இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Friday, August 27, 2010

உன் மௌனம்..! (27/08/2010)


உன்னை நெருங்க நினைத்தேன்...
நீ விலகியே நின்றாய்...
விரும்பும் இதயம் விலகி நின்றால்
வெடித்து சிதறுகிறதே உள்மனம்..!
உன் மௌனத்தின்
இடைவெளி நீண்டதால்..
என் மனதிற்குள்
ஆயிரம் சலனங்கள்..!
ஓராயிரம் வார்த்தைகள்
சொல்ல நினைத்தும்
உன் மௌனத்தால்
என்னை ஊமையாக்கினாய்..!
நீ பேசினால்
சொர்க்க சுகம் என்றால்..
பேசாமல் இருந்தால்
நரக வேதனை அன்றோ?

உன் மௌனம்
கலைக்க வழியின்றி..
உள்ளன்பை உன்னிடமே..
உளறி கொட்டினேன்..!

அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...??

No comments:

Post a Comment