இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Wednesday, December 29, 2010

பெண்ணுக்குள் இருக்கும் கடவுள் (2812 2010)

பெண்கள் மனசுல என்ன இருக்கு?.. அவங்க என்ன விரும்பறாங்க.. இதெல்லாம் என்ன பி.எச்டி படிச்சுட்டு வந்தாலும் தெரிஞ்சுக்க முடியாது.. ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மனசுல ஆயிரம் இரகசியங்களையும் விருப்பங்களையும் குறைகளையும் மறைச்சு வைச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க.. மிகவும் சந்தோசமாக இருக்கறதால நினைச்சுட்டு இருக்கற பெண்ணுக்குக்கூட அவங்க ஆழ்மனசுல நிறைய விருப்பங்களும்.. தன்னுடைய இணையின் மீது குறைகளும் இருக்கத்தான் செய்கிறது..

ஒரு ஆண்.. பெண் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு.. அவங்களோட விருப்பங்களை நிறைவேற்ற ஆரம்பித்தால்.. அந்தப் பெண் பாக்கியசாலிதான்.. இங்க நான் சொல்றது அவங்களுக்கு நகை, புடவை வாங்கிக் கொடுப்பதைப் பற்றில்ல..

ஒரு ஆண்.. பெண்ணை விட உடல் அளவில் பலம் கொண்டவனாக இருந்தாலும்.. மனதளவில் பெண்களே மிகவும் பலம் கொண்டவங்களாக இருக்காங்க.. சிறுவயதில் இருந்தே.. உடலளவில் மிகுதியான வலிகளை அனுபவிச்சுட்டு இருக்கறதால்கூட மனதளவில் மிகுந்த தைரியத்தைக் கொண்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்..

உலகத்துல ஆண்களே.. பெண்களை ஆள்கிறவர்களாக நமக்குள்ள இல்லூசன் இருக்கு.. ஆனால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆயிட்டாலோ.. இல்ல காதலிக்க ஆரம்பிச்சிட்டாலோ.. முதல்ல பெண்தான் இதுக்குண்டான காரியங்கள்ல இறங்கறாங்க.. ஆணைத் தன் வசப்படுத்தி ஆளனும்ங்கறதுக்கு முதல் ஸ்டெப் என்னன்னா.. "ஏங்க நீங்க கரெக்டாக 9 மணிக்கு சாப்பிட்டுடுங்க, உங்க போன் காலை 6 மணிக்கு எதிர் பார்த்துட்டு இருப்பேங்க, 8 மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடுங்க" அப்படின்னு அன்பாகக் கட்டளையிடுவாங்க.. பெரும்பாலான ஆண்களுக்கு அந்த வார்த்தைகள் ஆரம்பத்துல அப்படியே உருகிப்போய்.. சொல்றதை அப்படியே செய்வாங்க.. உண்மையைச் சொல்லப்போனால்.. அந்தப் பெண் குறிப்பிட்ட நேரம் எப்போ வரும்னு.. 2 மணிநேரம் அல்லது 3 மணிநேரம்னு அவங்க வசதியைப் பொருத்து காத்திட்டு இருக்க ஆரம்பிச்சுடறாங்க.. ஆனால் அது ரியாலிட்டி இல்லவே..

தினமும் சொல்ற நேரத்தைக் கடைபிடிப்பது என்பது முடியாத காரியமாயிடுது.. ஒரு மாதமோ அல்லது அவர்களுக்கு முடியற வரைக்குமோ கேட்பாங்க.. அப்புறம்தான் இந்தப்பெண் தன்னை டாமினேட் பண்றாளோன்னு எண்ணம் வரத்தொடங்கியவுடன் முரண்டு பண்ண ஆரம்பிப்பாங்க.. உடனே பொண்ணுக்கு பொசசிவ்நெஸ் வந்திடும்.. நான் சொன்னதை முன்ன எல்லாம் கேட்டுட்டு இருந்தீங்க.. இப்ப என்ன வந்ததுன்னு சண்டை ஆரம்பிக்கும்..

இந்த அன்புக் கட்டளைகளை பெண்கள் இடும்போதே.. இல்ல அந்த நேரங்கள்ல எனக்கு வேற வேலை இருக்குன்னு ஆண் சொல்லும் போது.. பெண்ணோட முதல் முயற்சி தோல்வியடையுது.. ஆனாலும் மீண்டும் மீண்டும் அதற்குண்டான முயற்சி செய்துட்டேதான் இருப்பாங்க.. அவங்களோட எண்ணம் வெற்றியடையும் வரையோ.. அந்த ஆணிடம் இருந்து அடக்குமுறைகள் கையாளப்படும் வரையோ அந்த முயற்சி தொடர்ந்துட்டேதான் இருக்கும்.. பலர் தனது அன்பைக் கொண்டு இந்த முயற்சியில் ஜெயிச்சிடறாங்க.. சிலர் தோல்வியடையறாங்க..

ஆண் ஆரம்பித்துல இருந்தே தன்னுடைய ரியாலிட்டியை மீறி செயல்படாம இருந்தால்.. எந்த சண்டையும் வராதுன்னுதான் நினைக்கிறேன்.. இதுதான் நான்.. இப்படி நான் இருப்பேன்.. இப்படி உன்னிடம் எதிர்பார்க்கறேன்னு ஒருவருக்கு ஒருவர் பேசிக்கிட்டாங்கன்னா ஒரு புரிதல் வந்திடும்..

காதல் பண்றவங்ககிட்டயும்.. புதியதாக கல்யாணம் நிச்சயம் ஆனவங்ககிட்டயும்தான் இந்த ரியாலிட்டி பிரச்சினை அதிகமாக இருக்கு..

அவர்கள் காதல் மயக்கத்துல ஒருவருக்கொருவர்.. அப்படி இப்படின்னு பீலா விட்டுக்கறதும்.. நைட் முழுக்க தூங்காம பேசிக்கிட்டே இருக்கறதையும் பல இடங்கள்ல பார்க்க முடியுது.. ஆனால் இதே நிலைதான் எப்பவும் தொடருமா?.. கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் நிலைமை மாறுது.. வேறு வேறு இடங்களில் இருந்து கொண்டு காதல் பண்ணிட்டு இருந்தவங்க.. இப்போ பக்கம் பக்கம் ஒரே அறையில்.. கொஞ்ச நாட்கள்ல அவங்க முன்பு செய்துட்டு இருந்த விசயங்கள் போலியாகத் தோன்ற ஆரம்பிக்குது.. அதை ஆண் வெளிப்படையாகக் காட்டறான்.. பெண் அப்படிக்காட்டறது இல்ல.. அதனால் நீங்க முன்ன மாதிரி இல்ல.. அப்போ மட்டும் என்னை அப்படி..இப்படின்னு கொஞ்சத் தெரிஞ்சதான்னு சண்டை ஆரம்பிக்குது.. அதனால் காதல் பண்றவங்களும் சரி.. புதியதாக நிச்சயம் ஆனவங்களும் சரி ரியாலிட்டியை மனசுல வைச்சுக்கிட்டு பழகினாங்கன்னா இந்தப் பிரச்சினை கண்டிப்பாக ஏற்படாது.. மிகைப்படுத்தி நடந்து கொண்ட பிறகு.. உண்மையான நடவடிக்கையைக் காமிச்சாதான் ஒத்துவராது..


நான் தொடக்கத்தில் சொல்லியிருந்தது போல ஒரு பெண்.. ஆணை ஆளமுடியாம தோல்வியடைந்தால்.. அவர்களோட முயற்சி எப்பவும் நின்று போயிடறதில்ல.. அடுத்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்கிட்ட அந்த எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பிக்கறாங்க.. அப்படின்னா.. கொடுமைப்படுத்த ஆரம்பிக்கறாங்கன்னு சொல்ல வரல.. அன்பால் கட்டளையிட ஆரம்பிக்கறாங்க.. உதாரணத்துக்கு.. பார் உன் தகப்பன்தான் நான் சொல்றது எதையுமே கேக்கல.. நீயாவது கேள்டா அப்படின்னு சொல்ல ஆரம்பிப்பாங்க.. பிள்ளைக்கு அப்போது என்ன தோனும்.. தனது அப்பா மேல் நல்ல மரியாதையும் அன்பும் இருந்தாலும்.. அம்மா சொல்றதைத்தான் முதல்ல கேக்கனும்னு ஒரு விதை விழுந்திடும்..

பெண்ணின் எண்ணங்கள் ஆரோக்கியமாக இருக்கறவரை அந்தப் பெண்ணுக்கும் சரி.. அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் சரி.. நல்லதாக அமையும்.. பெண்ணின் எண்ணங்கள் தவறாக இருக்கும்போது.. இந்த முயற்சி வெற்றி அடைந்தாலும்.. தோல்வி அடைந்தாலும் கஷ்டம்தான்..

நான் மேல் சொன்ன விசயங்கள்ல.. ஆணோ பெண்ணோ.. யாராவது தன்னுடைய விருப்பங்களில் சிலவற்றைத் தன்னுடைய இணைக்காக விட்டுக் கொடுக்கறதுலதான் வெற்றிகரமான தாம்பத்தியம் அமையுது..

கடவுள்
உலகைப் படைத்தார்
பெண்
உயிர் கொடுத்தாள்
அம்மா
இவர்தான் என் கடவுள்!

டிஸ்கி: இது ரொம்ப சென்சிட்டிவான மேட்டர்.. இதுல நான் ஆணைதான் அல்லது பெண்தான் உயர்ந்தவங்கன்னு சொல்ல வரல.. இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட முதல் காரணம் என்னவாக இருக்கும்னு யோசிக்கும்போது இப்படியெல்லாம் தோனுச்சு.. சோ இதெல்லாம் கரெக்டாக இருந்தால்.. தப்பிச்சேன்.. தப்பாக இருந்தால் ரொம்பவும் திட்டீடாதீங்க.. நான் கொஞ்சம் பயந்த சுபாவம்.. :-)

அலுவலக அரசியல்கள்(2812 2010)

ஒரு அலுவலகத்தில் சாதாரண ஒரு பணியாளராக வேலைக்கு சேர்கிறோம்.. அங்கே மேலும் மேலும் நாம உயரனும்னா.. நிறைய விசயங்கள் செய்ய வேண்டியிருக்கு.. எனக்கு தெரிந்த சில விசயங்களைப் பற்றி இங்கே எழுதறேன்..

புதியதாக ஒரு அலுவலகத்தில் சேர்ந்தவுடன்.. கொடுக்கற வேலையை செய்தோமா.. போனோமான்னு இருந்தால்.. அது பத்துடன் பதினொன்று என்றாகிடும்.. அதனால நம்முடைய திறமையை அங்கே நிரூபிக்கனும்.. எப்படி நிரூபிக்கறது.. ஒரு 10 பேர் மட்டும் வேலை பார்க்கும் ஆபிஸ்ல நம்மை முன்னிலைப் படுத்தனும்னு நினைத்தால் ரொம்ப ஈசிங்க.. கொஞ்சம் ஹார்டு ஒர்க் பண்ணிக் காமித்து.. மற்றவர்களை விட அவுட்புட் அதிகமாகக் காமித்தாலே போதுமானது.. நிர்வாகத்தின் கவனத்திற்குப் போயிடுவோம்.. அதை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது நம்ம கையில்தான் இருக்கு..

நாம் வேலையில் சேர்ந்திருப்பது ஒரு பெரிய நிறுவனம்.. நம்முடைய பிராஜக்ட்லயே குறைந்தது.. 100 பேரூக்கு மேல் வேலை செய்யும் இடம்.. இங்கே எல்லாரையும் விட அதிக நேரம் வேலை பார்க்கிறேன்.. ஹார்டு ஒர்க்கை நிரூபிக்கிறேன்னு திட்டம் போட்டால் அது முடியாது.. எதை நிரூபிக்கறதாக இருந்தாலும்.. நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆபீஸ் நேரத்துலதான் செய்யனும்.. ஏன்னா.. பெரிய நிறுவனங்கள் எல்லாம் 24 மணிநேரமும் ஷிஃப்ட் பேசிஸ்ல இயங்கக் கூடியவை.. நம்முடைய வேலை நேரம் முடியறதுக்கு 5 நிமிடம் முன்னதாகவே சிஸ்டம் வேனும்னு அடுத்த ஷிஃப்டுக்கு லாகின் பண்றவங்க வந்து நின்னுடுவாங்க.. அதனால் இம்மாதிரியான நிறுவனங்களில் தனித்திறமைகளை முன்னிறுத்துவதன் மூலமாகவே பெயர் வாங்க முடியும்..

தனித்திறமைன்னா என்ன?.. அவங்க வேலை கொடுக்கறாங்க நாம செய்றோம்.. இதுல என்ன தனித்திறமையை வெளிக்காட்டறதுன்னு கேக்கறீங்க இல்லையா.. முதல் ஸ்டெப் நிறையப் பேசனும்.. மனசுல தோன்றதைப் பயப்படாமக் கேக்கனும்.. ஒரு ட்ரைனிங் வைக்கறாங்க அப்படின்னா.. அங்கே நமக்கு பல சந்தேகங்கள் உண்டாகலாம்.. சரி பக்கத்துல இருக்கறவன் புரிஞ்சுட்டிருப்பான்.. வெளியே போய் கேட்டுப்போன்னு திங்க் பண்ணாம.. உடனே நம்முடைய சந்தேகங்களைக் கேக்க ஆரம்பிக்கனும்.. கேள்வி கேக்க தயங்கறோம்னா.. ஒன்னு லேசினெஸ் காரணமாக இருக்கனும்.. அல்லது ஆங்கிலம் பிரச்சினையாக இருக்கலாம்.. இங்கே முதல் வகையை விட்டுடலாம்.. ரெண்டாவது கேட்டகரியை எடுத்துக்குவோம்..

தமிழ்நாட்டுல இருந்து வர்றவங்க.. பெரும்பாலும் தமிழ் மீடியம் படிச்சுட்டு வர்றதால நிறைய மதர்டங் இன்ஃபுலுயன்ஸோட வர்றோம்.. முதல்ல நிறையப் பேருக்கு பேச வர்றதே இல்ல.. அதனால் நாம் ஏதாவது கேள்வி கேட்டு.. அது தப்பாப் போயிட்டா எல்லாரும் சிரிப்பாங்க அப்படிங்கற பயத்துலயே அமைதியாய் உட்கார்ந்திருப்போம்.. அந்தப் பயத்தை விட்டுட்டு.. தப்பாகவே பேசுவோமே.. நாம் எதையோ கேக்க நினைக்கிறோம்.. இவனுக்கு ஆர்வம் இருக்குன்னாவது அவங்களுக்குத் தெரிய வரும்.. இந்த ஆர்வம் நம்மகிட்ட வந்துட்டாலே.. நாம என்ன கேக்க நினைச்சோம்னு யார்கிட்டயாவது கேட்டாவது தெரிஞ்சுக்குவோம்.. அடுத்த முறை நம் மனதில் தோன்றும் வேற கேள்வியை எப்படி கேக்கறதுன்னே தெரியலைன்னாலும் கேக்க தைரியம் வந்துடும்.. முதல்முறை சிரிச்சவங்க.. இந்தமுறை இவன் என்ன கேக்க நினைக்கறான்னு கூர்ந்து கவனிப்பாங்க..

நம்முடைய வேலையை நாம்.. ட்ரைய்னிங்லயே சிறப்பாக செய்யத் தவறி இருக்கலாம்.. புதிய வேலை.. ஒரு மாதிரி கண்ணைக் கட்டி விட்டமாதிரி ஃபீல் பண்ணுவோம்.. கவலைப் படாதீங்க.. வேலையிலயே நேரடியாகப் பிரச்சினையைப் ஃபேஸ் பண்ணிக்கலாம்.. ஏன்னா நிறையப் பேருக்கு.. க்ளாஸ் எடுத்தால் பிடிக்காது.. நேரடியாக வேலை செய்றதுதான் பிடிக்கும் (எனக்கு அதுதான் பிடிக்கும் :-) )..

நெக்ஸ்ட் ஏதாவது நம்முடைய டீமுக்காக ஏதாவது செய்யனும்.. ஏதாவதுன்னா?.. நீங்க வேலை செய்துட்டு இருக்கற பிராஜெக்ட் உங்களுக்கு நல்லாப் பழகினவுடன்.. அதுபற்றி ஒரு சப்பையாக அல்லது உண்மையிலயே அறிவாளியாக இருந்தால் அருமையாக ஒரு பிரசெண்டேசனையோ அல்லது ஒரு புதிய ஒர்க் ஸ்ட்ரக்சரையோ கிரியேட் பண்ணி.. உங்க டீம் மெம்பர்ஸுக்கு கொடுக்கக்கூடாது (;-)).. அது சப்பையாகவே இருந்தாலும் உங்க அணித்தலைவருக்குக் காட்டனும்.. சமயம் வரும்போதெல்லாம் நான் இந்த விசயத்தை செய்தேன்னு சொல்லிக் காட்டனும்.. இந்தமாதிரி எக்ஸ்ட்ரா ஆக்டீவிட்டீஸ் செய்யத் தெரியாதவங்க.. இதுக்கு காக்கா பிடிக்கறான்னு பேர் வைப்பாங்க.. உண்மையில் அவங்களுக்கு எல்லாம்.. என்னடா இவன் நம்மகூட சேர்ந்துட்டு ஆக்டிவா இருக்கானே.. நமக்கு ஒன்னும் தெரியலையேன்னு பொறாமையா இருக்கும்.. ஆனால் அதை அவங்க மனசுகூட ஏத்துக்காது..

சும்மா இந்த வேலையை செய்தால் மட்டும் நல்ல பேர் வாங்கிட முடியுமான்னு நீங்க திங்க் பண்ணலாம்.. இதுவே உங்களுக்குத் தொடக்கமாகவும்.. நல்ல திருப்புமுனையாகவும் அமையும்..

சின்னக் கம்பெனியோ.. பெரிய கம்பெனியோ.. நம்முடைய வேலை சிறப்பாக இருந்தும்.. அங்கீகாரம் இல்லைன்னா.. அங்கே இருக்கறது வேஸ்ட்.. சீக்கிரம் வேற பக்கம் ஜம்ப் ஆகறதுதான் நல்லது.. இல்லைன்னா.. சீக்கிரம் மனசுல ஒரு டிப்ரசன் உருவாகி நம்முடைய திறமைகள் பாழாயிடும்..

இவ்வளவு வேலைகளும் எதுக்கு செய்றோம்.. நமக்கு அங்கே வரும் முன்னேற்றதுக்காகத்தான் இல்லையா.. நமக்கும் அந்த முன்னேற்றம் வரும்.. அப்போ.. உங்க கூடவே டீம்ல இருந்த நண்பர்கள்.. இப்போ உங்களுக்கு கீழே வேலை செய்றமாதிரி நிலை வரும்.. இதற்கு முன்பு ஒரே அணியாக நிர்வாகத்தின் நிறை குறைகளை ஒரு பணியாளரின் பார்வையில் பார்த்துட்டு இருந்திருப்போம்.. நம்முடைய அணித்தலைவர்.. நமக்கு கொடுத்திருக்கற டார்கெட்டோட நியாயமின்மை எல்லாம் அப்போ பேசியிருப்போம்.. இப்போவும் அந்த நியாயம் நமக்குத் தெரியும்.. ஆனால் ஒரு அணித்தலைவராக நமக்குக் கொடுக்கப்பட்ட டார்கெட்.. குறிப்பிட்ட டயத்துல இவ்வளவு டார்கெட்டை முடிக்கனும்ங்கறதுதான்.. சோ ஆட்டோமேட்டிக்கா நம்முடைய டீமுக்கு பிரசர் கொடுக்க ஆரம்பிப்போம்..

ஏற்கனவே நம்முடைய பதவி உயர்வின் காரணமாக சிலர் விலகிப் போயிருப்பாங்க.. இப்போ இந்தப் பிரசர் கொடுக்க ஆரம்பித்தவுடன்.. மீதம் இருப்பவர்களும்.. பார் இவன்.. டீம் லீட் ஆனவுடன் தலைகணம் வந்துருச்சு.. அப்படின்னு பேச ஆரம்பிச்சுருப்பாங்க.. உண்மையில் நம்முடைய வேலைப்பளுவும்.. நம்முடைய டார்கெட்டும் அப்படி இருக்கும்.. நிர்வாகத்துக்கும்.. டீம் மெம்பர்ஸுக்கும் நல்லவிதமாக நடந்துக்கனும்னு நினைத்தால் நமக்கு ஆப்பு விழும்..

இங்கே உதாரணத்துக்கு சொல்லனும்னா.. பாதையில் நடக்கும் போது பாதசாரியாகவும்.. டூவிலர் ஓட்டும்போது அந்த மனநிலையிலும்.. ஃபோர் வீலர் ஓட்டும்போது அந்த மனநிலையில்தான் இருக்கனும்..

இந்தமாதிரி எல்லா விதமான அரசியல்களை சமாளிக்கனும்.. எங்கேயாவது சிலிப்பானால்.. பரமபதம் மாதிரிதான் திரும்பவும்.. பழைய இடத்துக்குத்தான் வருவோம்..

அதுபோல நம்முடைய நிறுவனத்தில் நம்முடைய பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்.. அதன் காரணமாக நிறுவனத்தில் சில சலுகைகள் நமக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.. ஆனால் நாம இல்லைனா.. இவங்க இந்த வேலையை செய்திருக்க முடியாதுன்னு நினைப்பை வளர்த்தால்.. நம் மனதில் அகங்காரம் வந்து சீக்கிரம் அது வெளிப்படும்.. அது வேண்டாம்.. நாராயண மூர்த்தி சொன்னமாதிரி நம்முடைய நிறுவனம் எப்போ நம்மை விரும்பறதை நிறுத்துவாங்கன்னு சொல்லவே முடியாது.. அதனால் நம்ம வேலையை என்றைக்குமே கரெக்டாக செய்வோம்.. :-)

டிஸ்கி 1: நண்பர்கள் இருவர் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது.. ரெண்டு பேரும் நண்பர்கள் என கம்பெனிக்குள்ள காட்டிக்காம இருந்தால்.. நம்மைப் பற்றி சக பணியாளர்கள் பேசும் விசயங்களையும்.. நமக்கு மேல இருக்கறவங்க பேசற விசயங்களையும் தெரிஞ்சுக்க முடியும்.. ட்ரை பண்ணிப் பாருங்க.. அனைத்தும் அரசியலே.. :-)

Monday, December 27, 2010

உங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு எது?(2712 2010)

ந்த பதிவின் நோக்கம், சைவ உணவின் முக்கியத்துவம் குறித்து தான். உலகம் முழுவதிலும் அசைவ உணவுக்கு மாற்றான இயக்கங்கள் எழுந்து வருகின்றன. காரணம்,மனித பரிணாம வளர்ச்சியில் அவனது இயற்கை உணவு என்பது தாவரங்கள் மட்டுமே. இறைச்சி என்பது விலங்கு உலகத்திற்கு படைக்கப்பட்டது. இதில் எது சரி. எது தவறு என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்கட்டும். சைவ உணவு மட்டுமே மனிதனுக்கு பொருந்திய உணவு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

காய்கறிகள் என்ற மரக்கறிகள் எளிதில் செரிக்க கூடியது. மனித உடலின் இயங்கு மண்டலத்திற்கு தேவையான சக்திகள் அனைத்தும் சைவ உணவில் அதிகமாகவே இருக்கின்றன. இவை மட்டுமே மனித உடலின் செரிமான மண்டலத்திற்கு பொருந்தி போக கூடியவையும் கூட. இருந்தாலும் சில நேரங்களில் மாமிச உணவும் பொருந்தி தான் போகிறது. ஆனால் அளவோடு உண்டால் அது மருந்தாக அமைகிறது.

சரி, எந்த இரத்த வகையினருக்கு எந்த மாதிரியான உணவு முறை பொருந்து என்று பார்க்கலாம். அதாவது, இரத்தத்தின் வகை என்பது கார, அமில நிலைப்பாடுகளை பொருத்து அமைகிறது. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஆண் தான் பொருத்தமாக இருக்கும் என்பார்களே..அது ஏன்? இரத்தத்தின் தன்மையை வைத்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

ஆக..இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். இந்த பதிவில் எந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் பொருந்தும் என்று பார்க்கலாம்.

'ஏ' பிரிவு இரத்த வகை
இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய்,நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். 'ஏ' இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் 'லெக்டின்' என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.

'பி' இரத்த வகை
மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கும். சோளம், கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.

'ஏ'பி' பிரிவு இரத்த வகை
இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய்யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.

'ஓ' இரத்த பிரிவு
இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ்,பயறு வகைகளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காணப்படுவதுண்டு. அது போல் முட்டைகோஸ்,காலிபிளவர்,கடல் உயிரினங்கள்,அயோடின் சேர்நத உப்பு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

இந்த விடயங்கள் ஒரு வேதியியல் மற்றும் சித்த மருத்துவம் தெரிந்த நண்பரின் ஆலோசனையில் பதியப்பட்டது. இங்கு குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் உங்களுக்கு ஒத்து வராத ஒன்றாக நீங்கள் அறிந்தால் இங்கு குறிப்பிடப்படும் தகவலும் பொருந்துவதாகும். மற்ற படி இந்த தகவல் பொதுவானது என்பதை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். நன்றி.

மருத்துவக் குறிப்புகள் (2712 2010)

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

--------------------------------------------------------------------------------
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம்

, சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

--------------------------------------------------------------------------------
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
--------------------------------------------------------------------------------
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
--------------------------------------------------------------------------------
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
--------------------------------------------------------------------------------
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
--------------------------------------------------------------------------------
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
--------------------------------------------------------------------------------
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
--------------------------------------------------------------------------------
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
--------------------------------------------------------------------------------
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
--------------------------------------------------------------------------------
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
--------------------------------------------------------------------------------
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

Wednesday, October 20, 2010

காலம் பொன் போன்றது... (2010 2010)


பத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா?
புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள்.

ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா?
இறுதித் தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் அருமை தெரிய வேண்டுமா?
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் தாயைக் கேளுங்கள்.

ஒரு வாரத்தின் அருமை தெரிய வேண்டுமா?
வாராந்திர பத்திரிகையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

ஒரு மணியின் அருமை தெரிய வேண்டுமா?
காத்திருக்கும் காதலர்களைக் கேளுங்கள்.

ஒரு நிமிடத்தின் அருமை தெரிய வேண்டுமா?
விமானம், ரயில் அல்லது பஸ்ஸை தவற விட்டவர்களைக் கேளுங்கள்.

ஒரு நொடியின் அருமை தெரிய வேண்டுமா?
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

ஒரு மில்லி-நொடியின் அருமை தெரிய வேண்டுமா?
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.

காலம் பொன்னானது.
ஒவ்வொரு நொடியையும் பொக்கிஷமாகப் போற்றுங்கள்.
வெற்றிச் சிகரத்தில் கொடி நாட்டலாம்.

Sunday, October 17, 2010

சண்டே ஸ்பெஷல் -கிட்னி பிரை (ஸ்மால் சிக்கன்) - Kidney Fry (17/10/2010)



தேவையான பொருட்கள்:-

ஆட்டு கிட்னி - கால் கிலோ
உப்பு தூள் - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முக்கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - சிறிது
புதினா - முன்று இதழ்
பச்ச மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பட்டை - சிறிய துண்டு (கால் இன்ச் அளவு)
கரம் மசாலா தூள் - ஒரு பின்ச்
தக்காளி ஒன்று - சிறியது
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி



செய்முறை :-

1. முதலில் கிட்னியை நடுவில் இருக்கும் கொழுப்பை மட்டும் அகற்றி விட்டு இரு முறை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.

2. பிறகு மறுபடி இருமுறை கழுவி தண்ணீரை வடிய விடவும்.கிட்னியில் உப்பு , இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும், தக்காளியை நான்கு துண்டாக அரிந்து போடவும்.

3. கலக்கியதை ஐந்து நிமிடம் ஊறவைத்து குக்கரில் தண்ணீர் சேர்க்க வேண்டாம் முன்று விசி விட்டு இரக்கவும்.

4. இப்போது அதில் நிறைய தண்ணீர் நிற்கும் அதை வற்ற விடவும்.

5. தனியாக ஒரு வானலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி பட்டை,வெங்காயம் மீடியமாக அரிந்து சேர்த்து தாளித்து வற்றிய கிட்னியை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி பச்சமிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து கொத்துமல்லி, புதினா, நெய்,சேர்த்து கரம் மசாலா, தூவி கிளறி இரக்கவும்.

6. சுவையான கிட்னி பிரை ரெடி.



குறிப்பு:-

இதை சரியாக கழுவ வில்லை என்றால் செய்யும் போது ஸ்மெல் வரும், ரொம்ப நேரம் வேக விட்டால் ரொம்ப கல்லு மாதிரி ஆகிடும்.
இதை குக்காரில் வேக வைத்து செய்வதால் குழந்தைகளுக்கு கடித்து சாப்பிட ஈசியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு இதை ஸ்மால் சிக்கன் என்று சொல்லி கொடுங்கள்.காஷ்மீரி சில்லி பொடி என்பது நல்ல கலராக இருக்கும் காரம் அவ்வள்வாக இருக்காது.
அது கிடைக்க வில்லை என்றால் சாத மிளகாய் தூளே போதுமானது.இதே போல் மிளகு சேர்த்தும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு,பிள்ளை பெற்றவர்களுக்கு நெயிலேயே கூட செய்து கொடுக்கலாம்.

Saturday, October 16, 2010

சரஸ்வதி பூசை (ஆயுத பூசை) (16/10/2010)

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே, அவர்கள் படித்துப்பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத "மக்குகள்" என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப் பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும், உடனே பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவ மெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும் சிவன் வேட உருவ மெடுத்து அவளைப்பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவமெடுத்து ஆண்மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக மீண்டும் சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை கூறுகிறது.

இரண்டாவது,

ஒரு விதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட ஆசையின் போது வெளிப்பட்ட இந்திரியத்தை ஒருகுடத்தில் விட்டு வைக்க, அக்குடத்தில் இருந்து அகத்தியன் வெளியாகி அந்த அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகிறது. அதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி, மகன் வயிற்றுப் பேத்தியாகிறாள். எனவே சரஸ்வதி பிறப்பும், வளர்ப்பும் மேற்படி நடவடிக்கையும் பார்ப்பனப் புனைவுப்படி மிகவும் ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க,

இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயம். அதாவது, சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வம் ஆனதால், வித்தையின் பயன் தொழில் என்றும், தொழிலுக்கு ஆதாரமானவை ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டு, சரஸ்வதிபூசை ஆயுத பூசை என்று ஒவ்வொரு நாளைக் குறித்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கின்றார்கள்.

இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங்களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங்களையும் , தராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவற்றையும்; தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குரிய ஆயுதங்களையும், இயந்திரக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சேலைகளையும் நகைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களையும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் இலட்சியத்திற்கு வைத்திருக்கும் அவரவர் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கிறார் கள். இதனால் அந்தத் தினத்தில் தொழில்கள் நின்று அதனால் வரும் படிகளும் போய் பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காகத் தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியைச் செலவழித்து, போதா விட்டால் கொஞ்சம் கடன் வாங்கியும் செலவழிப்பதைவிட இதனால் யாதொரு நன்மையும ஏற்படுவதாகச் சொல்வதற்கு இடமே இல்லை.

சரஸ்வதி பூசை செய்யும் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்நிறை நிறுக்காமலோ குறையளவு அளக்காமலோ, தப்புக்கணக்கு எழுதாமலோ இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. அதுபோலவே கைத்தொழிலாளர்கள் தங்கள் ஆயுதத்தைக் கழுவிச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து விழுந்து கும்பிடுவார்களே தவிர அவர்களுள் எவனாவது நாணயமானவனாய் நடக்கின்றான் என்றோ, தொழில்கள் தாராளமாய் கிடைக்கின்றது என்றோ சொல்லுவதற்கு இடமில்லாமல் இருக்கின்றார்கள் . அதுபோலவே புத்தகங்களையும், கூளக்குப்பைகளையும் அள்ளி அவற்றிக்குப் பொட்டுவைத்துப் பூசை செய்கின்றார்களே அல்லாமல், காலோ கையோ பட்டு விட்டால், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்கின் றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5- பேர்கள் என்று தான் உள்ளார்கள்.

இவ்வளவு ஆயுத பூசை - சரஸ்வதி பூசை செய்தும் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்தும், தொழிலாளர்கள் பிழைக்கத் தொழில்கள் இன்றியும் அவதிப் பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். சரஸ்வதியின் சாதியைச் சேர்ந்த பெண்கள் 1,000-த்துக்கு 9- பேர்கள் படித்து உள்ளார்கள் இதன் காரணம் என்ன? நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயத்திற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரஸ்வதி என்கிற தெய்வமே ஒரு பொய்க்கற்பனையா? என்பவை யாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

இவையாவும் சுத்த முட்டாள்தனமான கொள்கைகள் என்பது தான் எனது அபிப்பிராயம். அயல்நாட்டானைப் பார்த்தால் அவனுக்கு சரஸ்வதி என்ற பேச்சோ கல்வித்தெய்வம் என்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது. அன்றியும், நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய்க் கருதிக்கொண்டும், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டும் நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக் காரன் மலங்கழித்தால் சரஸ்வதியைக் கொண்டே (காகிதத்தை) மலம் துடைத்தும் வருகிறான். ஆனால் 100-க்கு 60 பெண்கள் அவர்களில் படித்து இருக்கிறார்கள் உண்மையிலேயே சரஸ்வதி என்ற தெய்வம் ஒன்று இருக்கும் என்றால், பூசை செய்பவர்களைத் தற்குறியாகவும் மலம் துடைப்பவர்களை அபார அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையில் யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாய் இருக்குமானால், அதைப் பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கவும், சரஸ்வதியைக் கனவிலும் கருதாது, சரஸ்வதி பூசை செய்கின்றவர் களைப் பார்த்து "முட்டாள்கள், அறிவிலிகள் , காட்டுமிராண்டிகள்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாட்சியுடனும், தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப்பாருங்கள். இந்தப் பூசையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகிறது என்று பாருங்கள்!

இராசாக்கள் கொலு இருப்பது, பொம்மைகள் கொலு இருப்பது, சாமிகள் கொலு இருப்பது , இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, அறிவுச் செலவு செய்வது, லட்ச ரூபாய்க்குப் பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேளவாத்தியம் வாழைக்கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர் போக ரயில் சார்ஜ் ஆகிய எவ்வளவு செலவாகின்றன என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா? என்று கேட்கிறேன். ஒரு வருஷத்தில் இந்தப் பூசையில், இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் கோடி ரூபாய் பெறுமானது என்ற கணக்குப்பார்த்தால், மற்றப் பண்டிகை, உற்சவம் புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை

- தோழர் பெரியார்.
["இந்துமதப் பண்டிகைகள்" நூலில் இருந்து...]

Saturday, October 9, 2010

சாப்பிட்டபின் செய்யக்கூடாதவைகள்! (09/10/2010)


1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும்கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
10, சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதேபால், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல்லுவார்கள், இது ஒரு தவறான கருத்து.

நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.மருத்துவத் துறையில் "நவீன மூட நம்பிக்கைகள்" பலவும் இதுபோல உண்டு.எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!

இது எனக்கு மெயிலில் வந்தது அனைவரும் பயன்பெற தந்துள்ளேன். படித்து அதன்படி செயல்படுங்கள்,உயிர் இருக்கும்வரை உடல் ஆரோக்கியம் முக்கியமே !!!

Sunday, September 26, 2010

சண்டே ஸ்பெஷல்-சைனீஸ் இறால் ப்ரைட் ரைஸ் (26/09/2010)



தேவையானவை :-
  • பாசுமதி அரிசி - 500 கிராம்
  • சுத்தம் செய்த இறால் - 300 கிராம்
  • புரோசின் பீஸ் (green peas) - 100 கிராம்
  • முட்டை - 2
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • பூண்டு - 3 பற்கள்
  • அஜினோமோட்டோ - 1/2 தேக்கரண்டியிலும் குறைந்தளவு
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள்
  • கிராம்பு - 4
  • கறுவா - 2
  • ஏலக்காய் - 4
செய்முறை :-
மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரிசியை கழுவி அதனுடன் ஏலக்காய், கறுவா, கிராம்பு, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை சேர்த்து விரும்பினால் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது மாஜரினும் சேர்த்து 700 மி.லி தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். அப்போது தான் சாதம் உதிர் பதமாக இருக்கும்.

இறாலை சிறுத் துண்டுகளாக நறுக்கி கால் தேக்கரண்டி உப்பு மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூளும் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

முட்டையை உடைத்து ஊற்றி அதில் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து அடித்து அப்பமாகப் பொரித்து எடுத்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டை தட்டிப் போட்டு பிரட்டி வைத்திருக்கும் இறாலையும் போட்டு நன்கு வதக்கவும்.

இறால் நன்கு வதங்கியதும் அதனுடன் பீஸை போட்டு வதக்கவும்.

அதன் பின்னர் கறிவேப்பிலை, மீதமுள்ள உப்பு, மிளகுதூள், அஜினோமோட்டோ போட்டு பிரட்டி விடவும். அஜினோமோட்டோ சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும் சிறிதளவேனும் அதிகமானாலும் புளிப்பு தன்மை அதிகமாகிவிடும்.

இந்த கலவையில் வேக வைத்து ஆற வைத்த சாதத்தையும், துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முட்டையையும் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு பிரட்டி விட்டு சூடாகியதும் இறக்கவும். சமைத்து முடியும் வரை குறைந்த தீயிலேயே வைத்திருக்கவும்.

சுவையான சைனீஸ் ப்ரைட் ரைஸ் ரெடி. இதனை மட்டன் அல்லது சிக்கன் பிரட்டல், அவித்த முட்டை சேர்த்துப் பரிமாறவும்.

Wednesday, September 22, 2010

கடவுள் என் மட்டில் (22/09/2010)

"கடவுள்" இந்த வார்த்தையை உச்சரித்தால் சிலருக்கு பயம்,சிலருக்கு பக்தி,சிலருக்கு வெறுப்பு,சிலருக்கு அமானுஷ்யம்

அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கடவுள் என்ற மாயையில்,எல்லாம் இந்த மனிதப் பதர் உருவாக்கியவை தானே,என்ன அதில் மாயை,மந்திரம்?



"மனிதன் தான் கடவுளை படைத்தான்" இது என் கருத்து தான், அதனால் தான் மனிதனை போலவே கடவுளும் இருக்கிறார்

பாருங்க எல்லா ஆங்கில்லையும் போட்டோ எடுத்துக்க என்று நடராஜர் தான் காலை தூக்கிட்டு நின்றிருப்பாரா இல்லை சரஸ்வதி குளோசப் போட்டோ சரியாய் விழலன்னு இன்னொரு டேக் போயிருப்பாங்களோ,சாத்தியமே இல்லையே

மனிதனுக்கு தன்னை கட்டுப்படுத்தவும் இன்ன பிற சௌகரியங்களை செய்து கொள்ளவும் ஒரு உருவம் தேவை பட்டது, அதை தான் கடவுள் என்று படைத்து விட்டனர், வகை வகையாக மனித உருவத்தில் மாற்றம் செய்து கடவுளர்களை உருவாக்கி இருப்பர்,பின்னர் அதிலிருந்து வேர் விட்டது தானே இந்த மதமும் சாதியும்

கடவுள் இருக்கிறார் இல்லை என்பது அவரவர் விருப்பம் தான்

அதனால் கடவுள் இல்லை என்பவரிடம் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப கூறுவதோ,இருக்கிறார் என்பவரிடம் இல்லை என்று பழிப்பதோ வீண் வேலை தான்

"உண்டு" என்ற வார்த்த்தை இருக்குமானால் "இல்லை" என்ற வார்த்தை இருந்தே தீர வேண்டும்,அப்படி இல்லையென்றால் "உண்டு" என்பது அர்த்தமற்றதாகிவிடும்,இருக்கு என்பதும் அறிவுதான்,இல்லை என்பதும் அறிவுதான்

நாத்து நட்டிருக்கு மழை பெய்யக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளும் விவசாயிக்கு நாத்து நட ஒரு நம்பிக்கை தேவை படுகிறது இதில் தவறேதும் இல்லையே,ஒரு நம்பிக்கை தானே அதை நீங்க கொடுத்தால் என்ன கடவுள் என்ற உருவம் கொடுத்தால் என்ன ?

முடிவாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,இருக்கு என்பவர்களுக்கு இருந்துட்டு போகட்டும்,இல்லை என்பவருக்கு இல்லாமலேயே இருக்கட்டும்

ஆனால் இந்த இரண்டிற்க்கும் இடையில் மதத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!


நூறு
குடம் பாலபிஷேகம்
கல்லுக்கு
ஊத்திய போது
சிரித்தேன் கடவுளை பார்த்து
உமக்கு தேவையா என்று

அபிஷேகம் முடிந்து கொடுத்த
சர்க்கரை பொங்களை சிரித்துக் கொண்டே
வாங்கும் போது
என்னை பார்த்து
சிரித்தார் கடவுள்..

இவையனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்களே....

Monday, September 20, 2010

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன??? (20/09/2010)

"பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?' காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், "பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்...' என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!' என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர்.

அமெரிக்காவைச் சேர்ந்த இவர், "வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!' என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?
3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.
4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.
5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.
7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.
8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது
9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
10. பாராட்டு: "இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது...' என பாராட்ட வேண்டும்
11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்
12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.
13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.
14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.
17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.
18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.
19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.
20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.
21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: "ஐயோ... டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!' என கூச்சல் போடக் கூடாது.
22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.
23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.
25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். "வேலை இருக் கிறது, "டிவி'யை பார்த்துக் கொண்டு தூங்கு!' என கணவர்கள் சொல்லக் கூடாது.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

Sunday, September 19, 2010

சண்டே ஸ்பெஷல்-ஈசி மட்டன் பிரியாணி (19/09/2010)


தேவையானவை :-
  • மட்டன் - 1/2 கிலோ
  • பாஸ்மதி அரிசி - 2 கப்
  • வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • பட்டை - 2
  • லவங்கம் - 4
  • ஏலக்காய் - 2
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி
  • பிரிஞ்சி இலை - 1
  • வெங்காயம் - 1/2 கப்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • இஞ்சி, பூண்டு விழுது - 5 தேக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப
  • பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது - 15
  • தக்காளி - 3
  • புதினா - ஒரு கைபிடி(பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி(பொடியாக நறுக்கியது)
  • கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :-
  • குக்கரில் 4 கப் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள், (இஞ்சி,பூண்டு விழுது), மட்டன் சேர்த்து 15 விசில் விட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.
  • குக்கரில் வெண்ணெய், எண்ணெய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, வெங்காயம், பாதி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்(எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிகவும் முக்கியம்).
  • பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கியப் பிறகு வேக வைத்த மட்டன்(தண்ணீர் இல்லாமல்) சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் சேர்த்து லேசாக வதக்கவும். பின் 4 கப் தண்ணீர் (மட்டன் வேக வைத்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம்) விட்டு உப்பு, காரம் பார்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
  • 15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.
Note:

எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிக மிக முக்கியம்.

Saturday, September 11, 2010

சண்டே ஸ்பெஷல் - சிக்கன் 65 (12/10/2010)


தேவையானவை :-
  • எலும்பில்லாத சிக்கன் - ஒரு கப்
  • சிக்கன் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
  • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • கேசரி பவுடர் - கால் தேக்கரண்டி
  • பூண்டு - 3 பல்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • தயிர் - கால் கப்
  • உப்பு - கால் தேக்கரண்டி
  • எண்ணெய் - கால் கப்
செய்முறை :-
எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.



ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு அதில் சிக்கன் பவுடர், இஞ்சி பூண்டு விழுது, கேசரி பவுடர், தயிர், உப்பு சேர்த்து பிசறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்





வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.




வேறொரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.



தாளித்தப் பொருட்களை பொரித்த சிக்கன் மீது தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் 65 தயார்.

Friday, September 10, 2010

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள் (10/09/2010)

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
--------------------------------------------------------------------------------
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
--------------------------------------------------------------------------------
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
--------------------------------------------------------------------------------
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
--------------------------------------------------------------------------------
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
--------------------------------------------------------------------------------
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
--------------------------------------------------------------------------------
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
--------------------------------------------------------------------------------
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
--------------------------------------------------------------------------------
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
--------------------------------------------------------------------------------
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
--------------------------------------------------------------------------------
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
--------------------------------------------------------------------------------
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
--------------------------------------------------------------------------------
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
--------------------------------------------------------------------------------
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
--------------------------------------------------------------------------------
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
--------------------------------------------------------------------------------
தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
--------------------------------------------------------------------------------
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
--------------------------------------------------------------------------------
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி (10/09/2010)



தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.

Wednesday, September 8, 2010

"கடவுள் நல்லவரா?"-கடவுளை நம்புகிறாயா?(08/09/2010)

மின்னஞ்சலில் வந்த ஓர் அருமையான விவாதம்

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

"நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?"

"நிச்சயமாக ஐயா.."

"கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா."

கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?"

"ஆம்."

"எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?"

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

"உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா.."

"சாத்தா‎ன் நல்லவரா?"

"‏இல்லை."

"எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?"

"கடவுளிடமிருந்துதா‎ன்."

"சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?"

"ஆம்."

"அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?"

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?"
.....
"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?"
......
"ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?"

"ஆம் ஐயா.."

"நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் ‏ இல்லை' என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?"

"ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது."

"ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே.." ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

"ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?"

"நிச்சயமாக உள்ளது."

"அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?"

"நிச்சயமாக."

"இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை."

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

"ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). "வெப்பம் ‏இல்லை" என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது."

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

"சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?"

"ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது."

"நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?"

"சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?"

"ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது."

"பிழை?? விளக்கிக் கூற முடியுமா?"

"ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் "வாழ்வு இனி இல்லை" என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

"சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?"

"”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்." பேராசிரியர் பதிலுரைத்தார்.

"உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?"

(பேராசிரியர் த‎ன் தலையை 'இல்லை' என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

"அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே 'ஒருவகையா‎ன' அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?"

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

"இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?"

(வகுப்பறை 'கொல்'லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

"யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?"

"அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று."

"மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?"

மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

"நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!"

"அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.