இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Saturday, October 15, 2011

தாயின்றி வேறில்லை(என் வேரில்லை ) (1510 2011)



தியாகம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தேடி தொலைந்து போன என்னை
மீட்டெடுத்தது அம்மா என்ற மந்திரம்.

சில நேரம் நான் குறும்பு செய்யும்போது
ஏன் பெற்றேன் என்று வார்த்தைக்கு சொல்லிவிட்டு
தள்ளிச் சென்று நீ அழுவதையும் பார்த்திருக்கிறேன்.

நான் பார்க்கும் பழகும் உலகம் என்னால்
நீ அதிஷ்டம் என்பார்கள் ஆனால்
நான் தான் பாக்யசாலி.

உன் தியாகத்திற்கு கைமாறு செய்ய நினைத்து
என் அஸ்தியை உன் பாதம் படும் புற்களுக்கு
உரமாக போட்டாலும் ஈடாகாது தாயே.

No comments:

Post a Comment