இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Tuesday, March 8, 2011

நீ மட்டும்...(0803 2011)




காலை குளிர் நிலா பிரிந்திடலாம்
மாலை வெண்சூரியன் மறைந்திடலாம்
நம் ஆன்ம ஜீவன் கூட கரைந்திடலாம்
என் நிழலுக்கு துணையாய்
என்னோடு நீ மட்டும் என்றென்றும்....!


மெழுகுவர்த்தியாய் நானிருக்க...
தீக்குச்சியாய் தேடி வந்தாய்...!
உருகிக் கொண்டிருக்கிறேன்
உன் கரிசனத்தால்....!!
பாசம் காட்டி கொள்பவள் நீ மட்டும் தான்!!!


மாலை நேர பூவாய்
மலர்ந்தாய் என்
மனதில்...!
பிரிகிறேன் என்றவுடன்
மீண்டும் மலர்ந்தாய்
ஆழமாக...!!!!
வாடாமல் பூத்து
மலர்கிறாய்
மனதில்....
தினம்..தினம்...!!!


குட்டிகுட்டி சண்டையிடும்
ராட்சஷியும் நீயே!
நித்தம் கொஞ்சும்
குழந்தையும் நீயே!
அன்பை வாரிதருவதில்
அன்னையும் நீயே!
மொத்தத்தில் என் அகத்தில்....
உனக்கு நிகர் நீயே...!


தனிமை
என்னையும் காதலிக்கிறது??
நீ தனிமையை
நேசிப்பதால்...

சூரியனை சுற்றும்
கோள்கள் போலே
என்னை சுற்றும் உன் நினைவுகளுக்கும்
என்றும் குறைவு இல்லை என் தோழியே !!


கரம் நீட்டுகிறேன்
வா என்னோடு...
வாழ்க்கை இருக்கும்
வரை கைகோர்த்து நடக்கலாம்
நட்போடு !!!

No comments:

Post a Comment