இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Tuesday, December 13, 2011

ஏன் அப்படி செய்தாள்?...(1312 2011)

எனக்கொரு காதல் இருந்தது
வெயிலடிக்கும் சித்திரை மாத
சிறு மழையென
சட்டென என் முன்
வந்தவள் அவள்..
எல்லாவற்றுக்கும்
பதில் வாங்கும்
வாதத்தில் தோற்க விரும்பாத
அழுத்தக் காரியும் கூட

அவளை
எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு
வெறுக்கவும் தோணும்..

அவள்
விரும்பும் யாவும்
நான் விரும்ப வேண்டும்
என எப்போதும் விரும்பும்
பிடிவாதக்காரி..

வெட்கப்பட்டு பார்த்ததேயில்லை..

ஒரு இரவின் மத்தியில்
அவள் அழைப்பு
எதிர்முனையில் கண்ணீர்
எப்போதும்போல இன்னொரு நாடகம்
என்பதாய்
தூக்க அயர்ச்சியில் தொடர்பை
துண்டிக்க,
மறுநாள் காலை
துயரமாய் விடிந்தது ....

No comments:

Post a Comment