இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Friday, March 25, 2011

"காத்திருக்கிறேன்..." (2503 2011)


கனவென்றால் கண் விழிக்க மறையும்
உணர்வென்றால் உறங்கும் போது மறையும்
நினைவென்றால் மறக்கும் போது மறையும்
உயிரென்றால் உடல் பிரிய மறையும்

காதலே நீ எப்போது மறைவாய் ...?

இருக்கும் வரை நீ இருக்கிறாய்
இறந்த பின்னும் இருக்கிறாய்
நீ மட்டும்...!

நீ அவள் வருகைக்கு முன் வந்தாய்
நீ வந்தபின் அவள் வந்தாள்
நீ இருக்கும்போதே அவள் இருந்தால்
நீ இருக்கிறாய்...! அவள் இல்லை..?

அவளிடம் சொல்..
அல்லது
அவளிடம் செல்.

இருவரும் இல்லாத வாழ்வு
நரகம் என்று...

என்ன நினைக்கிறாள் அவள்..?
என்னை தொலைத்து
தன்னையும் தொலைத்து
எதைத் தேடுகிறாள்..?

போகாத ஊருக்கு வழி எதற்கு..?
பொய்யாக ஒரு நடிப்பெதற்கு..?
செய்யாத சிலைக்கு விலை எதற்கு..?
பிறக்காத பிள்ளைக்கு பெயர் எதற்கு..?

இன்னும் இனிக்கிறது அவள் குரல்...
மனதில் ரீங்காரமாய்...
இன்னும் இருக்கிறது அவள் நினைவு
மனதில் பசுமையாய்...
இன்னும் வலிக்கிறது அவள் காதல்
உயிரில் உறைபனியாய்...

அவள் பாத்திரம் அறியாமல் நடிக்கிறாள்.
அவள் பாத்திரம் புரிந்ததால் துடிக்கிறேன்.
நடக்கும் நாடகத்தில்...
நான் நடிகனா..? இரசிகனா..?
நானறியேன்.

விடியும் வரை பொறுத்திருந்தால்
முடிவு தெரியுமென்றால்..?
காத்திருக்கலாம்...
இந்த நாடகம்
வாழ்க்கை...!?
முடியும் வரை...
காத்திருக்க சொல்கிறது.
..............................
..............................
..............................

காத்திருக்கிறேன்...

No comments:

Post a Comment