இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Thursday, April 21, 2011

30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி? (2104 2011)




தவிர்க்க வேண்டிய உணவுகள்
========================

1) பால், தயிர் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

2) புளியைத் தவிர்க்க வேண்டும்.

3) உப்பைக் குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனுக்கும்
குறைவான உப்பை பயன்படுத்தவும் .

4) எண்ணெய் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

5) தினம் ஒரு கொடம்புளி கீற்றினை குழம்பில் இட்டு அதைச்
சாப்பிட வேண்டும் .

6) இரவில் நான்கு துண்டுகள் பப்பாளி சாப்பிட வேண்டும் .

7) காலையிலும், மாலையிலும் கிரீன் டீ மட்டுமே குடிக்க வேண்டும் .

8) இனிப்பை தொடவே கூடாது .

9) காய்கறிகள் இரண்டு கப் என்றால் அரிசி சாதம் ஒரு கப் சாப்பிட வேண்டும் .

10) தேங்காயைத் தவிர்க்க வேண்டும்.

11) கிழங்கு வகைகள், பூமியின் அடியில் விளையும் காய்கறிகள் தவிர்க்க வேண்டும்.

12) மட்டன், சிக்கன் தவிர்க்க வேண்டும்.


சாப்பிட வேண்டிய உணவுகள்
==================

காலை (7.30 மணிக்கு)
==================

* கிரீன் டீ ஒரு கப் தினம் தோறும்.

* தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு.

* இட்லி என்றால் மூன்று, தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி.

* சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய், எண்ணெய் சேர்க்காமல் செய்தது)

* ஒரு கப் சாதம்(சுடுதண்ணீர் சேர்த்தது) அத்துடன் இரண்டு கப் காய்கறிகள்

>> மேற்கண்டவற்றில் ஏதாவதொரு உணவு காலையில் எடுத்துக் கொள்ள வேண்டும் .

* காலை பத்து மணியளவில் சில மேரி (அ) எதாவது பிஸ்கட்டுகளுடன் கொஞ்சம் தண்ணீர்.

மதியம் ( 12.45க்கு)
================
கீரை, ஒரு கப் சாதம், இரண்டு கப் வெந்த காய்கறிகள், பருப்பு, முட்டையின் வெள்ளைக்கரு (வாரம் ஒரு தடவை மட்டும்), சாம்பார், குழம்புகள் இவற்றில் காரம் அதிகமிருக்க கூடாது . புளிக்குப் பதில் கொடம்புளி பயன்படுத்தவும் . கிழங்கு வகை காய்கறிகளைத் தொடவே வேண்டாம் . நாட்டுக் காய்கறிகளுடன் பருப்பு வகைகள் சேர்த்துக் கொண்டால் நல்லது.

மாலை (4.00க்கு)
================
* ஒரு கப் கிரீன் டீயுடன், சில மேரி (அ) எதாவது பிஸ்கட்டுகள்.

இரவு(7.30க்கு)
===========
* தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு

* சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய், எண்ணெய் சேர்க்காமல் செய்தது)

* அத்துடன் மதியம் மீதமான காய்கறிகள் கொஞ்சம்

படுக்கும் முன்பு
==============
* ஐந்தோ அல்லது ஆறோ துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளி.

* இரண்டு லிட்டர் தண்ணீரை பருக வேண்டும் .

மேற்கண்ட உணவினைச் சாப்பிட்டு வாருங்கள் . பின்பு ஒரு மாதம் எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுங்கள் . அடுத்த மாதம் எண்ணெய் சேர்த்துச் சாப்பிடுங்கள் . மட்டன், மீன், சிக்கன் மாதமொருமுறைச் சேர்த்துக் கொள்ளுங்கள் . அவ்வளவுதான் உடல் எடை குறைந்து, உடல் லேசானது போல ஆகிவிடும் .

*முக்கியமாக கவனிக்க வேண்டியது: நேரம் தவறாமல் சாப்பிட

வேண்டும். அதுமட்டுமின்றி இரவு பத்து மணிக்கு உறங்க சென்று
விட வேண்டும்.



என் குறிப்பு : * மேலதிக தகவல்களுக்கு உங்களுடைய டடீசியன்களின்
பரிந்துரைகளை தொடரும்படி வேண்டுகிறேன்.

* இது எனக்கு மெயிலில் வந்த தகவல் .


Wednesday, April 20, 2011

கடை(சி ) பார்வை வேண்டுமடி!.... (2004 2011)




அன்பு செல்லமே !,

காலனின் அழைப்பை
எதிர் நோக்கி ,
என் இறுதி
உறக்கத்தை தேடும்
என் விழிகளுக்குள்
உன் நினைவே !!

உன்னை தேடும்
இந்த உயிருக்கு
இனி அவள்
தடை இல்லை !
மனைவியின் மடியில்
மன்னிப்பாய்
என் கண்ணீர் !!

ஆறடியில் அடங்குவேனோ
அக்கினியில் சிதைவேனோ
நான் அறியேன் ?
உன் திருபாதம்
நாடி என்
இறுதி கடிதம் !!!

நாம் பிரிந்து
நாலு பத்து
வருசங்களாச்சு !

வாலிப காதலை
விட - இந்த
வயோதிக காதல்
வலிக்குதடி !

நீ
தனியாளோ ? - இல்லை
துணையோடோ ?
கேட்க வரம்பில்லை,
ஆனால் மனமில்லை
பாராமல் பிரிய
இறுதியாக ?!!!

உன்
கடை(சி ) பார்வை
வேண்டுமடி!
காட்டுக்கு செல்லும்
முன்!!!

Saturday, April 16, 2011

உனக்காக சாகலாம் ..............சும்மா !!! (1604 2011)

திருடி

நீ களவாடியது
இதயம் மட்டுமல்ல
என் இரவுகளையும் தான் ....

நெறைய பேசணும்
நெறைய திட்டனும்
ஏதோ
அந்த வார்த்தைகள்
உனக்கு வக்காலத்து
வாங்குதே !!!

கவிதைகளில் மட்டுமே
உன்னை
முத்தமிட்டேன் ........
கவிதைகளில்
மட்டும் தானடி
தொட்டு இருப்பேன் ...............

ஏனடி போனாய்
உன் விழிகள் என்னை
தின்ற வினாடிகள் பொய்யா?
அந்த விழிகள் இரண்டில்
நான் கண்ட
காதல் (அன்பு )
பொய்யா ?

பரவால தங்கம்

நீ தான

இப்படி கோடி முறை தோற்பேன்
உனக்காக ?

கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? (1604 2011)

பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.

ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை.

வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.

முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.

அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும். அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.

இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும்.

மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது.

அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம்.

ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது.

சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும்.

மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.

தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

கர்ப்ப கால உறவு நல்லதா? (1604 2011)

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை எவ்வளவு அதிகரிக்கவேண்டும்? இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கலாம்?

கர்ப்பிணிப் பெண்ணின் எடை சாதாரண மாக கர்ப்ப காலத்தில் ஒண்பதில் இருந்து பதிமூன்று கிலோ வரை கூடுதலாகும். முதல் மூன்று மாதங்களில் உடல் எடை குறையலாம். பிறகு சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே செல்லும். மாதத்துக்கு இரண்டு கிலோ அதிகமாகும். வாரத்திற்கு ஒரு கிலோ அதிகமானா லோ உடல் எடை குறைந் தாலோ உடனே மருத்து வரை அணுக வேண்டும். இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்யும் போது, சாதாரணமாக இருபத்தைந்து வயதுப் பெண்ணுக்கு 120/80 இருக்க லாம். நான்கு மாதங் களுக்குப் பிறகு 130/90 வரை இருக்கலாம். ஆனால், தொடர்ந்து 130/90க்கு மேல் அதிகமாக இருந்தால், உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு பிரசவ ஜன்னி ஏற்படலாம்.

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது நல்லதா? இதனால் கர்ப்பிணிக்கும், கருவுக்கும் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?

இதில் குறிப்பிடத்தகுந்த திட்டவட்டமான கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. ஆயினும், கூடிய வரையில் கர்ப்பம் ஆன நிலையில இது அளவோடு இருப்பது நல்லது. பொதுவாக, கர்ப்பம் ஆரம்பமான நிலையில் அதாவது பத்து வாரங்கள் வரையில் இந்த உறவு ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். இல்லையெனில், குறைப் பிரசவம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதற்குப் பிறகு ஏழாவது மாதம் வரையில் அவரவர் சௌகரியத்துக்கு ஏற்ப தாம்பத்திய உறவு கொள்ளலாம்.

கர்ப்பத்துக்குப் பிறகு பெண் உறுப்பு ஓரளவு திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆகையால் தாம்பத்திய உறவை இந்த நிலையில் அடியோடு நிறுத்துவது நல்லது. இந்த அடிப்படையில்தான் தாய்மைஅடைந்த பெண்களை ஏழாவது மாதத்திலேயே பெற்றோர்கள் வீட்டுக்கு அனுப்பும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள்.

‘D’ அண்ட் ‘C’ செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? கருப்பை தொற்றால் ஏதேனும் பாதிப்பு உண்டா?

ஒரு பெண் முதன் முதலாக உண்டாகும் தனது கர்ப்பத்தை டி அண்டு சி செய்துவிட்டால் அடுத்து அவளுக்கு கர்ப்பமே உண்டாகாது என்பது விஞ்ஞான பூர்வமாக உண்மையில்லை. ஆனால், சில சமயங்களில் அப்படி நேர்ந்து விடுவது உண்டு. டி அண்டு சி செய்த பிறகு கருப்பையில் நோய் தொற்று ஏற்பட்டாலோ? கருப்பையின் உட்சுவரில் வடு ஏற்பட்டதாலோ கர்ப்பம் தரிக்க வாய்ப்பு ஏற்படாமல் போகலாம். ஆனால், இன்றைய நவீன மருத்துவத் துறையில் இந்த எல்லாக் குறைகளையும் அகற்றி குணப்படுத்த வழிமுறைகள் உள்ளன. ஆகவே, அவளுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை நவீன மருத்துவ வசதிகளால் அதிகரிக்க முடியும்.

பிரசவமான பிறகு கருப்பையில் இருந்து நஞ்சு வெளியேறும்போது, தொற்றுநோய் வருமா? இதற்கு என்ன பெயர்? இதற்கு மருத்துவரை அணுகலாமா?

பிரசவமானதும் கருப்பையில் இருந்து நஞ்சு பிரிந்து வந்த இடத்தில் இரத்தம் சளி கலந்து வெளியேறுகிறது. இதை லோசியா என்கிறோம். சரியாக இதைக் கவனிக்காவிட்டால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. முதல் நான்கு நாட்களுக்கு லோசியா சிவப்பாக இரத்தம் கலந்ததாக இருக்கலாம். தினமும் இரண்டு முதல் நான்கு அவுன்ஸ் வெளியேறலாம். ஐந்தில் இருந்து ஏழு நாட்கள் வரை லோசியா பின்க் கலராக அல்லது பிரவுன் கலராக இருக்கலாம். இது இரத்தம் குறைவாகவும், குறைந்த அளவிலும் இருக்கும்.

ஏழு நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும். இது ஒருவருக்கொருவர் வேறுபடலாம். நடைமுறையில் பார்க்கும்போது இயல்பாகவே இருக்கும் தாய் முதல் நாள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை Diaper ஐ மாற்றுவாள். இரண்டு, மூன்றாவது, நான்காவது நாட்களில் குறைந்து காணப்படலாம். அதற்குப்பிறகு நான்கு மணி நேரத்தில் பஞ்சில கறை மட்டுமே காணப்படும். லோசியாவில் ஒருவித இரத்தவாடை அடிக்கலாம். ஆனால் துர்நாற்றம் ஏதும் இருக்கக்கூடாது. அப்படி ஏதேனும் இருந்தால் நோய் தொற்றாக இருக்கலாம். இவர்கள் மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது.

குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? பால் குடிக்கலாமா?

குழந்தை பிறந்தவுடன் எளிதில் ஜீரணமாகும் உணவை உட்கொள்ளவேண்டும். தான் கர்ப்பமாக இருந்தபோது, எப்படி நல்ல சத்துள்ள உணவை கூட்டிக் கொண்டாளோ அதே போல் தொடர வேண்டிய உணவு என்று சொல்லும் போது முடிந்தவரை பால் நிச்சயம் குடிக்க வேண்டும். நிறைய காய்கறிகள், கீரைகள், பழவகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவேண்டும். மருத்துவ ஆலோசனையின்படி உணவுக்கட்டுப்பாடு எதும் இல்லையெனில் சத்துணவை உட்கொள்வதன் மூலம் பழையபடி நல்ல உடல்நிலைக்குத் திரும்ப முடியும்.

ஸ்கேன் செய்வதால் குழந்தையின் வளர்ச்சி கர்ப்பப்பையில் பாதிக்கப்படுமா? எப்படி, எவ்வாறு ஸ்கேன் எடுப்பது? இதனால் ஏற்படும் பயன்கள் என் னென்ன?

கண்டிப்பாகக் கிடையாது. அல்ட்ரா சவுண்டு மூலம் குழந்தை நன்றாக வளர்ந்துள்ளதா? ஏதேனும் குறையிருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடிகிறது. ஸ்கேனில் பார்க்கும் போது குழந்தை யின் வளர்ச்சி மாதா மாதம் அதிகரிப்பது நமக்கு தெரியவரும். சாதாரணமாக பதினெட்டில் இருந்து இருபத்து நான்கு வாரத்திற்கு ஒரு ஸ்கேனும், முப்பத்தாறாவது வாரத்தில் ஒரு ஸ்கேனும் எடுப்பார்கள். சாதாரண கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும்தான். சிக்கலான பெண்களுக்கு அடிக்கடி தொடர்ந்து ஸ்கேன் செய்ய வேண்டி வரும். ஸ்கேன் மூலம் குழந்தை பெரியதாகிறதா, நேராக இருக்கிறதா குறுக்கு வாட்டத்தில் இருக்கிறதா? சிசு எப்படி உள்ளது. குழந்தைக்கு இரத்தஓட்டம் சரியாக உள்ளதா? குழந்தையைச் சுற்றி உள்ளநீர் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அல்ட்ரா சவுண்ட்டு ஸ்கேன் மூலம் எழுபத்தைந்து சதவீதம் பெண்களின் குறைபாடுகளை கண்டுபிடித்து சிகிச்சை பெறமுடியும்.

நரம்புத்தளர்ச்சி என்பது ஆணுக்கு மட்டுமே வரக்கூடியதா? பெண்ணுக்கு நரம்புத்தளர்ச்சி வருமா? நரம்புத்தளர்ச்சிக்கு என்ன காரணம்? அதிர்ச்சியால் நரம்புத்தளர்ச்சி வருமா?

நரம்புத்தளர்ச்சி என்பது ஆண், பெண் இருவருக்குமே ஏற்படக்கூடிய ஓர் பலவீனமாகும். இது ஆண்களுக்கு ஏற்படின் ஆண்மைக் குறைவு எனவும், பெண்களுக்கு ஏற்படின் வெள்ளைப் படுதல் எனவும் கூறுகிறோம். இவ்விரு பாலருக் கும் இந்த குறைபாடு எந்த வயதிலும் ஏற்படலாம். விபத்துக்கள், மரபுக் கோளாறுகள் மற்றும் சரியான உணவுப் பழக்க வழக்கம் இல்லாமை ஆகியவற்றால் நரம்புத்தளர்ச்சி ஏற்படுகிறது..

நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவுகள் - இவற்றின் பாதிப்புகள் எப்படி இருக்கும்? இவற்றின் முக்கியமான அறிகுறிகள் என்னென்ன? நரம்புத் தளர்ச்சி நீங்க மருந்துகள் என்னென்ன?

நரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையை ஆண்மைக்குறைவு என்கி றோம். இதனால் வீட்டில் மக்கட்செல்வம் இல்லா மலும் போய்விடும். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

1. நல்ல குணமும், நலமும் மனமும் இல்லாமல் மனதில் அமைதி இல்லாதவர்கள்.

2. நோய்வாய்ப்பட்டதாலோ விபத்தாலோ தண்டுவடம் பழுதடைந்து விடுதல்.

3. குடி, போதைப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் வழக்கம்.

4. காரம், புளிப்பு முதலியவற்றை உணவில் மிக அதிக அளவு சேர்த்துக் கொள்ளுதல்.

5. இரவில் தேவைக்கும் அதிகமாக உணவை உட்கொள்வது.

6. விஷக் காய்ச்சல் அல்லது அம்மை போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அதனால் சில பக்க விளைவாகவும் நரம்புத் தளச்சி ஏற்படலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கீழேயுள்ள அறிகுறிகளைக் கொண்டு நரம்புத் தளர்ச்சியை அறிந்து கொள்ளலாம்.

அ. தாம்பத்திய உறவின்போது ஆணுறுப்பு விரைவில் துவண்டு விடுதல்.

ஆ. விரைப்பு இருந்த போதிலும் விந்து வெளியேறி விடுவது.

இ. விந்து வெளியேறாமலேயே இருப்பது.

இந்த அறிகுறிகள் எல்லாம் நரம்புத் தளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள். ஆனாலும் இதை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும். இதுவொரு குறைபாடுதான். நோய் அல்ல. ஆகவே, இதனை எளிய மூலிகை மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதலில் நரம்புத் தளர்ச்சியினால் தனது வாழ்வே அஸ்தமனமாகிவிட்டது என்று தவறாகப் புலம்பக் கூடாது. குடிப்பழக்கம் இருந்தால் அதனைக் கைவிட வேண்டும். இவர்கள் வெந்நீர் குளியல் செய்யலாம். ஒரே வேலை வேலை என்று இருக்காமல் குடும்பத்தாருடன் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். மனதை வேலைகளில் இருந்து விலக்கி வைத்து குடும்பம், மனைவி, மக்கள் என்று ஈடுபடுத்தவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மனதளவிலான நரம்புத்தளர்ச்சி நீங்கி புத்துணர்வு பெறலாம்.

ஒரு பெண்ணுக்கு வெள்ளைப்படுதல் உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது? இழ்ன் அறிகுறிகள் என்னென்ன? இதனால் பெண் உறுப்பு எப்படி பாதிக்கப்படும்?

பொதுவாக பெண்களின் கருப்பையானது வலுவிழந்து பலவீனமடையும் காலங்களில் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது. இளம் வயது முதல் முதிய வயது வரை எந்த வயதிலும் இது பெண்களைத் தாக்கலாம். உறுப்பில் இருந்து மிகுந்த வலியுடன் துர்நாற்றத்துடன் ஒரு வித திரவம் வெளியேறுவதையே வெள்ளைப்படுதல் என்கிறோம். இரு ஒரு பெண்ணைத் தாக்கியுள்ளது என்பதை பின்வரும் அறிகுறிகளால் அறிந்து கொள்ளலாம்.

1. உறுப்பில் இருந்து கெட்ட வாடையுடன் வரும் திரவம்.

2. இரத்தம் கலந்த திரவம்.

3. இந்த சமயத்தில் இடுப்பு, அடி வயிறு மற்றும் காலில் வலி ஏற்படுதல்.

4. உடல் எடை குறைந்து மெலிதல்.

5. சிறுநீரக எரிச்சல்

6. களைப்பு ஏற்படுதல்

7. உறுப்பில் நமைச்சல், எரிச்சல் மற்றும் புண் ஏற்படுதல்.

பால்வினை நோயால் வெள்ளைப்படுமா? இதனால் நரம்புகள் பாதிப்படையுமா? வெள்ளைப்படுவதால் குழந்தையில்லாமல் போகுமா?

கருப்பையின் வாயில் புண் இருப்பவர்களுக்கும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள்ளும்போது கருப்பை புண், கருப்பையில் கட்டி அல்லது தசை வளர்ச்சி, டி.பி. புற்று நோய் மற்றும் நுண் கிருமிகளால் கருப்பை பாதிக்கப்படல், மாதவிலக்குக் காலங்களில் பயன்படுத்தப்படும் பருத்திதுணிகள் பெண்ணுறுப்பினுள் தங்கி விடுதல் போன்ற காரணங்களாலும் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது.

இதனால் நரம்புகள் விரிவடைந்து கருப்பை மீதுபட்டு வலுவிழந்து விடும். வெள்ளைப்படுதலால் கரு முட்டைகள் கருப்பையைச் சென்று அடையாமல் வெளியேறுகிறது. ஆகவே, வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்டோர் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் ஏற்படுவதில்லை. குழந்தை பாக்கியம் பெரும்நிலையும் இல்லாமல் மன வேதனைதான் மிஞ்சும். இதனால் பாதிக்கப்பட்ட பெண் தப்பித்தவறி கருவுற்றாலும் கரு முழுமை பெறும் என்று முடியாது.

-டாக்டர். ப.உ.லெனின. M.D.(Homeo), புதுச்சேரி.

கர்ப்பத்திற்கான அறிகுறிகள் (1604 2011)

1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்? என்பது பற்றி பார்ப்போம்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.

கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.

இவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.

இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :

* மாத விலக்கு தள்ளிப்போகுதல்

* குமட்டல்

* இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

* புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்

* வாசனையைக் கண்டால் நெடி

* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்

* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு

* புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை

- குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கை-கால்களும் உருவாகின்றன.

இந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.

மேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…

1. மாதவிலக்கு நிற்பது

கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.

இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.

நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.

2. களைப்பு

பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.

3. மசக்கை

இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.

சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

அதுசரி… இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?

கருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.

இதற்கு காரணம் என்ன?

இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.

4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.

5. மார்பகப் பகுதி மாற்றங்கள்

முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.

கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்

சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.

7. வயிறு பெரிதாகுதல்

கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.

கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.

இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.

அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.

பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.

அந்த பரிசோதனை முறைகள் :

1. சிறுநீர்ப் பரிசோதனை

இந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும். காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

2. ஹார்மோன் பரிசோதனை

இது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம். காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை

மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து கொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.

4. கரு நெளிவுப் பரிசோதனை

கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாத வாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது `குயிக்கனிங் டெஸ்ட்’ என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.

இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.

Thursday, April 14, 2011

மனதோடு போராடாதீர்கள்! (1404 2011)


உங்களுக்கு ஒரு சவால். இனி அரை மணி நேரத்திற்கு உங்களால் நீர்மூழ்கிக் கப்பலை நினைக்காமல் இருக்க முடியுமா?

முயற்சி செய்து பாருங்கள். ஆண்டுக் கணக்கில் நீங்கள் நீர்மூழ்கிக் கப்பலை நினைக்காதவராய் இருக்கலாம். ஆனால் இனி அரை மணி நேரத்திற்கு அதை நினைக்காமல் இருப்பது சுலபமான விஷயமல்ல.

மனம் விசித்திரமானது. எதையும் நினைக்க வேண்டாம் என்றோ, மறந்து விடு என்றோ கட்டளையிட்டு சாதித்துக் கொள்வது சுலபமான விஷயம் அல்ல. கட்டளைகளை மதித்து அப்படியே பின்பற்றும் பழக்கம் மனதிற்குக் கிடையாது.

நிறைவேறாத காதலுக்குப் பிறகு காதலியை அல்லது காதலரை மறக்க முனையும் காதலர்களுக்கு அது தெரியும். ஒரு பலவீனமான பழக்கத்தைப் பழகிக் கொண்ட பின் விட்டொழிக்க முடிவு செய்யும் மனிதர்களுக்கு அது தெரியும். குணம் என்னும் குன்றேறி நின்ற பெரியோர்கள் கூட சமயங்களில் மனத்தை அடக்கப் போராடியிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன், ஸ்ரீராமனே கூட யோக வாசிஷ்டத்தில் வசிஷ்டரிடம் புலம்புகிறான். "அலைகடலை அடக்கிக் குடித்து விடலாம்; மேரு மலையை பெயர்த்து எறிந்து விடலாம்; சுட்டெரிக்கும் கனலை விழுங்கி விடலாம்; ஆனால் மனத்தை அடக்குதல் எளிதல்ல."

அப்படியானால் இந்த மனதை எப்படித் தான் வெல்வது? ஆன்மீக சித்தாந்தங்களுக்குப் போகாமல், நடைமுறைப்படுத்தக் கூடிய எளிய வழி ஏதாவது இருக்கிறதா?

இருக்கிறது. முதல் அறிவுரை மனதோடு போராடாதீர்கள். நீங்கள் நிச்சயமாகத் தோற்றுப் போவீர்கள். அதனுடன் போராடப் போராட பலம் பெறுவது மனமே; தளர்ச்சியடைவது நீங்களே.

போராடுவதற்குப் பதிலாக உங்கள் மனதிற்குப் பற்றிக் கொள்ள வேறொன்று கொடுங்கள். குழந்தை கையில் இருந்து ஒரு பொம்மையை வாங்கி அது அழ ஆரம்பிக்கும் முன் இன்னொரு பொம்மையைத் தருகிறோம் அல்லவா? அதைப் போல் தான். அந்த இன்னொரு பொம்மையும் ஏதோ ஒன்றாக இருக்காமல் குழந்தை ரசிக்கும்படியான பொம்மையாக இருக்க வேண்டும். குழந்தையின் கவனம் அதில் திரும்பும். குழந்தையின் தொந்திரவு இருக்காது.

மனதைக் காலியாக வைத்திருக்க ஞானிகளுக்கு முடியலாம். சாதாரண மனிதர்களுக்கு அது மிகக் கடினமே. ஒரு தேவையில்லாத எண்ணத்தை மனதிலிருந்து எடுத்து விட வேண்டுமானால் அதற்கு எதிர்மாறான ஒரு நல்ல எண்ணத்தை நீங்கள் மனதிற்குக் கொடுங்கள். தானாக அந்த வேண்டாத எண்ணம் உங்களுக்குள் வலு இழக்கும். இருட்டைத் துரத்த முயற்சிக்காதீர்கள். ஒரு தீபத்தை ஏற்றினால் இருட்டு தானாகப் போய் விடும்.

இன்னொரு அறிவுரை மனதோடு வாக்குவாதமும் செய்யாதீர்கள். மனம் ஜெயித்து விடும். என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செயல்படுத்துங்கள். உதாரணத்திற்கு குடிப்பழக்கம் போன்ற ஒரு தீய பழக்கத்தை வெற்றி கொள்ள எண்ணுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வழக்கமாய் ஒரு வீதியில் ஒரு கடையில் மதுவை வாங்குவீர்களேயானால் அந்த வீதியில் அந்தக் கடை வரும் போது உங்களை உந்த மனம் ஆயிரத்தெட்டு காரணங்களை வைத்திருக்கும். நீங்கள் செய்யக் கூடிய புத்திசாலித்தனமான செயல் என்ன தெரியுமா? மனம் என்ன சொல்லிக் கொண்டிருந்தாலும் பொருட்படுத்தாமல் வேகமாக நடந்து அந்தக் கடையைக் கடப்பது தான். மனதின் பேச்சுக்கு கொஞ்சம் காது கொடுத்தீர்களானால், லேசாகத் தயக்கம் காட்டினீர்களானால் நீங்கள் தர்க்கிக்க முடியாத பல வாதங்களை உங்கள் முன் வைத்து மதுவை வாங்க வைத்து தான் மறு வேலை பார்க்கும். மனம் நீங்கள் கடையைக் கடந்து விட்டால் கூட திரும்பி வரச் சொல்லும். நீங்கள் திரும்பி வர முடியாத தூரத்திற்குச் சென்று விடும் போது தான் மனம் தன் முயற்சியைக் கைவிடும்.

எனவே மனதோடு போராடாதீர்கள். தர்க்கம் செய்யாதீர்கள். எது நல்லது என்பதை மட்டும் உறுதியாக அறிந்திருங்கள். தீய எண்ணமானால் நல்ல எண்ணத்திற்கு உடனடியாக மாறுங்கள். தீய செயலுக்குத் தூண்டுதலானால் உடனடியாக அந்த சூழ்நிலையை விட்டு நகருங்கள். மனதைப் பொருட்படுத்தாமல், அதனுடன் வாதிட்டு நிற்காமல், நேரம் தாழ்த்தாமல், தயக்கமில்லாமல் அந்த நல்லதை செயல்படுத்துங்கள். மனதின் அபஸ்வரம் ஒலிக்க ஆரம்பிக்கும் அந்த முதல் வினாடியிலேயே நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். காலம் தாழ்த்தினால் தோல்வியும் நிச்சயம்.

Wednesday, April 13, 2011

உனக்காக நான்...!! (1304 2011)



நீ நினைக்கும் படியெல்லாம்
மாற்றி கொண்டு
உன்னை மட்டுமே நிஜமாக நினைத்து
வந்தேன்....!!!

உறவுகள் மறந்து உன்னை மட்டுமே
உண்மையாய் நினைத்து...
உன் உள்ளங்கை பிடித்து வந்தேன்..!!

பார்க்கும் பார்வையெல்லாம்
உன் உருவமாகவும்..!

கேட்கும் ஒலியெல்லாம்
உன் குரலாகவும்..!!

உன்னை துணையாய் மட்டுமின்றி
நேசத்தையும் முத்திரையிட்டு
வந்த எனக்கு...

நீ கொடுத்த பரிசோ
கவலை என்பதின் அர்த்தமும்..
கண்ணீரின் அர்த்தமும்..


சோகத்தில் உன் தோள் சாயும் போதெல்லாம்
என்னை சோதித்து பார்க்கின்றாய்..?

உன்னை உயிராக நினைத்த
என் உயிரையும் எடுக்க
முயற்சிக்கிறாய்...!!!

Thursday, April 7, 2011

வெட்கமின்றி முத்தம் கேட்டேன் (0704 2011)

விளையாட்டாக உன்
காதலை கேட்டேன்....
வெட்கத்தோடு சரி
என்றாய் !

வெட்கமின்றி முத்தம்
கேட்டேன்...
விளையாட்டாக சரி
என்றாய் !

எப்பொழுது வாழ்க்கை
என்றேன் ...
என்ன வேடிக்கை
என்கிறாயே !!

அன்பு தோழியே எங்கு இருகிறாய் நீ? (0704 2011)

அன்பு தோழியே
எங்கு இருகிறாய்
நீ?

எவ்வளவோ கதைகள் ...
சின்ன சின்ன
சிணுங்கல்கள் ...
இடை விடாத
உன் அழைப்புகள்....
இன்றும் சாரல்
போல் நினைவுகளில் ...

எப்படி எடுத்தாய்
உரிமையை
என்னையும் அறியாமல் ...

இரவெல்லாம் நீமட்டும்
தான் பேசுவாய் ...
இறுதியில் காதலை
சொன்னால் மட்டும் ...
மௌனம் ஆக்குகிறாயே
ஒவ்வொரு இரவையும்....

ஒளிவு இல்லை
மறைவும் இல்லை
ஒன்றை தவிர ..!
நட்பை தாண்டி
நாளாச்சுடி..!

காதலை ஏற்க்க
மனம் இல்லையா ?
இல்லை .........
உன் மனதில்
நான் இல்லையா ?

என் கடைசி
கேள்வியும் ...
உன் கடைசி
மௌனமும் ....
காதலால் தான் ?

அன்று வரை
ஒவ்வொரு
இரவின் இறுதி
தான் மௌனமாகும் !!!

இன்றோ
இரவெல்லாம் மௌனமான
ரணமடி !!!!

என் அன்பு தோழியே
எங்கு இருகிறாய்
நீ?