இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Sunday, January 9, 2011

இப்படிக்கு உன்....! (0901 2011)


என் பிரிய ராட்சஸி,

உன்னை எப்பவும் நினைச்சிட்டு இருக்கிற நான் எழுதுவது கடிதமே தான்... பல கவிதைகள் நான் எழுதியும் இன்றுவரை 'நல்லா இருக்கு' என்ற ஒரு வார்த்தையுடன் உன் மறுமொழியை நிறுத்திக்கொண்டாய். உன்னை அதிகம் பேச வைக்கவே இந்த கடித முயற்சி...(கடிதத்திற்கு பதில் என்ற ஒன்று எழுதிதானே ஆகவேண்டும்)

"வசந்தத்தை அறிமுக படுத்தினாய் என்றே இதுவரை எண்ணினேன்.....
அந்த வசந்தமே நீ என்பதை உணராமல்...!!"

உன்னை மலர் என்று சொல்லி
நீ வாடுவதை நான் விரும்பவில்லை !
நதி என்று சொல்லி நீ வேறிடம்
செல்வதை நான் விரும்பவில்லை !
நிலவு என்று சொல்லி பலரும்
உன்னை ரசிப்பதை நான் விரும்பவில்லை !
வேறு எதுவாகவும் இல்லாமல்
நீ
எனதாக மட்டுமே....
என்
நிழலாக மட்டுமே இரு !!

என்னை தவிர வேறு யாரையும் நீ விரும்ப கூடாது என்பது என் சுயநலம் தான்....ஆனால் என்னை போல வேறு யாரும் உன்னை இந்த அளவிற்கு விரும்பமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை..... முதல் முறை உன்னை நான் சந்தித்த நொடி எதுவென்று இன்றுவரை எனக்கு புலப்படவில்லை...... உன் அனுமதி பெற்ற பின்பே என் தாயின் கருவறை வந்தேன் என்று சொல்லி சிரித்தாய் ஒருநாள்......மீண்டும் உன் அனுமதி பெற்ற பின்பே கல்லறை சென்று சேர வேண்டும், சொல்லி மகிழ்கிறேன் எனக்குள் இன்று......!

"வாழ்க்கை விநோதமானதுதான்....... உன்னை நான் படிக்கவேண்டும் .....என்று வைத்துவிட்டு, விருப்பம் இல்லாமல் வேறொரு பரீட்சையை எழுத வைக்கிறது....!!"

எனக்கு எல்லாம் தெரியும்
உன்னை பற்றி......
உனக்கு என்னை பிடிக்குமா
என்பதைத் தவிர....?!

உனக்கு என்னைப்பற்றி
ஒன்றும் தெரியாது....
உன்னை நான் விரும்புகிறேன்
என்பதைத் தவிர....!!

என்னவளே....நீ உறங்கும் நேரத்தில் உன் முகம் தேடி அலையும் என்னை என்று புரிந்து கொள்வாய்....? விடியும் நேரம் உறங்க சென்றும் கனவில் வந்து எழுப்புகிறாய்...! உன்னிடம் என்ன பேசலாம் என்று யோசித்தே பகலும் முடிந்து விடுகிறது.

விரைவில் நாம் பிரிந்து விடுவோம் என்று நேற்று கனவில் மரணம் வந்து சொல்லிவிட்டு செல்கிறது.....

சாவதை பற்றி
எனக்கு கவலை இல்லை
சாவு ஒரு முறை !
வாழ்வதை பற்றிதான்
எனக்கு அக்கறை
தினம் தினம்
வாழ்ந்தாகணும்
அதுவும் நீ இல்லாமல் !!

நீ வாழும் பூமிக்கு நான் வருவேன்.....அங்கே காற்றில் கலந்திருக்கும் உன் சுவாசத்தை நான் சுவாசித்து.......என்னை புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.....!

இப்படிக்கு
அழகான பதிலுக்குக்காய் காத்திருக்கும்
உன் பிரிய ...

No comments:

Post a Comment