இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Monday, September 6, 2010

உணவு நஞ்சாதல் (06/09/2010)


  • வயிற்றோட்டம்,
  • வாந்தி,
  • வயிற்று வலி
போன்ற பிரச்னைகளுடன் அண்மைக் காலங்களில் தினமும் பலர் வருகிறார்கள். சிலர் செமியாப்பாடு என்று சொல்லிவிடுவதுமுண்டு.

பெரும்பாலானவர்கள் பள்ளி செல்லும் பிள்ளைகள். இன்னும் சிலர் வேலை செய்பவர்கள். வெளிநாடுகளிலிருந்து வந்து இங்கு சுற்றுலாச் செல்லும் பலர் இப் பிரச்சைனையில் அகட்டுப்படுக் கொள்வது மிக அதிகம்.
ஒரு சிலரே வீட்டுப் பெண்கள்.
இவர்களில் பலருக்கு காய்ச்சலும் இருப்பதுண்டு.


வயிற்றோட்டம், வயிற்றுளைவு, வயிற்றுக்கடுப்பு, வாந்திபேதி என ஒவ்வொருவரும் வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் இவற்றிற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது உணவு நஞ்சடைதல்தான்.

ஆங்கிலத்தில் Food Poisoning என்பதை நேரடியாகத் தமிழாக்கிய சொல் அது. உண்மையில் உணவில் நஞ்சு எதுவும் கலந்துவிடுவதில்லை.

நோயை ஏற்படுத்தும் கிருமிகளால் உணவு மாசடைவதாகக் கொள்ளலாம். உணவு என்று சொல்லும்போது அது கெட்டியான உணவாக இருக்க வேண்டும் என்பதில்லை. நீராகாரமாகவும் இருக்கலாம்.


மாசடைந்த உணவை உண்டபின் அதிலுள்ள கிருமிகள், உணவுக் குழாயினுள் உள்ள இரைப்பை, சிறுகுடல் பெருங்குடல் ஆகியவற்றின் சுவர்களில் ஒட்டி, பின் அங்கு பல்கிப் பெருகுகின்றன.

இதற்கு ஒரு சில மணிநேரத்திலோ ஒரு சில நாட்களோ எடுக்கலாம்.

எவ்வளவு எண்ணிக்கையான கிருமிகள் உட்புகுந்தன என்பதைப் பொறுத்தது நோயின் தன்மை. வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று முறுக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

அவை சாதாரணமாகவோ அன்றி கடுமையாக நீரிழப்பு நிலைஏற்படும் அளவிற்கு கடுமையாகவோ இருக்கலாம்.

இந்த நோய் திடீரென அதிகரித்தமைக்கு
  • சில காலத்திற்கு முன் பெய்த கடுமையான மழையும் அதன் காரணமாக அசுத்தமான நீரும் காரணமாக இருக்கலாம்.
  • ஆயினும் இப்பொழுது பலரும் வீட்டுச் சமையலைக் கைவிட்டு கடை உணவுகளை அதிகம் நாடுவது காரணம் என்பதை பல நோயாளிகள் உணவு முறைகளைப் பற்றிக் கேட்டறிந்ததில் புரிந்தது.
ஹோட்டல் உணவு

சாதாரண வீதியோரக் கடைகள் முதல் நல்ல தரமானது என நாம் கருதும் உணவுச் சாலைகளில் சாப்பிட்டவர்கள் வரை எல்லோருக்கும் இப்பிரச்சனை ஏற்பட்டிருந்தது.

சோப் போட்டுச் சுத்தம் செய்யாத கரங்களினால் உணவு தயாரிப்பதும் பரிமாறுவதுமே முக்கிய காரணமாகும்.


அசுத்த நீரில் நீராடும் இலையான்களும் கரப்பத்தான் பூச்சிகளும் நிறைந்த சுகாதாரக் கேடான சமையலறை,
சிந்தும் மூக்கை சட்டையில் துடைத்துவிட்டு உணவு பரிமாறும் சிப்பந்திகள்.

இவைகளை நீங்களும் கண்டிருப்பீர்களே?

தயாரித்த உணவுகளை
  • ஈ மொய்க்குமாறு திறந்து வைப்பதும்,
  • அசுத்தமான கைகளினால் அளைவதும்,
  • பழைய உணவுகளை சற்று சூடுகாட்டிவிட்டு எமது தலையில் கட்டுவதும் பல உணவகங்களில் சர்வ சாதாரணம்.
நல்ல உணவகங்களும் இல்லாமல் இல்லை.
விருந்து நிகழ்வுகள்.

திருமணம், பிறந்தநாள், அந்தியட்டி போன்ற பல நிகழ்வு விருந்துகளில் உண்டவர்களும் இப்பிரச்சனைக்கு ஆளாவதுண்டு. கோவில் அன்னதானம், பிரசாதம் ஆகியவையும் பாதுகாப்பானவை என்று சொல்ல முடியாது.

உணவு தயாரிப்பதில் ஏதாவது பிசகு நடந்திருக்கலாம். ஆனால் உணவு பரிமாறலில் பல கைகள் ஈடுபடுவதால் யாராவது ஒருவர் சுகாதார முறைகளில் கவலையீனமாக இருந்தாலும் பலரும் பாதிக்கப்படுவார்கள்.

வீட்டு உணவு

வீட்டு உணவும் சில வேளைகளில் ஆபத்தைக் கொண்டு வருகிறது. முக்கியமாக மண்ணிலும் மண்ணை ஒட்டி பகுதியிலிருந்து வரும் கிழங்கு, கரட்; கீரை, வல்லாரை போன்றவற்றை சமைக்காமல் பச்சையாக சலட் போன்று உண்டால் கிருமி தொற்றலாம்.

அவற்றை ஓடும் குழாய் நீரிலும் பின் உப்புத் தண்ணீரிலும் கழுவுவது அவசியம். வேகவைத்து உண்பது அதனிலும் சிறந்தது.

சமைத்த உணவைச் சேமித்தல்

சுகாதாரமாகச் சமைத்த போதும் வீட்டில் இந்நோய் ஏற்படுவதற்கு காரணம் பாதுகாப்பற்ற சேமிப்பு முறை எனலாம்.

சமைத்த உணவுகளைத் திறந்து வைப்பதும்,
அசுத்தமான கரண்டிகள் மற்றும் கோப்பைகளை உபயோகிப்பதும் காரணமாகும்.

ஒரு வேளைக்கு எனச் சமைத்த உணவை அடுத்த நேரத்திற்கும் உபயோகிக்க வேண்டுமாயின் சமைத்த உடனேயே அடுத்த நேரத்திற்கானதை வேறாக எடுத்து வைத்துவிடுங்கள்.

பாவித்த உணவின் மீதியை அடுத்த வேளைக்கும் உபயோகிக்க நேர்ந்தால் மீண்டும் சமைப்பது போல நன்கு கொதிக்க வைத்தே உண்ண வேண்டும். அவ்வாறு செய்யும் போது கிருமிகள் யாவும் அழிந்துவிடும்.

மாறாக வாய் இதத்திற்கு ஏற்ப சிறிதளவு சூடு காட்டினால் அதிலுள்ள கிருமிகள் பெருகி நோயை ஏற்படுத்தலாம்.


இவை பிரிஜ்சில் வைக்கும் உணவுக்கும் பொருந்தும். குளிருட்டும்போது உணவில் உள்ள கிருமிகள் அழிவதில்லை. அவ்வாறே உறைநிலையில் இருக்கும்.

வெளியே எடுத்ததும் அல்லது சிறிது சூடு காட்டியதும் அவை பெருகி நோயை ஏற்படுத்தலாம்.

இதைத் தடுக்க முன்னர் கூறியது போல சமைத்த உடனேயே அடுத்த வேளைக்கான உணவை வேறாக எடுத்துச் சேமிக்க வெண்டும். இல்லையேல் மீண்டும் கொதிக்க வைத்த உபயோகிக்க வேண்டும்.

No comments:

Post a Comment