்
அரிசி
- ஒன்றரை கப்

செய்முறை
:
**************

# முதலில் அரிசியை அறை மணி நேரம் ஊற வைக்கவும்.

#
வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.

# புதினா,கொத்தமல்லி இலைகளை பொடியாக அறிந்து கொள்ளவும்.

#
ஊறவைத்த அரிசியில் ஒரு பட்டை,இரண்டு கிராம்பு ஒரு பிரியாணி இலை
சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.

#
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதம் உள்ள பட்டை,கிராம்பு,
பிரியாணி இலை சேர்த்து பொரிக்க விடவும்.

#
வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.

#
இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

#
கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்கி மிளகாயை சேர்க்கவும்.

#
பின்பு மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

#
தக்காளி மற்றும் காய்கறிகளை சேர்த்து எடுத்து வைத்துள்ள தயிரில்
பாதியை சேர்த்து உப்பு மற்றும் சிறிது நீர் விட்டு அடுப்பு தணலை சிம்மில்
வைக்கவும்.

#
காய்கறிகள் நன்றாக வெந்து சிறிது கிரேவியுடன் இருக்கும்
பொழுதே அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.

# பின்பு பிரியாணி கொள்ளும் அளவு ஒரு பாத்திரம் எடுத்து அதில் முதலில்
வெந்த சாதம் ஒரு லேயர் அதன் மேல் செய்து வைத்துள்ள கிரேவி ஒரு
லேயர் அதன் மேல் சிறிது தயிர் என்கிறவாறு எடுத்து வைக்கவும்.

#
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

# நன்கு சூடானதும் சாதம் வைத்துள்ள பத்திரத்தை எடுத்து தோசை
கல்லின்மேல் வைத்து ஒரு மூடி போட்டு மூடிவிடவும்.

#
அடுப்பு தணலை சிம்மில் வைக்கவும்.

#
ஒரு ஐந்து நிமிடத்தில் எடுத்து விடவும்.

#ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்த்ததும்முந்திரி தாளித்து பிரியாணியில் கொட்டவும்.

# சுவையான ஹய்த்ராபாத் வெஜிடபிள் பிரியாணி தயார்.

Saturday, August 28, 2010

System Folder Lock (28/08/2010)

அந்தரங்கம் இல்லாத மனிதர் யார் உள்ளார்கள். நமக்கென்றுசிலஅந்தரங்க டாக்குமென்டுகள்.படங்கள்.பைல்கள்.வீடியோக்கள்.பாடல்கள் என இருக்கும்.மற்றவர்கள் பார்வையிலிருந்து நாம் அதை கணிணியில் எவ்வாறு பாதுகாத்து வைப்பது? இநத கவலையை போக்கவே இந்த சிறிய சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்இதை கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பாஸ்வேர்ட் கொடுத்து பைலை ஒப்பன் செய்யவும். சாவி வந்து திறந்து உங்களுக்கு ஒரு விண்டோ ஒப்பன் ஆகும்.அதில் தேவையான பைலை எடுத்துவந்து போட்டுவிடவும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது மீண்டும் வெளியே வந்து கீழ்கண்ட விண்டோவில் Lock கிளிக்செய்யவும்.
சாவி யானது விட்டலாச்சரியா படத்தில் வருவது போல வந்து போல்டரை லாக் செய்து கொள்ளும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அவ்வளவுதான். உங்கள் பைல் லாக்கரில் பத்திரமாக இருக்கும். நீங்கள் மீண்டும் பைலை பார்க்கவேண்டுமானால் இந்த லாக்கர் ஐ-கானை கிளிக் செய்யவேண்டும்.வரும் படத்தில் ஓப்பன் கிளிக் செய்யவேண்டும். இப்போது உங்களை பாஸ்வேர்ட் கேட்கும் பாஸ்வேரட் கொடுத்தவுடன் உங்கள் பைலானது ஓப்பன் ஆகும்.பயன்படுத்திப்பாருங்கள்.

புகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி... (28/08/2010)

புகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்று விட்டு வெளியே வரும் உணவை நாம் மறு படி உண்பது இல்லை, அதை போல் தான் வெளியே வரும் புகையும் ஒரு கழிவு.

ஆனால் புகை பிடித்து வெளியே விடுவார் அதை மீண்டும் அவர் சுவாசிப்பார்...அவர் பக்கத்தில் இருப்பவரும் அதை சுவாசிக்க வேண்டும் அவர்கள் வெளியே விடும் புகை மற்றவர்கள் சுவாசிப்பதால் அவர்களுக்கும் கெடுதல் வீட்டில் குழந்தை இருக்கும் அப்படியே இவர்களும் புகை பிடிப்பார்கள்...நான் தான் புகை புடிக்கின்றேன் குழந்தைக்கு எதுவும் ஆகாது என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை சிறு வயதில் இருந்தே இந்த புகை உடலுக்கு சென்றால் எதிர் காலத்தில் மிக கொடிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது..


புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள், அது உண்மையிலேயே உடல்நலத்துக்கு எதிரி என்பதை நன்கு அறிந்துகொண்டிருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். புகை பிடிக்காமல் இருந்தும் நோய்வாய்ப்பட்டு இறந்த பலரை அவர்கள் பொதுவாக உதாரணம் காட்டுவார்கள்.அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள்

புகை பிடித்தல் என்பதொரு நடைமுறைப் பழக்கம். அதில் ஒரு பொருளாக மிகப் பெரும்பாலும் புகையிலை எரிக்கப்பட்டு அதன் புகை சுவைக்க அல்லது உள்ளிழுக்கப்படுகிறது. இது முதன்மையாக மனம் மகிழ்விக்கும் போதைப் பயன்பாட்டினை நிர்வகிக்கும் வழிமுறையாக நடைமுறையிலுள்ளது. அப்போது எரிதலுக்குள்ளாகும் பொருள் போதைப் பொருளிலுள்ள நிகோடின் போன்ற சுறுசுறுப்பான பொருட்களை வெளியிடுகிறது. அவற்றை நுரையீரல் வழியாக உறிஞ்சப்பட்டு கிடைக்கச் செய்கிறது.


சிகரெட்டிற்காக ஒரு பெரும்தொகையினை, புகை பிடிப்பவர்கள் அவர்களை அறியாமலே செலவிடுகின்றனர். அதாவது, காசு கொடுத்து, உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். தாம் பாடுபட்டு வேலை செய்த பணத்தைத் தம் உடம்பைக் கெடுத்துக் கொள்ளப் பயன்படுத்துவதை விடப்பெரிய அறிவீனம் ஏதும் உண்டா?

புகை பிடிப்பதால் வரும் தீமைகள்

* அடிகடி உடற் சோர்வு ஏற்படும்


* வேலையில் கவனமின்மை,புகை பிடிக்க அடி கடி வெளியே செல்வார்கள்

* ஆஸ்துமா பிரச்னை வரும்

* உங்கள் வீட்டில் கர்ப்பிணி பெண் இருந்தால் பிறக்கும் குழந்தை ப்ரீமெச்சூர் பேபியாக பிறக்கும்



புத்தாண்டு முதல் அல்லது வரும் பிறந்த நாள் முதல் சிகரெட் பிடிப்பதை நான் நிறுத்திவிடுவேன் என்று சபதம் எடுப்போம் எல்லாம் மறு நாளே முடிந்து விடும் நம் மனதிற்கு நம்மே கட்டுபாடு வைத்து கொள்ள வேண்டும்


புகை புடிப்பதை விடுவதற்கு சில வழி முறைகள்

மற்றவர்கள் புகை பிடித்துக்கொண்டு இருந்தால், அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். புகை அலர்ஜி என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

* சிகரெட்டிற்குப் பதிலாக, காபி, டீ, ஜூஸ் போன்ற பானங்களைக் குடிக்கலாம்.

* குழந்தைகளுடன் விளையாடலாம். விளையாடினால் நேரம் செல்வதே தெரியாது

* காலையில் யோகா,தியானம், மாலை வாக்கிங்,

* புகை பிடிப்பதால் நமக்கு மட்டும் பிரச்னையில்லை நம் குடும்பத்திற்கும் பிரச்னை என்று நினைக்க வேண்டும்.

நீ மறைந்த பிறகுதான் வைப்பார்கள் கொள்ளி ஏன் உயிருடன் இருக்கும் போதே தினமும் வைத்து கொள்கிறாய் கொள்ளி

Friday, August 27, 2010

உன் மௌனம்..! (27/08/2010)


உன்னை நெருங்க நினைத்தேன்...
நீ விலகியே நின்றாய்...
விரும்பும் இதயம் விலகி நின்றால்
வெடித்து சிதறுகிறதே உள்மனம்..!
உன் மௌனத்தின்
இடைவெளி நீண்டதால்..
என் மனதிற்குள்
ஆயிரம் சலனங்கள்..!
ஓராயிரம் வார்த்தைகள்
சொல்ல நினைத்தும்
உன் மௌனத்தால்
என்னை ஊமையாக்கினாய்..!
நீ பேசினால்
சொர்க்க சுகம் என்றால்..
பேசாமல் இருந்தால்
நரக வேதனை அன்றோ?

உன் மௌனம்
கலைக்க வழியின்றி..
உள்ளன்பை உன்னிடமே..
உளறி கொட்டினேன்..!

அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...??

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! (27/08/2010)

ஈ.மெயிலில் வந்த ஒரு உண்மை சம்பவம் இது.



அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். அதிர்ந்து பேச‌மாட்டான். மிக அமைதி

யான‌வ‌ன். சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால்

வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌

நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும்

வ‌ய‌தில் ஒரு த‌ங்கை. அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர்

ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌

த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டி

லிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டு

வ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.



பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில்

அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000. பிற‌ந்த‌து

முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌

தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் 2 வருடத்துக்கு ஒரு முறை

தான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச்

செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது

அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.



ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை

ஒழிய‌ த‌ன்க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும்

என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு

எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு

ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.




அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில்

உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தி

னான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே

விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்! அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள்

அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக்

கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌

ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ்

நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு

செய்தார்.



பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிந்தது,

அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு

மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன்

குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3,000ல் போக்குவ‌ர‌த்து,

அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக்

க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை

உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி

அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில்

மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல

அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌

பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.




ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும்

இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் தவிர்த்த

விடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும்

கார‌ண‌ம்.."டைம் இல்ல‌ ". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல்

அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்


இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!