இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Thursday, May 19, 2011

ஆண் குழந்தை பிறக்க,முன்னோர் சொன்ன வழிகள்! (1905 2011)


பெண் குழந்தை முதலில் பெற்றவருக்கு அடுத்து ஆண்குழந்தை பிறக்குமா...அல்லது மீண்டும் பெண் குழந்தையே பிறக்குமா என்ற பயமும் கவலையும் இருக்கும்...இதற்கு முன்னோர்கள் பல வழிகள் அறிந்திருந்தனர்...
பாட்டி வைத்தியமும் கிராமப்புறங்களில் இருக்கும்..ஆனால் இக்காலத்தில் டாக்டர்களை மட்டுமே நம்புகிறோம்....சிசேரியன் இல்லாமல் இப்போதெல்லாம் குழந்தை பிறப்பதில்லை...கர்ப்பிணிகள் வலி எடுக்க தொடங்கியவுடன்,அவள் பக்கத்தில் உத்திரத்தில் ஒரு கயிறு கட்டி தொங்க விட்டுவிடுவார்களாம்...


அதை பிடித்து ,வலியால் கத்திக்கொண்டு ,பிள்ளையைபெறுவார்களாம்... இப்போது வலி தெரியாமல் இருக்க ஊசி போட்டுக்கொள்கிறார்கள் சிலர்.

ஆண்குழந்தைக்காக அக்காலத்தில் மன்னர்கள் பல யாகங்கள் செய்து,பலி கொடுத்து ,பல திருமணங்கள் செய்து அக்கப்போர் செய்திருக்கிறார்கள்.

ஆண் குழந்தை என்றால் ஒரு பாதுகாப்பு.பெண் என்றால் திருமணம் செய்து போய் விடுவாள்.மகன் என்றால் கடைசி வரை தன்னுடன் இருப்பான் என்ற எண்ணமும் இருப்பதால்,தான் சேர்த்த சொத்துகளுக்கு வாரிசு மாத்திரமில்லாமல்,தன் பெயரை சொல்ல ஒரு வாரிசு என்ற கர்வமும் ஆசைக்கு ஒரு காரணம்...


ஆனாலும் பொதுவாகவே கணவனுக்கு பெண் குழந்தை மீது ஆசை இருக்கும்... மனைவிக்கு ஆண்குழந்தை மீது ஆசை இருக்கும்..இது கல்யாணம் ஆனது முதலே செல்ல சண்டையாய் இருக்கும்..

சரி ..மேட்டருக்கு வரேன்......

ஆண்குழந்தை பிறக்க முன்னோர்கள் சொன்னதுன்னு ஒரு பெரியவர் சொன்னார்..அதை அப்படியே சொல்றேன்...நம்பிக்கை இருக்கிறவங்க..கடைபிடிக்கலாம்...

பெண்கள் மாதவிலக்கு ஆகத்தொடங்கிய நாள் முதல் எண்ணி வரும் 12 முதல் 16 நாட்கள்....இந்த ஐந்து நாட்கள் மட்டுமே கரு பிடிக்கும் நாட்கள்..இநாட்களில் ஆண் நட்சத்திரம் வரும் நாளில்,உங்கள் பெட்ரூமின் தென்மேற்கு மூலையில் படுக்கையை அமைத்துக்கொள்ளவும்....

மாலையில் இருவரும் குளித்து விட்டு,7 மணிக்கே சாப்பிட்டு விட்டு,டிவி பார்க்க வேண்டாம்...கொஞ்ச நேரம் தனிமையில் பேசிக்கொண்டிருங்கள்..அதாவது காதல் செய்யுங்கள் ....

வேலி பருத்தி என்னும் செடி வேலிகளில் இருக்கும் அதை எடுத்து சாறு பிழிந்து ஆண்கள் தங்கள் காதில் 3 சொட்டு விட்டுக்கொண்டால் இன்னும் நல்லது...வீரியத்தையும் அதிகப்படுத்துவதோடு,விந்தணுவில் ஆண் தன்மையை அதிகப்படுத்துமாம்..(அட..சிரிக்காதீங்கப்பா..இதை உண்மையாக கடை பிடித்திருக்கிறார்கள்)


படுக்கையில் ஆண் இடது கையை தலைக்கு கொடுத்து அதாவது இடது புறம் பார்த்து படுக்க வேண்டும்....பெண் வலது புறம் பார்த்து படுக்க வேண்டும்...இப்படி அரை மணி நேரம் ஒருவரை ஒருவர் பார்த்தவறு பேசிக்கொண்டிருங்கள்!
இப்போது ஆணுக்கு வலது பக்கம் மூச்சுக்காற்று வந்து கொண்டிருக்கும்...இப்போது தாம்பத்தியம் கொண்டால் நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும்...

இந்த நாட்களில்,அமாவாசை,பவுர்ணமி,சஷ்டி,சனிக்கிழமை ஆகாது.

படுக்கையறையில் தென்மேற்கு மூலையில்,மேற்கு தலை வைத்து,படுக்க வேண்டும்...

..பெண்ணின் முதல் மாதவிலக்கு நாளில் இருந்து,ஒற்றைப்படை நாளில் சேரக்கூடாது..இரட்டைப்படை நளில் சேர்ந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் சொல்வார்கள்.


தாம்பத்தியத்துக்கு முன்..காதல் செய்வது சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பதும்...வீரியத்தை அதிகப்படுத்தும்.......

அதிக இனிப்புகளை ஆண் சாப்பிட்டு வந்தால் விந்தணு அதிகம் சுரக்கும் என்றும்..அதிக விந்தணு பெண்ணின் யோனியில் சேர்ந்தால்தான் ஆண் குழந்தை...குறைந்த விந்தணு திரவம் சேர்ந்தால் பெண் குழந்தை என்றும் சொல்வார்கள்!!

No comments:

Post a Comment