இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Sunday, September 26, 2010

சண்டே ஸ்பெஷல்-சைனீஸ் இறால் ப்ரைட் ரைஸ் (26/09/2010)



தேவையானவை :-
  • பாசுமதி அரிசி - 500 கிராம்
  • சுத்தம் செய்த இறால் - 300 கிராம்
  • புரோசின் பீஸ் (green peas) - 100 கிராம்
  • முட்டை - 2
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • பூண்டு - 3 பற்கள்
  • அஜினோமோட்டோ - 1/2 தேக்கரண்டியிலும் குறைந்தளவு
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள்
  • கிராம்பு - 4
  • கறுவா - 2
  • ஏலக்காய் - 4
செய்முறை :-
மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரிசியை கழுவி அதனுடன் ஏலக்காய், கறுவா, கிராம்பு, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை சேர்த்து விரும்பினால் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது மாஜரினும் சேர்த்து 700 மி.லி தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். அப்போது தான் சாதம் உதிர் பதமாக இருக்கும்.

இறாலை சிறுத் துண்டுகளாக நறுக்கி கால் தேக்கரண்டி உப்பு மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூளும் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

முட்டையை உடைத்து ஊற்றி அதில் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து அடித்து அப்பமாகப் பொரித்து எடுத்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டை தட்டிப் போட்டு பிரட்டி வைத்திருக்கும் இறாலையும் போட்டு நன்கு வதக்கவும்.

இறால் நன்கு வதங்கியதும் அதனுடன் பீஸை போட்டு வதக்கவும்.

அதன் பின்னர் கறிவேப்பிலை, மீதமுள்ள உப்பு, மிளகுதூள், அஜினோமோட்டோ போட்டு பிரட்டி விடவும். அஜினோமோட்டோ சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும் சிறிதளவேனும் அதிகமானாலும் புளிப்பு தன்மை அதிகமாகிவிடும்.

இந்த கலவையில் வேக வைத்து ஆற வைத்த சாதத்தையும், துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முட்டையையும் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு பிரட்டி விட்டு சூடாகியதும் இறக்கவும். சமைத்து முடியும் வரை குறைந்த தீயிலேயே வைத்திருக்கவும்.

சுவையான சைனீஸ் ப்ரைட் ரைஸ் ரெடி. இதனை மட்டன் அல்லது சிக்கன் பிரட்டல், அவித்த முட்டை சேர்த்துப் பரிமாறவும்.

Wednesday, September 22, 2010

கடவுள் என் மட்டில் (22/09/2010)

"கடவுள்" இந்த வார்த்தையை உச்சரித்தால் சிலருக்கு பயம்,சிலருக்கு பக்தி,சிலருக்கு வெறுப்பு,சிலருக்கு அமானுஷ்யம்

அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கடவுள் என்ற மாயையில்,எல்லாம் இந்த மனிதப் பதர் உருவாக்கியவை தானே,என்ன அதில் மாயை,மந்திரம்?



"மனிதன் தான் கடவுளை படைத்தான்" இது என் கருத்து தான், அதனால் தான் மனிதனை போலவே கடவுளும் இருக்கிறார்

பாருங்க எல்லா ஆங்கில்லையும் போட்டோ எடுத்துக்க என்று நடராஜர் தான் காலை தூக்கிட்டு நின்றிருப்பாரா இல்லை சரஸ்வதி குளோசப் போட்டோ சரியாய் விழலன்னு இன்னொரு டேக் போயிருப்பாங்களோ,சாத்தியமே இல்லையே

மனிதனுக்கு தன்னை கட்டுப்படுத்தவும் இன்ன பிற சௌகரியங்களை செய்து கொள்ளவும் ஒரு உருவம் தேவை பட்டது, அதை தான் கடவுள் என்று படைத்து விட்டனர், வகை வகையாக மனித உருவத்தில் மாற்றம் செய்து கடவுளர்களை உருவாக்கி இருப்பர்,பின்னர் அதிலிருந்து வேர் விட்டது தானே இந்த மதமும் சாதியும்

கடவுள் இருக்கிறார் இல்லை என்பது அவரவர் விருப்பம் தான்

அதனால் கடவுள் இல்லை என்பவரிடம் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப கூறுவதோ,இருக்கிறார் என்பவரிடம் இல்லை என்று பழிப்பதோ வீண் வேலை தான்

"உண்டு" என்ற வார்த்த்தை இருக்குமானால் "இல்லை" என்ற வார்த்தை இருந்தே தீர வேண்டும்,அப்படி இல்லையென்றால் "உண்டு" என்பது அர்த்தமற்றதாகிவிடும்,இருக்கு என்பதும் அறிவுதான்,இல்லை என்பதும் அறிவுதான்

நாத்து நட்டிருக்கு மழை பெய்யக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளும் விவசாயிக்கு நாத்து நட ஒரு நம்பிக்கை தேவை படுகிறது இதில் தவறேதும் இல்லையே,ஒரு நம்பிக்கை தானே அதை நீங்க கொடுத்தால் என்ன கடவுள் என்ற உருவம் கொடுத்தால் என்ன ?

முடிவாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,இருக்கு என்பவர்களுக்கு இருந்துட்டு போகட்டும்,இல்லை என்பவருக்கு இல்லாமலேயே இருக்கட்டும்

ஆனால் இந்த இரண்டிற்க்கும் இடையில் மதத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!


நூறு
குடம் பாலபிஷேகம்
கல்லுக்கு
ஊத்திய போது
சிரித்தேன் கடவுளை பார்த்து
உமக்கு தேவையா என்று

அபிஷேகம் முடிந்து கொடுத்த
சர்க்கரை பொங்களை சிரித்துக் கொண்டே
வாங்கும் போது
என்னை பார்த்து
சிரித்தார் கடவுள்..

இவையனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்களே....

Monday, September 20, 2010

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன??? (20/09/2010)

"பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?' காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், "பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்...' என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!' என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர்.

அமெரிக்காவைச் சேர்ந்த இவர், "வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!' என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?
3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.
4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.
5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.
7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.
8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது
9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
10. பாராட்டு: "இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது...' என பாராட்ட வேண்டும்
11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்
12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.
13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.
14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.
17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.
18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.
19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.
20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.
21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: "ஐயோ... டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!' என கூச்சல் போடக் கூடாது.
22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.
23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.
25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். "வேலை இருக் கிறது, "டிவி'யை பார்த்துக் கொண்டு தூங்கு!' என கணவர்கள் சொல்லக் கூடாது.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

Sunday, September 19, 2010

சண்டே ஸ்பெஷல்-ஈசி மட்டன் பிரியாணி (19/09/2010)


தேவையானவை :-
  • மட்டன் - 1/2 கிலோ
  • பாஸ்மதி அரிசி - 2 கப்
  • வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • பட்டை - 2
  • லவங்கம் - 4
  • ஏலக்காய் - 2
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி
  • பிரிஞ்சி இலை - 1
  • வெங்காயம் - 1/2 கப்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • இஞ்சி, பூண்டு விழுது - 5 தேக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப
  • பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது - 15
  • தக்காளி - 3
  • புதினா - ஒரு கைபிடி(பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி(பொடியாக நறுக்கியது)
  • கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :-
  • குக்கரில் 4 கப் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள், (இஞ்சி,பூண்டு விழுது), மட்டன் சேர்த்து 15 விசில் விட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.
  • குக்கரில் வெண்ணெய், எண்ணெய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, வெங்காயம், பாதி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்(எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிகவும் முக்கியம்).
  • பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கியப் பிறகு வேக வைத்த மட்டன்(தண்ணீர் இல்லாமல்) சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் சேர்த்து லேசாக வதக்கவும். பின் 4 கப் தண்ணீர் (மட்டன் வேக வைத்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம்) விட்டு உப்பு, காரம் பார்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
  • 15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.
Note:

எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிக மிக முக்கியம்.

Saturday, September 11, 2010

சண்டே ஸ்பெஷல் - சிக்கன் 65 (12/10/2010)


தேவையானவை :-
  • எலும்பில்லாத சிக்கன் - ஒரு கப்
  • சிக்கன் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
  • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • கேசரி பவுடர் - கால் தேக்கரண்டி
  • பூண்டு - 3 பல்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • தயிர் - கால் கப்
  • உப்பு - கால் தேக்கரண்டி
  • எண்ணெய் - கால் கப்
செய்முறை :-
எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.



ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு அதில் சிக்கன் பவுடர், இஞ்சி பூண்டு விழுது, கேசரி பவுடர், தயிர், உப்பு சேர்த்து பிசறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்





வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.




வேறொரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.



தாளித்தப் பொருட்களை பொரித்த சிக்கன் மீது தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் 65 தயார்.

Friday, September 10, 2010

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள் (10/09/2010)

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
--------------------------------------------------------------------------------
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
--------------------------------------------------------------------------------
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
--------------------------------------------------------------------------------
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
--------------------------------------------------------------------------------
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
--------------------------------------------------------------------------------
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
--------------------------------------------------------------------------------
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
--------------------------------------------------------------------------------
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
--------------------------------------------------------------------------------
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
--------------------------------------------------------------------------------
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
--------------------------------------------------------------------------------
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
--------------------------------------------------------------------------------
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
--------------------------------------------------------------------------------
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
--------------------------------------------------------------------------------
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
--------------------------------------------------------------------------------
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
--------------------------------------------------------------------------------
தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
--------------------------------------------------------------------------------
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
--------------------------------------------------------------------------------
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி (10/09/2010)



தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.

Wednesday, September 8, 2010

"கடவுள் நல்லவரா?"-கடவுளை நம்புகிறாயா?(08/09/2010)

மின்னஞ்சலில் வந்த ஓர் அருமையான விவாதம்

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

"நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?"

"நிச்சயமாக ஐயா.."

"கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா."

கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?"

"ஆம்."

"எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?"

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

"உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா.."

"சாத்தா‎ன் நல்லவரா?"

"‏இல்லை."

"எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?"

"கடவுளிடமிருந்துதா‎ன்."

"சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?"

"ஆம்."

"அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?"

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?"
.....
"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?"
......
"ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?"

"ஆம் ஐயா.."

"நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் ‏ இல்லை' என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?"

"ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது."

"ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே.." ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

"ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?"

"நிச்சயமாக உள்ளது."

"அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?"

"நிச்சயமாக."

"இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை."

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

"ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). "வெப்பம் ‏இல்லை" என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது."

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

"சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?"

"ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது."

"நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?"

"சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?"

"ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது."

"பிழை?? விளக்கிக் கூற முடியுமா?"

"ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் "வாழ்வு இனி இல்லை" என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

"சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?"

"”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்." பேராசிரியர் பதிலுரைத்தார்.

"உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?"

(பேராசிரியர் த‎ன் தலையை 'இல்லை' என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

"அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே 'ஒருவகையா‎ன' அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?"

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

"இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?"

(வகுப்பறை 'கொல்'லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

"யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?"

"அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று."

"மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?"

மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

"நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!"

"அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

Tuesday, September 7, 2010

பிரஸர், உப்பு, பொட்டாசியம் (07/09/2010)


'பிரஸரா? உணவில் உப்பைக் குறை.' ஆம் பிரஸருக்கு உப்புக் கூடாது என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.

உப்பு கூடாது என்பதற்கு காரணம் என்ன?

உப்பில் உள்ள சோடியம் (Sodium- Na) தனிமம் பிரஸரை உயர்த்துகிறது. ஆனால் அதே நேரத்தில் உணவில் பொட்டாசியம் சத்தை (Potassium-K)அதிகமாக எடுப்பதால் பிரஸர் குறைகிறது என்பது பலருக்கும் தெரியாது.

இந்த விடயம் மருத்து உலகத்திற்கு நீண்ட காலமாகத் தெரிந்திருந்த போதும் அது பொது மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தைப் பெறவில்லை.

அண்மையில் University of Texas Southwestern Medical Center, Dallas, Texasஒரு ஆய்வுசெய்யப்பட்டது. 3300 பேரைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு. பிரஸர், பொட்டாசியம் ஆகியவற்றுக்கு இடையான தொடர்பு பற்றிய இந்த ஆய்வில் சிறுநீரில் இருந்த பொட்டாசியமே கணக்கிடப்பட்டது. இது உணவுப் பொட்hசியத்தின் அளவிற்கு சமாந்திரமானது. உணவில் பொட்டாசியம் குறைவாக இருந்தால் பிரஸர் அதிகரிக்கும் என அந்த ஆய்வு தெளிவாகக் கூறுகிறது.

பிரஸரை அதிகரிப்பவை

பிரஸரை அதிகரிக்கக் கூடிய ஏனைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட போதும் பிரஸருக்கும் பொட்டாசியத்திற்கும் இடையேயான தொடர்பு தெளிவாக இருந்தது. அதாவது வயது, இனம், புகைத்தல், நீரிழிவு, கொலஸ்டரோல் போன்ற பிரஸருடன் தொடர்புடைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட போதும் பொட்டாசியக் குறைவது பிரஸரை அதிகரிக்கும் என்பது தெரிந்தது. இந்த ஆய்வு அமெரிக்காவிலுள்ள ஆப்பிரிக்கர்களை அதிகமாகக் கொண்ட போதும் ஏனையவர்களுக்கும் பொருந்துகிறது.


பொட்டாசியத்தின் முக்கியத்துவம்

பொட்டாசியம் சத்தானது பிரஸரைக் குறைப்பதற்கு மாத்திரமின்றி நரம்புகள் மற்றும் தசைகளின் செயற்பாட்டிற்கும் அவசியமானது. பிரஸரைக் குறைப்பதற்கான உணவு முறையானது (Dietary Approaches to Stop Hypertension - DASH) உணவில் பொட்டாசியம், மக்னீசியம், கல்சியம் ஆகியன கூடியளவு இருக்க வேண்டும் எனச் சிபார்சு செய்கிறது. அதே நேரம் உணவில் கொழுப்பும் (அதிலும் முக்கியமான நிறைந்த கொழுப்பு) உப்பும் குறைவாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

அப்படியாயின் பிரஸர் நோயாளிகள் பொட்டாசியம் மாத்திரைகளை மேலதிகமாக எடுக்க வேண்டுமா?நிச்சயமாக இல்லை.


பொட்டசியம் அதிகமுள்ள உணவுகள்




ஆனால் பொட்டாசியம் செறிவாக உள்ள உணவுகளை தினமும் எடுப்பது நல்லது. இறைச்சி, மீன், பால், பாற் பொருட்கள், காய்கறிகள், பழவகைகள், தீட்டாத தானியங்கள் போன்றவற்றில் அதிகம் உண்டு. தக்காளி, உருளைக் கிழங்கு, வாழைக்காய், வாழைப்பழம், சோயா, இளநீர் போன்றவை சில உதாரணங்கள். பொதுவாக பலவகையான காய்கறிகளையும் பழங்களையும் உணவில் அதிகளவு சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான அளவு பொட்டாசியம் சுலபமாகக் கிடைத்துவிடும்.

ஒருவருக்கு தினமும் 4.7 கிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. ஆயினும் கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இதனைவிட அதிகம் தேவைப்படும்.

பொட்டாசியம் குறைந்தால்

கடுமையாக வேலை செய்யும் தசைகளில் அதிகமாகவும், வியர்வையில் மேலும் சிறிதளவும் பொட்டாசியம் இழக்கப்படுகிறது. இதனால் உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவடைந்து தசைப் பிடிப்பு (Muscle Cramps) ஏற்படலாம். சிலவேளை இருதயத் துடிப்பு ஒழுங்கீனமாகவும் கூடும். பொதுவாக கடுமையான உடற் பயிற்சியின் பின் ஒரு கப் ஆரன்ஜ் ஜீஸ் அருந்தினால் அல்லது ஒரு வாழைப்பழம் அல்லது அவித்த உருளைக்கிழங்கு உண்பதினால் இதனைத் தவிர்க்க முடியும்.

கடுமையான வயிறோட்டம், கட்டுபாட்டில் இல்லாத நீரிழிவு நோய், அதீத மதுப் பாவனை, குறைந்த கலோரிச் செறிவுள்ள உணவு, போன்றவை உடலில் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்க் கூடும். சில மலம் இளக்கி மருந்துகளும், சிறுநீரை அதிகளவு வெளியேறச் செய்யும் மருந்துகளும் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்பதை அறிந்திருப்பது நல்லது.

மீண்டும் பிரஸருக்கு வருவோம். பிரஸர் உள்ளவர்களே! உங்கள் உணவில் பொட்டாசியம் சத்துள்ள உணவுகளை சற்று அதிகமாகவும், உப்பை சற்றுக் குறைவாகவும் உட்கொள்ளுங்கள். அது நன்மை பயக்கும். பிரஸர் வரக் கூடிய வாய்ப்பு உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
தினக்குரல். 18.11.2008.

Monday, September 6, 2010

உணவு நஞ்சாதல் (06/09/2010)


  • வயிற்றோட்டம்,
  • வாந்தி,
  • வயிற்று வலி
போன்ற பிரச்னைகளுடன் அண்மைக் காலங்களில் தினமும் பலர் வருகிறார்கள். சிலர் செமியாப்பாடு என்று சொல்லிவிடுவதுமுண்டு.

பெரும்பாலானவர்கள் பள்ளி செல்லும் பிள்ளைகள். இன்னும் சிலர் வேலை செய்பவர்கள். வெளிநாடுகளிலிருந்து வந்து இங்கு சுற்றுலாச் செல்லும் பலர் இப் பிரச்சைனையில் அகட்டுப்படுக் கொள்வது மிக அதிகம்.
ஒரு சிலரே வீட்டுப் பெண்கள்.
இவர்களில் பலருக்கு காய்ச்சலும் இருப்பதுண்டு.


வயிற்றோட்டம், வயிற்றுளைவு, வயிற்றுக்கடுப்பு, வாந்திபேதி என ஒவ்வொருவரும் வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் இவற்றிற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது உணவு நஞ்சடைதல்தான்.

ஆங்கிலத்தில் Food Poisoning என்பதை நேரடியாகத் தமிழாக்கிய சொல் அது. உண்மையில் உணவில் நஞ்சு எதுவும் கலந்துவிடுவதில்லை.

நோயை ஏற்படுத்தும் கிருமிகளால் உணவு மாசடைவதாகக் கொள்ளலாம். உணவு என்று சொல்லும்போது அது கெட்டியான உணவாக இருக்க வேண்டும் என்பதில்லை. நீராகாரமாகவும் இருக்கலாம்.


மாசடைந்த உணவை உண்டபின் அதிலுள்ள கிருமிகள், உணவுக் குழாயினுள் உள்ள இரைப்பை, சிறுகுடல் பெருங்குடல் ஆகியவற்றின் சுவர்களில் ஒட்டி, பின் அங்கு பல்கிப் பெருகுகின்றன.

இதற்கு ஒரு சில மணிநேரத்திலோ ஒரு சில நாட்களோ எடுக்கலாம்.

எவ்வளவு எண்ணிக்கையான கிருமிகள் உட்புகுந்தன என்பதைப் பொறுத்தது நோயின் தன்மை. வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று முறுக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

அவை சாதாரணமாகவோ அன்றி கடுமையாக நீரிழப்பு நிலைஏற்படும் அளவிற்கு கடுமையாகவோ இருக்கலாம்.

இந்த நோய் திடீரென அதிகரித்தமைக்கு
  • சில காலத்திற்கு முன் பெய்த கடுமையான மழையும் அதன் காரணமாக அசுத்தமான நீரும் காரணமாக இருக்கலாம்.
  • ஆயினும் இப்பொழுது பலரும் வீட்டுச் சமையலைக் கைவிட்டு கடை உணவுகளை அதிகம் நாடுவது காரணம் என்பதை பல நோயாளிகள் உணவு முறைகளைப் பற்றிக் கேட்டறிந்ததில் புரிந்தது.
ஹோட்டல் உணவு

சாதாரண வீதியோரக் கடைகள் முதல் நல்ல தரமானது என நாம் கருதும் உணவுச் சாலைகளில் சாப்பிட்டவர்கள் வரை எல்லோருக்கும் இப்பிரச்சனை ஏற்பட்டிருந்தது.

சோப் போட்டுச் சுத்தம் செய்யாத கரங்களினால் உணவு தயாரிப்பதும் பரிமாறுவதுமே முக்கிய காரணமாகும்.


அசுத்த நீரில் நீராடும் இலையான்களும் கரப்பத்தான் பூச்சிகளும் நிறைந்த சுகாதாரக் கேடான சமையலறை,
சிந்தும் மூக்கை சட்டையில் துடைத்துவிட்டு உணவு பரிமாறும் சிப்பந்திகள்.

இவைகளை நீங்களும் கண்டிருப்பீர்களே?

தயாரித்த உணவுகளை
  • ஈ மொய்க்குமாறு திறந்து வைப்பதும்,
  • அசுத்தமான கைகளினால் அளைவதும்,
  • பழைய உணவுகளை சற்று சூடுகாட்டிவிட்டு எமது தலையில் கட்டுவதும் பல உணவகங்களில் சர்வ சாதாரணம்.
நல்ல உணவகங்களும் இல்லாமல் இல்லை.
விருந்து நிகழ்வுகள்.

திருமணம், பிறந்தநாள், அந்தியட்டி போன்ற பல நிகழ்வு விருந்துகளில் உண்டவர்களும் இப்பிரச்சனைக்கு ஆளாவதுண்டு. கோவில் அன்னதானம், பிரசாதம் ஆகியவையும் பாதுகாப்பானவை என்று சொல்ல முடியாது.

உணவு தயாரிப்பதில் ஏதாவது பிசகு நடந்திருக்கலாம். ஆனால் உணவு பரிமாறலில் பல கைகள் ஈடுபடுவதால் யாராவது ஒருவர் சுகாதார முறைகளில் கவலையீனமாக இருந்தாலும் பலரும் பாதிக்கப்படுவார்கள்.

வீட்டு உணவு

வீட்டு உணவும் சில வேளைகளில் ஆபத்தைக் கொண்டு வருகிறது. முக்கியமாக மண்ணிலும் மண்ணை ஒட்டி பகுதியிலிருந்து வரும் கிழங்கு, கரட்; கீரை, வல்லாரை போன்றவற்றை சமைக்காமல் பச்சையாக சலட் போன்று உண்டால் கிருமி தொற்றலாம்.

அவற்றை ஓடும் குழாய் நீரிலும் பின் உப்புத் தண்ணீரிலும் கழுவுவது அவசியம். வேகவைத்து உண்பது அதனிலும் சிறந்தது.

சமைத்த உணவைச் சேமித்தல்

சுகாதாரமாகச் சமைத்த போதும் வீட்டில் இந்நோய் ஏற்படுவதற்கு காரணம் பாதுகாப்பற்ற சேமிப்பு முறை எனலாம்.

சமைத்த உணவுகளைத் திறந்து வைப்பதும்,
அசுத்தமான கரண்டிகள் மற்றும் கோப்பைகளை உபயோகிப்பதும் காரணமாகும்.

ஒரு வேளைக்கு எனச் சமைத்த உணவை அடுத்த நேரத்திற்கும் உபயோகிக்க வேண்டுமாயின் சமைத்த உடனேயே அடுத்த நேரத்திற்கானதை வேறாக எடுத்து வைத்துவிடுங்கள்.

பாவித்த உணவின் மீதியை அடுத்த வேளைக்கும் உபயோகிக்க நேர்ந்தால் மீண்டும் சமைப்பது போல நன்கு கொதிக்க வைத்தே உண்ண வேண்டும். அவ்வாறு செய்யும் போது கிருமிகள் யாவும் அழிந்துவிடும்.

மாறாக வாய் இதத்திற்கு ஏற்ப சிறிதளவு சூடு காட்டினால் அதிலுள்ள கிருமிகள் பெருகி நோயை ஏற்படுத்தலாம்.


இவை பிரிஜ்சில் வைக்கும் உணவுக்கும் பொருந்தும். குளிருட்டும்போது உணவில் உள்ள கிருமிகள் அழிவதில்லை. அவ்வாறே உறைநிலையில் இருக்கும்.

வெளியே எடுத்ததும் அல்லது சிறிது சூடு காட்டியதும் அவை பெருகி நோயை ஏற்படுத்தலாம்.

இதைத் தடுக்க முன்னர் கூறியது போல சமைத்த உடனேயே அடுத்த வேளைக்கான உணவை வேறாக எடுத்துச் சேமிக்க வெண்டும். இல்லையேல் மீண்டும் கொதிக்க வைத்த உபயோகிக்க வேண்டும்.

Sunday, September 5, 2010

அடுத்தவர் மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பலாம் (05/09/2010)

உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சில தளங்களில் நுழைவதற்கு பயன்படுத்துவீர்கள் அங்கு தான் உங்கள் மின்னஞ்சல் மற்றவர்களுடைய கைகளுக்கு போகிறது அதாவது நீங்கள் மின்னஞ்சல் கொடுத்து நுழைகிற தளங்களில் இருந்து அவர்களே உங்கள் முகவரிகளை விற்க கூடும் இல்லையென்றால் இனையத்தில் பதிந்திருக்கும் மின்னஞ்சல் முகவரிகளை படிப்பதற்கென்றே(விபரம் தெரிந்தவர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுக்கும் போது @ என்படை (at) எனவும் . என்பதை (dot) எனவும் எழுதுவதை பார்த்திருப்பீர்கள் ஆனாலும் இது தீர்வல்ல) சில ரோபட்கள் இயங்கும் இவை உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை படித்து தயாரித்த நபர்களுக்கு அனுப்பிவிடும் அதை அவர்கள் முறைகேடாக பலான தளங்கள் இன்ன பிற தளங்கள் தங்கள் விளம்பரத்துக்காக வாங்கி கொண்டு அதன் வழியாக அவர்கள் தள விளம்பரத்தை அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.

சரி இது போலவே நாமும் நமக்கு தெரிந்த ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை வைத்து வேறு யாருக்காவது மின்னஞ்சல் அனுப்ப முடியுமா எனக் கேட்டால் அனுப்ப முடியும் என்பதே பதில் இதற்கெனவே சில தளங்கள் இயங்குகின்றன நான் சிலவற்றை இங்கு தருகிறேன்.

sendanonymoussms

anonymailer

send-fake-anonymous-email

sharpmail

webwizny

நான் மேலே ஐந்து தளங்கள் தந்திருக்கிறேன் இன்னும் வேறு நிறைய தளங்கள் இருக்கின்றன இந்த ஐந்தில் நான்கு தளங்கள் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது கூடவே அவர்கள் தளத்தின் நோட்டையும் சேர்த்து விடுவார்கள் ஆனால் ஒரு தளம் மட்டும் அவர்களின் விளம்பரத்தையும் இனைப்பதில்லை இந்த தளத்தில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினால் நிச்சியம் நம்பி விடுவார்கள் ஆனால் எப்படி உண்மையான ஒரு மின்னஞ்சலுக்கும் ஒரு டூப்ளிகேட் மின்னஞ்சலுக்கும் உள்ள வித்யாசத்தை கண்டுபிடிப்பது என்பதை பற்றி கீழே படத்துடன் பார்க்கலாம்.

இனி நீங்கள் இங்கு சென்று ஏதாவது ஒரு மின்னஞ்சல் அனுப்பி பாருங்கள்.

webwizny

இது நான் எனது மின்னஞ்சலில் இருந்து மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு கூகுளின் ஜிமெயில் வழியாக அனுப்பியது.



இனி உங்கள் ஜிமெயிலில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினால் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல Show Details என்பதை கிளிக்கி பாருங்கள் Mailed by signed by என்பதில் gmail.com என்பதாக இருக்கும்.



இனி நாம் அடுத்தவரின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி நாம் வேறொருவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதுவும் இப்படித்தான் இருக்கும் மேலிருக்கும் மின்னஞ்சலுக்கும் கீழிருக்கும் மின்னஞ்சலுக்கும் ஏதாவது வித்யாசம் இருக்கிறதாவென பாருங்கள்.



இனி நாம் மற்றவரின் மின்னஞ்சலின் முகவரியை பயன்படுத்தி நாம் வேறு நபர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அவர்கள் Show Details என்பதை திறந்து பார்க்காதவரை சம்பந்தபட்ட நபர் தான் அனுப்பியிருப்பார் என நினைக்க கூடும், அதன் பின் Show Details திறந்து பாருங்கள் ஜிமெயிலில் இருந்து நேரடியாக அனுப்பிய மின்னஞ்சலுக்கும் நாம் மற்றவர்களின் மின்னஞ்சலை பயன்படுத்தி அனுப்பியதற்கும் வித்யாசம் புரியும்.



இனிமேல் உங்கள் நண்பரின் பெயரில் ஏதாவது தவறான மின்னஞ்சல் வந்தால் கொஞ்சம் பொறுமையாக பாருங்கள் விபரம் புரியும் அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து வேறு நண்பர்களுக்கு தவறான மின்னஞ்சல் போகிறது என்றாலும் உடனே பதட்டபடாதீர்கள் உங்கள் வலைத்தளமோ அல்லது மின்னஞ்சலோ மற்றவர்களால் ஹேக் செய்யப்பட்டால் முதல் வேளையாக அவர்கள் செய்வது உங்கள் பாஸ்வேர்ட் செட்டிங்ஸ் மாற்றி விடுவார்கள் ரீட்டிரைவ் மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் எல்லாவற்றையும் மாற்றுவதுடன் உங்கள் முழுத்தளத்தையும் அழித்து விடுவார்கள் உங்கள் சொந்த தகவல் எல்லாம் திருடப்படும் இவை எதுவும் நடக்காமல் இருந்தால் நிச்சியும் உங்களுக்கு தெரிந்த யாரோ ஒருவர் அல்லது மேலே சொன்ன சில வியாபார தளங்களும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி விளையாடுகிறார்கள் என புரிந்து கொள்ளுங்கள் உடனடியாக இதற்கெல்லாம் பாஸ்வேர்ட் மாற்றுவதில் பெரிதாக பயன் இல்லை.

இந்த வழிமுறையை உங்களுக்கு தெரிந்துகொள்ள மட்டுமே தயவுசெய்து நீங்கள் இதனை தவறான வழிக்கு பயன்படுத்தாதீர்கள் குற்றம் செய்ப்வர்கள் நெடு நாட்கள் தப்பிக்க முடியாது.

Saturday, September 4, 2010

Sunday ஸ்பெஷல் - மீன் பிரியாணி(05/09/2010)


தேவையானவை
:-
  • வஞ்சர மீன் - 1 கிலோ(முள் இல்லாத எந்த மீனும் போடலாம்)
  • பாஸ்மதி அரிசி - 2 கப்
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • நெய் - 2 தேக்கரண்டி
  • பட்டை - 2
  • லவங்கம் - 4
  • ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  • பிரிஞ்சி இலை - 1
  • சோம்பு - 1 தேக்கரண்டி
  • வெங்காயம் - 1/2 கப்
  • இஞ்சி,பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
  • தக்காளி - 3
  • கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு
  • புதினா - சிறிது
  • பச்சை மிளகாய் - 5
  • கறிமசாலா - 1 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • தேங்காய் விழுது - 1/2 கப்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :-

  • மீனில் லேசாக உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், லெமன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின் குக்கரில் எண்ணெய், வெண்ணெய், நெய் சேர்த்து பட்டை, லவங்கம், ஏலக்காய் பொடி, பிரிஞ்சி இலை, சோம்பு சேர்க்கவும். வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • அதனுடன் கறிமசாலா, மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வேண்டுமெனில் சிறிது நெய் விட்டு வதக்கவும்.
  • பிறகு தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • கடைசியில் ஊற வைத்த மீனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு அரிசியை சேர்த்து லேசாக வதக்கவும்.
  • பின் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு காரம் பார்த்து குக்கரை மூடி 1 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
  • பின் 15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து நெய், கறிவேப்பிலை சேர்த்து லேசாக கிளறிய பின் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

நோய் தீர்க்கும் காய்கனிகள் (04/09/2010)

மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்
'சி'உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …'சி'† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.


பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …'ஏ†' உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பென்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக மாட்டீர்கள்.எந்த வகையானதொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி

அன்னாசி பழத்தில் வைட்டமின் …'பி' உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அhpய மருந்தாகவும் இருக்கிறது.
தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றhக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …'ஏ' சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜPரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிhpல் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

வாழைப்பழம்

மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜPரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தாpக்க வாய்ப்பாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றhது.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றhக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

திராட்சைப் பழம்

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சாpயாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றhக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளாpல் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.
தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றhக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும்.
எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகாpப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜPரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

பேரீச்சம்பழம்

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

எலுமிச்சம்பழம்

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீhpல் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.
பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜPரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிhpத்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Friday, September 3, 2010

உடல் ஆரோக்கியத்திற்கு சில ஹெல்த் டிப்ஸ் (03/09/2010)

1. தண்ணீர் ஒரு நாளை குறைந்தபட்சம் 3 - 5 லிட்டர் வரைக்கும் குடித்தால் நல்லது.

2. குளிர்ந்த தண்ணீர் (ஃபிரிஜ் வாட்டர்) குடிப்பதைவிடவும், சாதாரண தண்ணீர் , பானையில் ஊற்றி வைத்த தண்ணீர் அல்லது சுடுத்தண்ணீர் குடிப்பது நல்லது.

3. சாப்பாட்டிற்கு பிறகு அல்லது எப்போதுமே சுடுத்தண்ணீர் குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் எளிதாக வெளியேற்றப்படும்

4. FAST FOOD சாப்பிடுவதை நிறுத்திவிடலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம்.

5. பலகாரங்கள் சாப்பிடுவதை விட பழங்களை சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ளலாம்.

6. ஐஸ் கிரிம், பேக்கரி ஐடம்ஸ் எல்லாம் மாதம் ஒரு முறை சாப்பிடலாம், அல்லது நிறுத்திவிடலாம். (இது பெரியவர்களுக்கு மட்டும்)

7. இரவில் சாப்பிடவுடன் தூங்கக்கூடாது.

8. கண்டிப்பாக உடற்பயற்சி செய்ய வேண்டும், ஒரு குட்டி வாக் போகலாம். குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி உடம்புக்கு தேவை.

9. உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், நல்ல குத்து பாட்டு போட்டு விட்டு, 15-20 நிமிடம் நன்றாக டான்ஸ் ஆடலாம். ஆடத்தெரியவில்லை என்றாலும் கையை காலை ஆட்டி ஏதாவது செய்தால் போதும் அதுவும் உடற்பயற்சியே.

10. முடிந்தவரை நம் வேலையை நாம் செய்ய பழகிக்கொள்ளலாம், வீட்டு வேலைகளிலும் சரி, அலுவலக வேலையிலும் சரி.. நம்மை நாம் ஆக்ட்டிவாக வைத்துக்கொண்டால் நம் உடலுக்கு நல்லது.

அன்புத் தோழி... (03/09/2010)

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..


இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!

இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி !

சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!!

எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!

எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!

வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !

சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி !

நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!

அருகில் இல்லா வசந்தமே!!! (03/09/2010)

எனது வெள்ளை காகிதங்களில்
கவிதைகளை நிரப்புவது
உன் நினைவுகள் மட்டுமே
வெறும் உறவென்றால்
மறந்து விடுவேன்
என் உயிர் துடிப்பதை
எவ்விதம் மறப்பேன்??
பிரிவு அது என்றுமே
நம்மில் தோற்று போகும்


உன்னை நிழலாய்
தொடர நினைக்கும்
என் நட்பு
உன் இதயம் தன்னில்
மறைந்து கொண்ட
சோகங்களை
தோண்டி எடுத்து
என்னுள் புதைத்து கொள்ள
விரும்புகிறது
நான் பார்க்க
நீயாவது புன்னகை அணிந்து கொள் ...!!!
பிரிவுக்காலம்
எப்போதும் அதில்
உன் நினைவுகளின் துணை
கொண்டு சிரித்துகொள்கிறேன்
இல்லை என்றால்
சிரிக்கவே மறந்திருப்பேன்



எனக்குள் வாழ்ந்து கொண்டு
எனக்காய் துடிக்கும்
உனது நட்பின் ஆழம்
கண்டு கண்ணீர் வடிக்கிறேன்
என் அருகில் நீ இல்லை என!!!!

சும்மா சிரிங்க!!! (03/09/2010)

கம்யூட்டர் கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சாங்க...

பேண்ட்ட கூட விடமட்டுதய்யா......