இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Wednesday, April 13, 2011

உனக்காக நான்...!! (1304 2011)



நீ நினைக்கும் படியெல்லாம்
மாற்றி கொண்டு
உன்னை மட்டுமே நிஜமாக நினைத்து
வந்தேன்....!!!

உறவுகள் மறந்து உன்னை மட்டுமே
உண்மையாய் நினைத்து...
உன் உள்ளங்கை பிடித்து வந்தேன்..!!

பார்க்கும் பார்வையெல்லாம்
உன் உருவமாகவும்..!

கேட்கும் ஒலியெல்லாம்
உன் குரலாகவும்..!!

உன்னை துணையாய் மட்டுமின்றி
நேசத்தையும் முத்திரையிட்டு
வந்த எனக்கு...

நீ கொடுத்த பரிசோ
கவலை என்பதின் அர்த்தமும்..
கண்ணீரின் அர்த்தமும்..


சோகத்தில் உன் தோள் சாயும் போதெல்லாம்
என்னை சோதித்து பார்க்கின்றாய்..?

உன்னை உயிராக நினைத்த
என் உயிரையும் எடுக்க
முயற்சிக்கிறாய்...!!!

No comments:

Post a Comment