இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Sunday, September 19, 2010

சண்டே ஸ்பெஷல்-ஈசி மட்டன் பிரியாணி (19/09/2010)


தேவையானவை :-
  • மட்டன் - 1/2 கிலோ
  • பாஸ்மதி அரிசி - 2 கப்
  • வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • பட்டை - 2
  • லவங்கம் - 4
  • ஏலக்காய் - 2
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி
  • பிரிஞ்சி இலை - 1
  • வெங்காயம் - 1/2 கப்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • இஞ்சி, பூண்டு விழுது - 5 தேக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப
  • பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது - 15
  • தக்காளி - 3
  • புதினா - ஒரு கைபிடி(பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி(பொடியாக நறுக்கியது)
  • கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :-
  • குக்கரில் 4 கப் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள், (இஞ்சி,பூண்டு விழுது), மட்டன் சேர்த்து 15 விசில் விட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.
  • குக்கரில் வெண்ணெய், எண்ணெய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, வெங்காயம், பாதி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்(எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிகவும் முக்கியம்).
  • பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கியப் பிறகு வேக வைத்த மட்டன்(தண்ணீர் இல்லாமல்) சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் சேர்த்து லேசாக வதக்கவும். பின் 4 கப் தண்ணீர் (மட்டன் வேக வைத்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம்) விட்டு உப்பு, காரம் பார்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
  • 15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.
Note:

எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிக மிக முக்கியம்.

No comments:

Post a Comment